புகைப்படம்

2 ரசித்தவர்கள்






புகைப்படம்
உள்ளத்தில் உள்ளதை !!
உள்ளபடி காட்டும் மாய கண்ணாடி!!!
மனதுள்  இருப்பதை மறைக்காமல் காட்டும்!!
ஒளிவு மறைவு இல்லாது ஒப்பிக்கும் ...!!!
சிரித்தாலும் சரி ! சிந்தித்தாலும் சரி!! தன் வேலையை 
செவ்வன செய்யும் !! 
வெட்கத்தையும் வெகுளியையும் 
வெளிச்சம் போட்டு காட்டும்...!!
வயதையும் வயோதிகதையும் 
ஒப்பனை செய்து மறைத்தாலும் 
சுருக்கங்கள் சுத்தமாய் காட்டி கொடுக்கும் !!
கைதேர்ந்த கயவனையும் 
காட்டி கொடுக்கும் 
ஆள் காட்டி கருவிகள் 
ஆங்காங்கு இருப்பதை 
அறிய முடியாது அனைவராலும்...!!
எப்போதோ எடுத்த புகைப்படம் 
நம்மை நிழலாய் வருத்தும் ...!
கடந்த கால நிகழ வாழ்வின் 
நிழல் உருவங்கள் 
நிழல்படங்கள் தான்!!! 
மகிழ்வும் துயரும் தொடர்ந்து வரும் 
மாய பிம்பங்கள்!!!
நிஜங்களை நிழலாக்கி 
நினைவு ஓட்டத்தை 
தொடர் ஓட்டமாய் 
ஓட செய்யும் 
நிழல் !!!
மொத்தத்தில் நம்மை நாமே 
அதிசயமாய் பார்க்கும் 
அற்புதம் புகைப்படம் மட்டுமே!!!!
வருடங்கள் கழிந்தாலும் நம்முள் 
வசந்தத்தை வீசும் 
கால பெட்டகம் 
புகைப்படம் ஒன்றுதான்!!!

 



சொர்க்க பாதை

5 ரசித்தவர்கள்


சொர்க்க பாதை 

சொர்கத்துக்கு போறதுக்கு
பயண சீட்டு எடுத்தேன்..
பாதி வழி போன பின்னே
நடுவழியில் இறங்கிவிட்டேன்...
வழி தெரிஞ்சா சொல்லுங்க ...
மாத்து துணி கூட எடுத்துக்கல...
எல்லாம் இலவசம்னு சொன்னாக ...
ICU வில் இருந்த
அனந்த ராமன் சொன்னான்...!!!
அரை தூக்கத்தில் ...!!


குறிஞ்சி பூ ..

2 ரசித்தவர்கள்


குறிஞ்சி பூ ..
ஆண்டுகள் தவமிருந்து
ஆர்வமாய் பூத்த குறிஞ்சி பூ
மாலை வரை தான் உன் உயிர் துடிப்பு!!
வண்டுகள் ரீங்காரமாய் பூவின்
காதில் சொன்னது...!!!
பூவும் சிரித்துகொன்டே சொன்னது....!!
எனக்காக காதிருப்போர்ர் ஏராளம் ....!!
அதில் நீயும் தானே அடக்கம்???

சவலை பிள்ளை

0 ரசித்தவர்கள்


சவலை பிள்ளை...

என்னை எடுத்து செல்ல எவரும் இல்லை !!
சவலையாய் பிறந்ததை தவிர....!!!
தவறேதும் செய்யவில்லை...!!
நீயாவது எடுத்து செல்லேன்...
காலனிடம் சொன்னது...

போலி முகமூடி

4 ரசித்தவர்கள்


போலி முகமூடி
போலி என்று சொல்லுபோதே - உங்கள் 
முகம் சுளிக்கிறதே - 
தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை 
தன் பிள்ளை என உரிமை கொண்டாடும் 
தன் மானம் இலா கயவர் கூட்டம் - யாரோ 
பெற்ற பிள்ளையை திருடி செல்லும் 
மானம் இல்லா வர்க்கம் -
சமூகத்தில் நடந்தேறும் அவலம்- 
திருட்டு திரை குதிரைகளை தான் -
மனம் வெம்பி கூறுகிறேன் -
பலமாதம் காத்திருந்து - 
இரவு பகல் கண் விழித்து 
ஊண் உறக்கம் பல மறந்து 
உயிரையும் துச்சமென 
ஊசலில் ஆட விட்டு -
வெண் திரையில் நாம் காண
வெந்து மடியும் கலைஞன் -
பிறன் மனை நோக்குவது  - எப்படி பழியோ 
அது போல் தான் இதுவும் -
தான் பெற்ற பிள்ளையை 
தானே கொஞ்ச முடியாத தாய் உள்ளம்!!
மனசாட்சி உள்ள எவரும் இதை 
அங்கீகாரம் செய்யாது இருந்தாலே 
இதன் இறுமாப்பு இல்லாது போகும்
மூடிய கையில் என்ன உள்ளது என்று தான் 
எவரும் நினைப்பர் - இப்படி 
மூடி வைத்த ரகசியத்தை திறந்து 
வைத்த கள்ளன் தன் தாயையும் கூட
விற்று பிழைப்பான் போலும்- 
பிறர் உழைப்பை உறிஞ்சி வாழும் 
அட்டையை அண்ட விடாதீர் 
அன்பு நெஞ்சங்களே !!



அருவி

1 ரசித்தவர்கள்


அருவி 

வானத்தில் இருந்து  பிறந்ததா?? - இல்லை
வனத்தில் இருந்து வந்ததா?? -
கல்லுக்குள் ஈரம் உண்டு என்றால் -
அது அருவியாகத்தான் இருக்கும் -
நதி மூலம் ரிஷி மூலம் அறிய முடியா...?
அருவியும் அது போல் தான்...~~~~~~
வானத்தில் இருந்து தண்ணீரை கொட்டியது போல்...!!
பாறைகளை குளிப்பாட்டி -
பளீர் என்று சிரிப்புடன் -
நம்மை நனைக்கையில் -
உள்ளுக்குளே ஒரு உவகை தானே??
அருவியை எதனோடும் ஒப்பிட முடியாது....!
ஆண்பால் பெண்பால் இதற்கு கிடையாது-
கவியின் கற்பனை பொறுத்து வித்யாசபடும்-
ஓங்காரமாய்  இரைச்சல் போடும் போதும் சரி -
நெளி நெளியாய் பாம்பாய்
படர்ந்து வரும்போதும் சரி...!!
கவனித்து பாருங்கள் - நம்மிடம்
ரகசியமாய் ஏதோ சொல்லத்தான் வரும் -
நாம் அழகை மட்டுமே ஆராதிக்கிறோம் -
அதனுடைய பேச்சுகளை கவனிப்பதில்லை -
அள்ள அள்ள குறையாதது அட்சய பாத்திரம் - மட்டுமல்ல
அருவியில் ஆனந்தமாய் நீராடுவதும்தான்-
தண்ணீருக்கு நிறம் உண்டா? - ஆனால்
அருவிக்கு நிறம் உண்டு -
மேலிருந்து விழுகையில் -
கீழே சென்று  வீழ்கையில்
பளிங்கு போல் நிறம் காட்டும்-
குட்டையை போல கலங்காது -
பேதம் பார்க்காது -
எளியவன் பெரியவன் எவனாயினும்
அதற்கு முன் சமன் தான்-
சுத்தம் என்பதை பிறப்பாய்
சுவீகரித்து வந்த
வானத்து தேவதையோ -
வன தேவதையோ -
நம் மனதில் மகிழ்ச்சி  எனும்
ஒளி வீசும் தேவதை -
நமக்குள் இருக்கும் உள்ளத்து அழுக்குகளை
நம்மிடம் உறவாடி களையும்
நீராடி தான் பாருங்களேன்!!!
மாற்றம் தெரியும்...!!!


5 ரசித்தவர்கள்

ஆகாயம் நிலத்தில் வீழ்ந்தது -
அதுவே கடலாய் ஆனது....!
கடலை சுற்றி பாதுகாவலாய் 
கரைகள் - கடற்கரைகள் 
அந்தி சாயும் பொழுதிலோ 
அதிகாலை பொழுதிலோ 
சுத்தமாக சுவாசிக்க வாருங்களேன் - 
சுனாமி வரும் என்ற பயம் இருந்தால் 
சொல்லிவிட்டு வாருங்கள் - 
ஈர காற்று மிதமாய் வீச 
காற்றில் ஆடை படபடக்க 
அழுத்தமாய் கால் பதியுங்கள் -
நடையும் கூட சுகமாய் தெரியும்-
காலாற நடப்பது கடற்கரையில் 
பிரியமாய் நடக்க கூட 
பிடித்தமானவர்கள் இருந்தால் 
இன்னும் சுகம் தான்...!!
மாலை பொழுதில் அலையோடு 
விளையாடிய அனுபவம் உண்டா??
மனதில் உள்ள பாரமெல்லாம் 
மறந்து போகும் அதிசயம்...!!
வடுக்களாய் இருக்கும் 
வலிகள் கூட கடுகாய் போகும்..!
கடல் அலைகள் எப்படியோ -
நம் மன அலைகளும் தான்..!

 
 
 

புகை

1 ரசித்தவர்கள்


புகை 

கரிய நிறத்தில் கண நேரம் வந்து போகும்
காலனின் தோழன் ...!!!
எப்போது வந்தாலும்
தன்னை சுற்றோரை  சற்றே
தள்ளாட செய்யும் -
புகை நமக்கு பகை...!!
புகையிலை அல்லாது
பிற புகையும் தான்!!!
பிறக்கும் போதே
இறப்பை  சேர்த்தே
பிரசவிக்கும் !!!
கொடிது பாடிய
அவ்வை இருந்தால் - இதையும்
அறிந்தே சொல்லி இருப்பாள் !!!
கொடிது கொடிது  புகை கொடிது-
அதனினும் கொடிது அடுத்தவர் - நம்மீது
அள்ளி தூவும் புகை!!
வாகன புகையாய் இருந்தாலும்
வாயில் ஊதும் புகையை இருந்தாலும்
கேடு என்பதை  கேட்டு வாங்கி
கெட்டு செல்லும் மனிதா..!!
சற்றே கொஞ்சம்
உற்று கவனி
உனக்கே புரியும்
உணர்ந்து கொள்...
புகை என்றும் பகை தான்!!


மரங்கள்

1 ரசித்தவர்கள்


மரங்கள் 
சுட்டெரிக்கும் சூரியன் கூட ,,,!!
சற்றே இளைப்பாற  இடம் தேடும் நிழல் ...!!
தனக்குள் வெப்பத்தை வாங்கி....
தணிவான நிழலை கொடுக்கும்
தன்னகரில்லா தாய்!!
வெயிலின் அருமையை  அந்த சூரியனுக்கே
அறிய வைத்த  அகத்திணை ...!!!
ஓங்கி வளர்ந்து  உயரத்தை தொட்டாலும்...!!
ஓய்வாக யார் வந்தாலும்  இடம் கொடுக்கும்
கற்பக விருட்சம் .....!!!
இடர் என யார் தன்னை வெட்டினாலும்
இனிவோடு தன்னை தாரை வார்க்கும்...!!!
ஏழை பாழைகள் வீட்டில் கஞ்சிக்கு
தன்னை சுவிகாரம் செய்யும் சுள்ளிகள்....!!!
ஆலிலையில் உலகை காத்த  கண்ணனுக்கு ..
ஆசனமாகிய  விந்தை - அந்த
கண்ணனே அறியான்...!!
சரித்திரம் கண்ட அசோகன்
சாலை ஓரத்தில் மரங்களை நட்டான்...!!!
முதிர்ந்து போனாலும்
தன் உடலை கூறாக வெட்டினாலும்
வெட்டிய கைகள் வலிக்கிறதே - என்று
வேதனை படும் ...!!
மரங்களே மனிதன் உன்னை
பலவாறு நிந்தித்தாலும் - அவனை
உளமார நேசிக்கிறாய்...!!!
உனக்கு இருக்கும் இந்த
பாங்கு ஆறறிவு மனிதனுக்கு இல்லாது -
போனது வருந்தல் தான்!!
உன்னை வளர்க்கும் பேறு கிடைத்தால்
போற்றி வளர்க்க
உவகையோடு உள்ளேன்...!!!



வளங்கள்

0 ரசித்தவர்கள்
 
வளங்கள்  
இயற்கை அன்னை தந்த 
ஈடு இல்லா சீதனங்கள் 
உரமிட்டு உழுது பயிரிட்டு 
ஊர் போற்றி வளம் பெற்ற 
உலகம் அறிந்த 
இந்தியா...
இன்று 
உழவு நிலங்கள் எல்லாம் 
உவர் நிலங்களாய் !!!!
விவசாயம் மறந்து...
விளை நிலங்கள் 
விலை நிலங்களாய்...!!
பட்டயம் போட்டு 
பயிரிடும் விவசாயியே  விற்கிறான்!!!
பாசமாய் வளர்த்த உழவு 
மாடுகள்  ......?
கசாப்பு கடைக்கு 
கணிச விலைக்கு செல்கிறது!!! 
ஏற்றம் இறைத்த பூமி..!!!
வாய்க்கால் பார்த்த பூமி - இன்று 
வாசகால் நட்டு நிற்கிறது!!!
வளங்களுக்கு எல்லோரும்
வாய்கரிசி போட்டு விட்டு,,,!!
வளங்கள் இல்லை என 
வசைபாடுகிறார் ...!!மனித வள 
மேம்பாட்டு அமைச்சர் ....!!!
தண்ணீரை தாரை வார்த்து தந்துவிட்டு...!!
கண்ணீரை மட்டுமே பார்க்கிறோம்....!!!
கண்ணீர் விட்டா  வளர்த்தோம் என்று 
பாரதி பாடியது இதைத்தானா??