வாழ்க ஜனநாயகம்

0 ரசித்தவர்கள்






குளிரூட்டப்பட்ட வாகனத்தில்
கண்ணாடி தடுப்புகளோடு
தலைவர் வராரு ஒட்டு கேட்டு
கொளுத்தும் வெயிலில்
மாராப்பை குடையாக்கி
மந்தையாய் மக்கள்
வாழ்க ஜனநாயகம்

எங்கள் தலைவன்
ஒட்டு சேகரிக்கிறார்
வேட்பாளர் பேர்
தெரியாமல்
ஆதரவு கேட்டு...

ஐந்து வருடம்
அறுபது மாதம்
நானூத்து இருவது வாரம்
வெற்றிகரமாய் ஆட்சி
ஆயிரம் ஆயிரமாய் கொள்ளை
மக்கள் மட்டும்
இன்றும்
நடை பாதையில் ....

குவியல் குவியலாய்
மக்கள்
சாலையோர
குடித்தனம்
தடையின்றி
நடக்கிறது
பகலில்
ஒரு இரவு...

நாங்களும்
நாய்களும்
ஒன்று தான்
பேதைமை இல்லை
எங்களுக்குள்
எச்சிலை
பொறுக்கும்
பசிக்காக
பரத்தையாய்
இடுப்பிலே
குழந்தை
வாராத தலையோடு
தேர்தல் வந்தால்
பிரியாணி ....
ஏக்கமாய்
குழந்தை ....

2 ரசித்தவர்கள்

ஹோலி

வான வில்லின் வர்ணங்கள்
வண்ண வண்ண பொடிகளாய்
பொழுது பூக்கும் வேளையில்
பூக்களை போல்
கூட்டம் கூட்டமாய்
வண்ணங்களை பூசிக்கொண்டு
வாலிபமும் வயோதிகமும்
வயது மறந்து
விளையாடும்
வண்ண வண்ண விளையாட்டு
வெட்கம் கூச்சம் எல்லாம்
வெட்கத்தோடு
வெளியேறி போகும்
விண்மீன் கூட்டமாய்
வீதியெங்கும்
விடலைகள்
விதி விலக்கில்லாமல்
குழல் ஊதிய கண்ணனாய்
குழல் கொண்டு வர்ண ஜாலத்தை
பன்னீராக தெளித்து
வாழ்த்து பாடும்
வைபோக விழா
காதலின் ஊடலும்
கண பொழுது
பின் தள்ளும்
உவகையோடு
உள்ளம் கொஞ்சும்
உலகம் கொஞ்சும்
உன்னத விளையாட்டு
உணர்வுகள் தெறிக்க
உளமாய் வாழ்த்தினேன்




இன்று எனது நாள்...

0 ரசித்தவர்கள்









இன்று எனது நாள்...



அதிகாலை எழும்போதே
என் மனதில் ஒரு உவகை
சொல்லமுடியாத சந்தோசம்
பிறந்த பிறப்பின்
பலனை உணர்ந்த தருணம்
இன்று மட்டும்
இப்படியே இருந்திட கூடாதா?
எப்போதும் இது போல்
இருந்தால் ஆகாதா ?
என்னை எதிர்நோக்கி -பெரும்
படையே இருந்தது
அனைவரின் முகத்திலும்
சந்தோஷ மின்னல்கள்
முன் பின் தெரியாதோர்
முகம் நோக்கி நலம் விசாரித்து
நினைக்கும் போதே
சீழ்க்கை அடித்தது இதழ்...
எல்லாம் ஆள்காட்டி விரலில்
வைக்கப்படும் ஒரு துளி மை
மந்திரம் தந்திரம்
வசியம் எல்லாம் செய்யும்
வைக்கப்படும் இந்த மை.!!
ஒரு நாள் ராஜா கதை தான் !!
இருந்தாலும் பிடித்து இருக்கிறது!!
நீண்டு நிற்கும் கூட்டத்தில்
இணைப்பாய் என்னையும்
சேர்த்து கொண்டேன்
வாக்கு பதிவிற்கு
சோதனை கூடத்தில்
எலிகளையும் தவளையும்
சோதித்த எனக்கு
என்னுடைய வாக்காளர் அட்டையை
சோதித்த போது ஏனோ அது
எனக்கு நினைவுக்கு வந்து போனது !!
அனைத்தும் முடிந்து
வாக்கு போட்டு வெளிய
வந்த பிறகு
எவரும் என்னை
ஏறடுத்து பார்க்கவில்லை
அவர்களை சொல்லி
குற்றமில்லை
அவர்களும்
அப்படிதானே ....

மரித்து போக ஆசை..

5 ரசித்தவர்கள்


மரித்து போக ஆசை..

பிறக்கும்போதே

பிரம்மன்

இறப்பையும்

இணைத்து விட்டான்

இலவசமாக

மரணம் என்பது

மறுபடியும் ஜனனமே ....

பிறவா வரம் வேண்டி

தவமாய் தவம் இருந்தோர் பலர் ...

மரித்து போக ஆசை



என்னுடைய மரணம்

சிலரை களிப்புற செய்யலாம்

பலரை கலங்க செய்யலாம்

உறவுகளை

பலம் இழக்க செய்யலாம்

ஆனாலும்

மரித்து போக ஆசை

இரவல் வாங்கி வந்த உயிர் தானே

சுயம்புவாய் இருந்து இருந்தால்

சிறப்பாய் இருந்து இருக்கும்

மரணம் என்பது

மற்றுமோர் பயணம் தான்

ஆனாலும் மரித்து போக ஆசை



தொட்டு விட்ட தூரம் தான்

தொடும் நேரம் தான் தெரியாது

ஆனாலும் மரித்து போக ஆசை



இனியொரு பிறப்பெடுத்து

எனகென வாழ ஆசை

இருந்தவரை வாழ்ந்துவிட்டேன்

இயன்றவரை தந்துவிட்டேன்

நிராயுதபாணியாய் நிற்கிறேன்

கடந்து வந்த பாதை

கடக்க போகும் பாதை

எல்லாமே ஒரு வழி பயணம் தான்

எந்த ஊருக்கு சென்றாலும்

இறுதி ஊர்வலம் மயானம் தான் ....

இடையில் கிடைக்கும் எதுவும்

நிதர்சனம் கிடையாது...

நிம்மதியும் கூட தான் ....

ஆனாலும் எனக்கு

மரித்து போக ஆசை...



இழப்புகள் இருக்கலாம்

வலிகள் இருக்கலாம்

வழிகளும் இருக்கலாம்

வஞ்சமும் இருக்கலாம்

நஞ்சும் இருக்கலாம்

அன்பும் இருக்கலாம் -ஆனாலும்

எனக்கு மரித்து போக ஆசை



அல்லல் படும் உயிரை

அனுதினமும்

சுமந்து

ஊனுக்கு ஊன் - என

உள் ஒன்று வைத்து

புறம் ஒன்று பேசும்

பஞ்சமகா பாவிகள்

லோகத்தில் இருந்து

மரித்து போக ஆசை...

கானகம் என் அகம்

1 ரசித்தவர்கள்
 கானகம் என் அகம்

வண்ணமாய் எண்ணங்கள் 
எண்ணங்கள் எழுத்துக்களாய் 
முன் எப்போதுமில்லாமல் 
இப்போது தூரிகை 
பிடித்த ஓவியனாய் 
சொற்களில் 
நளினம் 
என்னை சுற்றி பார்க்கிறேன்
எல்லாமே ஓவியமாய் 
நான் மட்டும் அருவமாய் 
அனைத்தையும் உணர்கிறேன் 
மௌனமாய் இருக்கும் ஓசை 
காற்றின் ஒலியை எனக்கு 
அறிமுகம் செய்கிறது ...
பறவையின் சிறகுகள் 
படபடப்பாய் ....
தட்டுகளை எறிந்தது போல்... 
மரத்தில் இருந்து உதிரும் 
சருகுகளில் எழும் 
சங்கேத மொழி 
உயிர் விட்ட துயரத்தை- என்னுள் 
உணர செய்கிறது .....
தாலாட்டு பாடும் 
தென்றல் 
மரத்திற்கு இதமாய் 
ஓங்கி நின்ற மரத்தின் 
இலைகளின் சலசலப்பு 
வகுப்பறையில் ஆசிரியர் 
இல்லாத சமயம் 
சலசலக்கும் 
பள்ளி சிறார்கள் போல ... 
மரத்தில் ஓட்டை போடும் 
கள்ள மரங்கொத்தி 
எதை திருட வந்தது...? 
யாருமில்லா தேசத்தில் 
யாருக்காய் பாடுகிறது குயில்?
சுவடுகள் இல்லாத 
பாதங்கள் 
மணலில் 
அணில்களின் நாட்டியம் 
கானகம் 
என் அகமாய் மாற
எனக்குள் தோன்றிய 
ஒரு சிறிய கற்பனை 
அதற்கு அணையேது?


கிறுக்கலாய் ......

1 ரசித்தவர்கள்
கிறுக்கலாய் ...... 



சிரிக்க கற்று கொடுத்தாய்
சிந்திக்க கற்று கொடுத்தாய்
சிறகடிக்க கற்று கொடுத்தாய்
சொல்லாமல் சென்றாய்
அழுகை மட்டும்
சொல்லி கொடுக்காமல் .....

நேர் வகிடு
நெற்றியில் சந்தன கீற்று
குங்குமமும் சேர்த்து
காதோரம் ரோஜா பூ
எளிமையான வாயில் புடவை
வேறு எதுவும் தேவையில்லை...
அலங்கார பொருட்கள் இல்லாமல்
அம்மன் வீதி உலா...

பரமன்
பிரம்மன்
நாராயணன்
மூவரும் சேர்ந்து
தரிசிக்க வந்தேன்னவோ
உன்னை தான் ...
சக்தியாய் நீ...

கடவு சொல்
கணினி கேட்டது
இன்றும் ஜெபிக்கிறேன்
உன்பெயரில் தான்
என் நாள் துவக்கம் !!!

சத்தம் உனக்கு பிடிக்காது
சாந்தம் எனக்கு பிடிக்காது
நமக்குள் எப்படி நடந்தது
காதல் யுத்தம் ....

ஒரு முறை சிரித்தால் -
சிநேகம்
மறு முறை சிரித்தால் - அன்பு
மறுபடியும் சிரித்தால்
எப்படி எடுத்துகொள்வது ?
அதையும் நீயே சொல்லிவிடு ...!

ஒவ்வொரு முறையும்
உன்னிடம் பேசும்போது
தொலைபேசியில்
காசுகளை போடும்போது
எண்ணுவதில்லை
உன் சிரிப்பிற்கு
விலை ஏது?

காந்தம்
இரும்பை இழுக்கும்
இயற்கை விதி
உன் விழியால்
நான் இழுக்கப்பட்டேன்
ஒ!! இது தான் காதல் விதியா?

நீ மருத்துவம் படிக்கிறாய் !!
உனக்காகவே புதிது புதிதாய்
வியாதிகளை தேடுகிறேன் !!
எனக்குள் செலுத்தி கொள்ள .....

ஊசி எடுத்து
நீ குத்திய உடன
முகத்தை சுருக்கினாய்
அன்று முழுதும்
எனக்கு வலித்தது...

மனதில் ரணமாய்
உன் எண்ணம்
வெளியில் அனலாய்
வீசியது
இப்போதும் கூட
மருந்திட
வர மாட்டாயா....
ரணத்தில் வழிகிறது
ரத்தம்...

முத்தம் கொடுத்தாய்
இரவுக்கு கூட தெரியாமல்
நிலவு மட்டும்
கண்டு களித்தது
அன்று நடந்த
அற்புதத்தை !!!

எப்போதும் போல்
என்னிடம் சண்டை போடு
இப்போதெல்லாம் - என்
தூக்கம் கூட
கெடுகிறது
சண்டையில்லாமல் ....

ஒருவழியாய்
அனைவரையும்
சமாதான படுத்தினேன்
உன்னிடம் தான் பாக்கி
உன் சம்மதம்
எப்போது தருவாய்?

அடிக்கடி கடிகாரம்
பார்க்கும் பழக்கம்
எனக்கு கிடையாது
உன்னிடம் பழகும் வரை ....

நேரம் தவறாமல் நீ...
நேசம் தவறாமல் நான் ...
விழிகளில் விசாரித்து
மௌனமாய் செல்லும்
நமது காதல்
ஒருவகையில்
ஊமை காதல் தான்....

கடற்கரையில்
கால் தடங்கள்
நடந்தது நீ,,,
மனதில் பதிந்தது
ஓவியமாய் !!!


எங்கோ அடிக்கும் 
மணியின் ஓசை
உன்னை நினைவு படுத்துகிறது
உனக்காய்
கோவிலில் காத்திருந்ததை ....!!

வலியது தாயன்பு

1 ரசித்தவர்கள்
வெற்று காகிதமாய் இருந்த
என் மனதில்
கிறுக்கலாய் சில
வரிகள்
வாரம் தப்பினாலும்
நாட்கள் தப்பினாலும்
நேரங்கள் தப்பினாலும்
நிமிசங்கள் தப்பினாலும்
அவள் நினைவு
தப்பியதில்லை
உறங்கும் பொழுதும்
உறக்கம் வராத போதும்
அவள் சிந்தனை தான்
என்னை ஈன்ற என் தாய்
எவ்வளவு சிரம பட்டிருப்பாள்
நெஞ்சம் கசிகிறது
அவள் கண்ட வலி கண்டு...

இறைவனிடம் கேள்விகள்

0 ரசித்தவர்கள்







இறைவனிடம் கேள்விகள் 

இதுவரை எனக்காக
இறைவனிடம் ஏதும் கேட்டதில்லை
கேட்கவேண்டும் என்று எண்ணவும் இல்லை
ஆனால் என் தமையனை இழக்கும் வரை
இழப்பை பெரிதாய் நினைத்ததும் இல்லை
இருக்கும் போது  அறியாத விஷயம்
இறந்த பிறகு துளிர்கிறது
வெட்டப்பட்ட மரம் துளிர்ப்பது போல
நினைவலைகள் நெஞ்சை அரிக்கும்போது
கண்களில் இருந்து கடலாய் கண்ணீர்
வெளிதேசம் சென்றிந்தால் கூட
கவலை ரேகை தெரியாது
கலக்கமில்லாது காலம் போகும்
திரும்பி வராது
திரிசங்கு சென்று விட்டான்
திருமாலே
நீதான் பொறுப்பு
இங்கிருந்தவரை
வலி பொறுக்கமாட்டன்
அது பசியாகினும் கூட
உன்னிடம் வந்துவிட்டான்
எது பற்றியும் சிந்தை இல்லை
சிரத்தையாய் நீ பார்த்து கொள்வாய்
என் காலம் வரும்போது
வந்தவனை சந்திக்கிறேன்
அதுவரை என்னை
படுத்தி விடாதே..  

வீரம் வந்ததெப்போ?

0 ரசித்தவர்கள்


 வீரம் வந்ததெப்போ?


மலர்ந்து மலராத மொட்டுக்கள் போல்
பதின்பருவம்
வலியது கேட்டு  நெஞ்சு
விம்மும் விடலை போய்
தோள்கள் தினவெடுத்து
மரம் ஏறி கனிகள் பறிக்கும்
தைரியம் யார் சொல்லி வந்தது?
சொன்னதை செய்து கொண்டு
மௌனமாய் இருந்து
இப்போது தீர்மானமாய்
முடியாது என்று
இறுமாப்புடன் சொல்லும்
வீரம் எங்கிருந்து வந்தது ?
முகத்தில் முட்செடிகளாய்
ரோமம் வளர்ந்து
சுவாசம் கூட சீராய் வந்தது
அடிக்கடி பாதரசம் பார்த்து
புதிதாய் முளைத்த
மீசையை ஆசையாய்
நீவி விட சொல்லி கொடுத்ததாரு?
விடை தெரியா கேள்வியோடு
வீதியில் வந்த விமலா 
நெஞ்சோடு அணைத்த புஸ்தகத்தில்
புதிதாக  ஒரு பக்கமாய் கடிதம்
வைக்க  எங்கிருந்து வந்தது
இப்படி ஒரு ஆசை ?
கனவுகளாய் சென்ற
கண்களில்
அவள் விட்டு சென்ற
சுவடுகள் தான்
மிச்சமான எச்சம் !!

0 ரசித்தவர்கள்


ஆளரவம் இல்லா வெளியில்
இருண்ட குகையில்
வெளிச்சம் தேடி
தனியொரு மனிதனாய்
தவிப்புடன் சென்ற
என் மனதில்
எங்கோ ஒரு மூலையில்
கிடைத்த ஒளி வெள்ளம்
மனமுழுதும் மகிழ்ச்சி வெள்ளம்
வெளியே வந்த எனக்கு
இருட்டின் அருமை புரிந்தது
வெயிலின் அருமை போல ....
தேடல் இன்றும் தொடர்கிறது
மனிதம் தேடி.....