Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

ஹைக்கூ

0 ரசித்தவர்கள்



ஹைக்கூ


பனித்துளிகள் காற்றோடு
பூக்களின் மீது
சரசமாட  -
சந்திர ஒளியில்
ஒளியும் -ஒலியும

உன்னை தேடி தேடி
காலணி கூட
பழையதாகி போனது  - ஆனால்
உன்னை பற்றிய நினைவு மட்டும்
புதிதாய் - இன்று பழகியதை போல்.... 

உலகம் அறிந்த அழகி -  நீ
உன் நிழல் தொடும் அருகதை அற்ற
அசிங்கம் நான்
ஆனாலும் நமக்குள் நடந்த
வேதியல் மாற்றம் தான் காதலா?

நிலவில் கால் வைத்த
ஆர்ம்ஸ் ஸ்ட்ரோங்
நிச்சயம் உணர்ந்து இருப்பான்
ஒரு பெண்ணை ஸ்பரிசித்த உணர்வில்
நிலவு ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் !!!

எத்தனையோ நிழல் உருவங்கள்
என் வீட்டு மாடியில்
உன்னை மட்டும் கண்டுபிடித்தேன்
எப்படி என்று கேட்டாய் ??
உன்னை மட்டும் அல்ல - உன்
நிழலையும் சேர்த்து தான்
பதித்திருக்கிறேன் என் விழியில் !!!

உள் வாங்கி வெளி விடும்
மூச்சை கூட கொஞ்சம்
பிடித்து வைக்கிறேன்
உன் வாசம் வரும்போது ,,,!


என்னை பித்தனாகி
விட்டதாய் பெருமைகொண்டாய்
பித்தனாய் இருந்த நான்
புத்தனாய் மாறியதை
அறியாமல் ...!

அடிக்கடி நகம் கடிக்கிறாய்
எங்கள் வீட்டில் என்னை
திட்டுகிறார்கள் - உபயம்
உன்னால்  தானடி  ?

கனலாய் கக்கிய
உன்பார்வை  - என் மீது
அனலாய் மோதியதில்
சென்னை வெயில்
எனக்கு குளிரடித்தது

மோகத்தை மறைக்காதே
உன் முகம் காட்டி
"கண்கள் "
என்னிடம் கெஞ்சுகிறது
 

ஹைக்கூ

3 ரசித்தவர்கள்








                                                                   ஹைக்கூ 





என்னுடைய கற்பனை எல்லாம்
உன்னிடம் இருந்தான் பெற்றது!!!
நீ சொல்லும் ஒரு வார்த்தைக்கு
இவை எல்லாம் ஈடாகி போகும்!!!

அனுப்பும் வார்த்தை மாலைகள்
உனக்கு அர்ப்பணம்!!
படிக்கிறாய் என்றே அனுப்புகிறேன்
கட்டும் போது உன் பெயர் சொல்லி
கட்டுகிறேன்
உன்னை நீ அதில் காணலாம்!!


மின்னலுக்கும் உனக்கும் - உள்ள
ஒரே ஒற்றுமை எப்போதோ
ஒரு முறை தான்
வந்து நொடியில்
செல்கிறது!!!

உன்னிடம் பேச
வார்த்தை தேடுகிறேன்!!!அட!!
வார்த்தை கூட அழகாய் !!!

உன்னிடம் உள்ள ஏதாவது
ஊனமாக இருந்தால் என்னிடம் கொடு...!
சரி செய்து கொடுக்கிறேன்
மனமாக இருந்தால் கூட...!!!


என்னிடம் உள்ள எல்லாத்தையும்
எடுத்துகொள்
இழப்பதற்கு என்று எதுவம் இல்லாது
எடுத்துகொள் !!!
மீண்டு வருவேன் பீனிக்ஸ் பறவையாக
நம்பிக்கை இருக்கும் வரை!!


கண்களில் உள்ள மிருட்சி
மானுக்கு மட்டு மல்ல!!!
மாதர்க்கும் தான்!!!



















விழியில் தேக்கி வைத்திருக்கும் - கணைகளை
வீணடிக்காது என் மீது தொடு!!!
கணைகள் மலர்களாய்
மாறும் அதிசயம்
இங்கு மட்டுமே!!!