வழி தவறிய
செம்மறி ஆடு..
கசாப்பு கடையில்
அலங்கார பொருளாய்
அதன் தலை....!!!
வகை வகையாய் மீன்கள்
வரிசையாய் ....
விற்றால் தான்
விறகு எரியும்
மீன்காரி வீட்டில் - பசி
ஏக்கத்துடன்
அவளின் கைக்குழந்தை
பாலுக்கு அழுகிறது...
உன்னிடம் உள்ளதை
கொடுத்துவிட்டு
ஊமையாய் அழுகிறேன்
இதயம் தொலைந்துபோன
துக்கத்தில் ....!!
இன்று
நினைவு நாள்
புதைந்துபோன
காதலை
புதுப்பிக்க ஒரு
நாள் தாருங்கள் !!
மீண்டு உயிர் வாழ?
சொல்லி கொள்ளாமல்
சென்றது அவள் - ஆனாலும்
இன்றும் அழுகிறது
அவளை பற்றிய
என் நினைவு மட்டுமே!!!
எனக்கு தெரியும்
அவள் என்னை
காதலித்ததை விட
என்னுடைய
பரிசை மட்டுமே!!!
என்னுடைய கவிதையை
ரசித்து பேசினாள்
என்னுடைய காதலை
நிராகரித்தாள் - இன்றும்
ரசிக்கிறாள் ....!!!
எழுதுகோல்
ஏட்டை காதலித்தால்
கவிதை குழந்தை
பிறந்தது...!!!
அப்படி என்ன இருக்கிறது
காதலில் ?
காதலித்து தோற்று போன
தந்தை கேட்டார்?
காதல் ஒருமுறை தான்...
அங்கீகரிக்க
பட்டால்!!
சத்தம் இல்லாமல்
இதயத்தோடு இதயம்
சேரும் விந்தை
காதலில் மட்டுமே !!!
இருமனம் சேர்ந்தால்
திருமணம் -
இன்றும் எனக்கு
தனியாவர்த்தனம் தான் !!
பாவூர் ராஜா கவிதைகள்



