சிசு
கருவறையில் சிறை பட்ட
காலம் தொட்டு...
கண்ணிமைகள் திறக்க முடியாது...!!
மாதங்கள் பல கஷ்ட பட்டு
கருவறை திறக்கும் முன்...
முட்டி மோதி..
உலகம் பார்க்க
பிறக்கும்போதே போராட்டம்...!!! உன்
பக்கத்தில் கிடத்தியவுடன் -
முதலாய் என்னை தொட்டு பார்த்தாய்!!
முழுதாய் பிறந்திருக்கிறேனா என்று??!
உன் ஸ்பரிசம் பட்டவுடன்
என்னுடல் சிலிர்த்தது- உனக்கும் எனக்குமான
உறவு அங்கே ஜனித்தது -
என் கை கால்கள் அசைத்தவுடன் தான்
உன் மனதில் ஒரு நிம்மதி இருந்திருக்கும்!!!
என்னை பற்றிய கனவு உனக்கு அங்கே பிறந்திருக்கும் ..!!
என் அழுகை கேட்ட பிறகு - உனக்கு
என் குரல் வளம் தெரிந்தது...!!!
உன் கண்ணில் ஆனந்த கண்ணீர் -
உஷ்ணமாய் என் மீது விழுந்தது -
நீ ஆசைபட்டாய் ...அடைந்து விட்டாய்..!!
என்னை முழுமதியாய் பெற்றதற்கு -
என் முதற்கண் வணக்கம் உனக்கு...!!!
பிறவி எடுப்பது பெரிதல்ல....!!எடுத்த
பிறவிக்கு ஊறு இல்லாது
என்னை பெற்ற பலனை நீ
பெருமை பேச வேண்டும்!!
அதற்கு தானம்மா நான் இவ்வளவு படுகிறேன்...!!
ஆண்டுகள் ஆனாலும்
அனுபவிக்காது நீ போக மாட்டாய்!!!
அதுவரை கொஞ்சம் பொறு தாயே!!!
நீயின்றி என் வாழ்வு ஏது ???
