போலி முகமூடி
போலி என்று சொல்லுபோதே - உங்கள்
முகம் சுளிக்கிறதே -
தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை
தன் பிள்ளை என உரிமை கொண்டாடும்
தன் மானம் இலா கயவர் கூட்டம் - யாரோ
பெற்ற பிள்ளையை திருடி செல்லும்
மானம் இல்லா வர்க்கம் -
சமூகத்தில் நடந்தேறும் அவலம்-
திருட்டு திரை குதிரைகளை தான் -
மனம் வெம்பி கூறுகிறேன் -
பலமாதம் காத்திருந்து -
இரவு பகல் கண் விழித்து
ஊண் உறக்கம் பல மறந்து
உயிரையும் துச்சமென
ஊசலில் ஆட விட்டு -
வெண் திரையில் நாம் காண
வெந்து மடியும் கலைஞன் -
பிறன் மனை நோக்குவது - எப்படி பழியோ
அது போல் தான் இதுவும் -
தான் பெற்ற பிள்ளையை
தானே கொஞ்ச முடியாத தாய் உள்ளம்!!
மனசாட்சி உள்ள எவரும் இதை
அங்கீகாரம் செய்யாது இருந்தாலே
இதன் இறுமாப்பு இல்லாது போகும்
மூடிய கையில் என்ன உள்ளது என்று தான்
எவரும் நினைப்பர் - இப்படி
மூடி வைத்த ரகசியத்தை திறந்து
வைத்த கள்ளன் தன் தாயையும் கூட
விற்று பிழைப்பான் போலும்-
பிறர் உழைப்பை உறிஞ்சி வாழும்
அட்டையை அண்ட விடாதீர்

