நிழல் உருவங்களை
நிலவு ஒளியில் கண்டதுண்டா?
கிளை இல்லா மரம்
கரங்கள் வெட்ட பட்ட
வீரனை போல்
கம்பீரமாய்
விண்வரை வளர்ந்து
காற்றின் கோர பிடியில்
சொந்தங்களை இழந்து
துயரத்தின் முனையில்
இருந்தாலும்
துளிர் விடும்
நம்பிக்கை என்னும்
தாரக மந்திரம்
மரத்திற்கு
தெரியும் போலும் !!!
சிறை பிடித்த வார்த்தைகள்
கவிதையாய் !!!!
சிறை பிடித்த இதயங்கள்
காதலாய்!!!!
சுதந்திரமாய் இருந்தால்
எதுவுமே நிலையாய் இல்லை...
உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் எதுவுமில்லை
ஆனாலும் உன்னிடம் பேச
காரணம் வேண்டுமா என்ன?
காலையில் விழித்தவுடன்
கண்ணாடி பார்க்கிறேன்
என் கண்ணில் எப்போதும்
நீ இருக்கிறாய் என்பதற்காக
உனக்கும் எனக்கும்
என்ன சம்பந்தம் ? -கேட்கிறாய்
உன்னிடம் என்னை
தொலைத்துவிட்டு
நான் படும்
அவஸ்தை தெரியாமல்?
கூடு விட்டு கூடு பாயும்
வித்தை
காதலில் மட்டுமே
காரணம்
அவளுக்காக
இவன் படும் அவஸ்தை
உயிர் இருக்கிறது
எப்படி தெரியும் ?
இதய துடிப்பாய்
நீ இருக்கும்போது !!
மட்டுமே
உலகம் உருண்டை
உலகறிந்த உண்மை
நீ மட்டுமே அழகி
நான் மட்டும் அறிந்த
உண்மை !!!!
ஆலயம் ஆண்டவன்
இருக்கும் இடம்..
அவள் இருக்கும் இடமே
எனக்கு ஆலயம் !!!
என்னை உன் கண்ணால்
தினமும் அடிக்கிறாய்
ஆனாலும் எனக்கு
சுகமாய் தான்
இருக்கிறது...!!
நிறுத்திவிடாதே !!!
மயக்கும் உன் விழிகளை
கொஞ்சம் மூடிகொள்
மருத்துவர் எல்லாம்
உன் வாசலில்
மயக்க மருந்து
மிச்சமாம் !!!
இதயத்தை
பறவையோடு ஒப்பிடாதீர்
எப்போது பறக்கும்
என்று யாராலும்
கணிக்க முடியாது !!!
கொலுசு அணிந்த
உன் கால்கள்
நக பூச்சோடு
உன் கை விரல்கள்
மையிட்ட உன் கண்கள்
இதை எழுதினாலே
கவிதையாய் தெரிகிறது
உண்மைதானே?
பல நிறங்களில் - நீ -
உடை அணிந்தாலும்
உன் வெட்கபுன்னகையில்
அவைகள் நிறங்கள்
அற்று போகின்றன !!!
உன்பெயர் சொல்லி
அழைக்கும்போது
தேனை தடவிய
சுளையாய்
நாவில் இனிக்கிறது !!
எனக்கு மட்டுமே!!!
முதன் முதலில்
உன்பெயரை உச்சரித்தேன்
திரும்பி பார்த்து
புன்னகை பூத்தாய்
இப்போதெல்லாம்
உன்பெயர் தான்
எனக்கு மந்திரமாய் !!!
நேயர் விருப்பமாம்
அவர்களுக்கு தெரியுமா
என்னுடைய விருப்பம்
நீதானென்று ??
உதட்டு பூச்சு
நக பூச்சு
நகை பூச்சு
எல்லாம் சரி
அதென்ன
வெட்கபூச்சு?
யார் சொல்லி கொடுத்தது?
ஹைக்கூ
பனித்துளிகள் காற்றோடு
பூக்களின் மீது
சரசமாட -
சந்திர ஒளியில்
ஒளியும் -ஒலியும
உன்னை தேடி தேடி
காலணி கூட
பழையதாகி போனது - ஆனால்
உன்னை பற்றிய நினைவு மட்டும்
புதிதாய் - இன்று பழகியதை போல்....
உலகம் அறிந்த அழகி - நீ
உன் நிழல் தொடும் அருகதை அற்ற
அசிங்கம் நான்
ஆனாலும் நமக்குள் நடந்த
வேதியல் மாற்றம் தான் காதலா?
நிலவில் கால் வைத்த
ஆர்ம்ஸ் ஸ்ட்ரோங்
நிச்சயம் உணர்ந்து இருப்பான்
ஒரு பெண்ணை ஸ்பரிசித்த உணர்வில்
நிலவு ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் !!!
எத்தனையோ நிழல் உருவங்கள்
என் வீட்டு மாடியில்
உன்னை மட்டும் கண்டுபிடித்தேன்
எப்படி என்று கேட்டாய் ??
உன்னை மட்டும் அல்ல - உன்
நிழலையும் சேர்த்து தான்
பதித்திருக்கிறேன் என் விழியில் !!!
உள் வாங்கி வெளி விடும்
மூச்சை கூட கொஞ்சம்
பிடித்து வைக்கிறேன்
உன் வாசம் வரும்போது ,,,!
என்னை பித்தனாகி
விட்டதாய் பெருமைகொண்டாய்
பித்தனாய் இருந்த நான்
புத்தனாய் மாறியதை
அறியாமல் ...!
அடிக்கடி நகம் கடிக்கிறாய்
எங்கள் வீட்டில் என்னை
திட்டுகிறார்கள் - உபயம்
உன்னால் தானடி ?
கனலாய் கக்கிய
உன்பார்வை - என் மீது
அனலாய் மோதியதில்
சென்னை வெயில்
எனக்கு குளிரடித்தது
மோகத்தை மறைக்காதே
உன் முகம் காட்டி
"கண்கள் "
என்னிடம் கெஞ்சுகிறது
Posted in
ஹைக்கூ
மழை வரும்போதெல்லாம்
குடையை மறந்தாலும்
உன்னை மறப்பதில்லை!!!
தேங்கிய குட்டையாய்
உன் நினைவுகள்...!!!
உன் சிரிப்பை பார்த்து
நாட்கள், மாதங்கள்,
வருடங்கள் ஆனாலும்
உன் வெட்க புன்னகை ஒன்று போதும்
இவை அனைத்தையும் மறந்து போக!!!
உன் பெயரை
சொல்லும் யாரும் -
எனக்கு எதிரி அல்ல
அது உன் எதிரியாக
இருந்தாலும் கூட!!
தனியாய் நடந்தேன்
துணையாய் வந்தாய் -
இப்போதும் நான்
தனியாக தான் இருக்கிறேன்
உன் நினைவுகளோடு
உறவாடிக்கொண்டு
இருப்பதை எல்லாம்
கொடுத்து விட்டேன்
ஆனாலும் எனக்கு
கவலை இல்லை -ஏனெனில்
கேட்டது நீயல்லவா?
குறுந்தகவல் தான்
ஆனால் நீ படிப்பதால்
அது தொடர்கதையானது!!
உன் மேல்
விழுந்த மழை துளி - கூட
சந்தோஷ படுகிறது
உன்னை தொட்டு விட்ட
சந்தோஷத்தில் !!
நீ என்னை பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
மாண்டு பின் உயிர்ந்தேழுகிறேன்
உன்னால் எனக்குள் நடக்கும்
அதிசய விளையாட்டு!!!
நீ செல்லமாய்
சிணுங்கும் போதெல்லாம்
கொலுசு மணிகள்
வாயை மூடி கொண்டன
உன் மீது பொறாமை கொண்டு!!!
உன் மீது கோவம்
கொள்ள ஆசை ?
அப்போதுதான் - நீ என்னை
சமாதான படுத்த
இதழ் பதிப்பாயே?
உன்னிடம் ஏதாவது
பெறவேண்டும் என்று
ஆவலாய் உள்ளது !!
இதழால் அடிப்பாயா?
உன்னை தொட - எனக்கும்
காற்றுக்கும் போட்டி
காற்றிடம் நான் தோற்று போனேன்
ஆனாலும் என் மனதை
முதலில் தொட்டது நீ தான்
என்று தேற்றினாய்!!!
Posted in
அவளோடு உரையாடல்
என்னிடம் சொல்லாமல்
காலன் எடுத்து சென்ற
என்னுயிர் அண்ணனை
தினமும் தேடுகிறேன்
அண்ட வெளியில்
ஆவியாய் இருந்தாலும்
ஆத்மாவாக இருந்தாலும்
ஆதரவாய் இருந்தான்
தோள் சாய ......
அழுதால் துடைக்கும் - கை
அவனாக தான் இருக்கும் ....
என்னிடம் எதை கேட்டாலும்
கொடுத்து இருப்பேன் காலனுக்கு
உயிர் எடுத்த பிறகு
உடலுக்கு என்ன வேலை
அவனை எரித்தேன்
உலாவுகிறேன்
உயிரோடு பிணமாக...
கண்களில் காந்தம்
அவனுக்கு மட்டுமே சொந்தம்..!
அதனால் தான் அதை பிறர்க்கு
அளித்துவிட்டான் உவகையோடு ...!
என்னுடன் பயணித்த காலங்கள்
இனி கிட்டுமா?
அழுவது தெரியாது
சிரித்து மழுப்புகிறேன்
வாழ்க்கை நாடகம் தான்
இப்போது புரிகிறது...
புரிய வைத்துவிட்டு
பறந்து போய்விட்டான்
காற்றோடு...!!!!
வழி தவறிய
செம்மறி ஆடு..
கசாப்பு கடையில்
அலங்கார பொருளாய்
அதன் தலை....!!!
வகை வகையாய் மீன்கள்
வரிசையாய் ....
விற்றால் தான்
விறகு எரியும்
மீன்காரி வீட்டில் - பசி
ஏக்கத்துடன்
அவளின் கைக்குழந்தை
பாலுக்கு அழுகிறது...
உன்னிடம் உள்ளதை
கொடுத்துவிட்டு
ஊமையாய் அழுகிறேன்
இதயம் தொலைந்துபோன
துக்கத்தில் ....!!
இன்று
நினைவு நாள்
புதைந்துபோன
காதலை
புதுப்பிக்க ஒரு
நாள் தாருங்கள் !!
மீண்டு உயிர் வாழ?
சொல்லி கொள்ளாமல்
சென்றது அவள் - ஆனாலும்
இன்றும் அழுகிறது
அவளை பற்றிய
என் நினைவு மட்டுமே!!!
எனக்கு தெரியும்
அவள் என்னை
காதலித்ததை விட
என்னுடைய
பரிசை மட்டுமே!!!
என்னுடைய கவிதையை
ரசித்து பேசினாள்
என்னுடைய காதலை
நிராகரித்தாள் - இன்றும்
ரசிக்கிறாள் ....!!!
எழுதுகோல்
ஏட்டை காதலித்தால்
கவிதை குழந்தை
பிறந்தது...!!!
அப்படி என்ன இருக்கிறது
காதலில் ?
காதலித்து தோற்று போன
தந்தை கேட்டார்?
காதல் ஒருமுறை தான்...
அங்கீகரிக்க
பட்டால்!!
சத்தம் இல்லாமல்
இதயத்தோடு இதயம்
சேரும் விந்தை
காதலில் மட்டுமே !!!
இருமனம் சேர்ந்தால்
திருமணம் -
இன்றும் எனக்கு
தனியாவர்த்தனம் தான் !!
பாவூர் ராஜா கவிதைகள்
Posted in
தவறிய தருணங்கள்
காதல்
திறந்து வைக்கப்பட்ட இதயத்தில்
மூடி வைக்கப்பட்ட ரகசியங்கள்
விழிகளில் உறவாடி
இதழ்களில் விளையாடி
இரவில் மட்டும்
விழித்திருக்கும் செவிகள்
கண்கள் பனித்தாலும்
இமைகள் மூடாது
விடியும் வரை
இருட்டோடு
போட்டி போட்டு
விழித்திருந்து
மொழி பேசிய
மௌன கதைகள்
ஏராளம்..!!!
கோபத்தை கூட
குரலில் காட்ட முடியா
கும்மிருட்டுக்கும் கேட்காது
பேசிய வார்த்தைகள் ...!!
இரவு எங்களுக்கு காவலன்
நிலவு தான் எங்கள்
திண்ணை விளக்கு
நேரம் பார்த்து பேசியதில்லை
நெடிய பயணம் அது
சுவாரசியமாய் இருக்கும்
கணக்கில் அடங்காது
திருமணம் இல்லாமல்
நாங்கள் குழந்தையோடு
கொஞ்சி விளையாடிய
நிகழ்வுகளும் உண்டு
பேர் வைக்க சண்டையும் உண்டு
நினைத்து பார்த்தால்
சிரிப்பாய் இருக்கும்
ஆனால்
காதலில் மட்டுமே
இது சாத்தியம்
கற்பனை திறன்
அதிகரிக்க
காதலித்து பாருங்களேன் ...!!!
நீங்களும் கவி பாடுவீர்கள்
கவி பாடும் அனைவரும்
நிச்சயம் காதலை
உணர்ந்து இருப்பர்!!!
இல்லை என்று சொன்னால்
உண்மை உரைக்கவில்லை
என்று தான் பொருள் ...!
எவரையும் குறிப்பிட்டு
சொல்லவில்லை...!!
என் அனுபவத்தை
உங்களிடம்
பகிர்ந்தேன்..
அவ்வளவே!!!
காதல் ஒரு அனுபவ பாடம்
Posted in
காதல் ஒரு அனுபவ பாடம்
செடியில் இருந்து
விழுந்த மலர்
செடியில் ஒட்டுவதில்லை..
உடைந்துபோன மனங்களும் தான்!!
பொய் பேச தெரியாது
கபடம் அறியாது இருந்தேன் !!!
காதலிக்கும் வரை!!!
இப்போது பொய்
என்னிடம் கற்கிறது!!!
பொய் சொல்ல...???
எனக்கு தெரியாது
எதை வேண்டுமானாலும்
எடுத்து செல்
என் இதயத்தை தவிர!!!
பிடித்தவற்றை பிரியத்துடன்
கொடுத்தல் சுகம்!!!
அழுதால் அழுவேன் ...!!
சிரித்தால் சிரிப்பேன் ...!!
உன்னுடைய நிழல்
பிம்பம் நான் தான்!!
உன் முகத்தை
கண்ணாடியில் பார்ப்பது போல்!!
பூக்கடையில் அளந்து
கொடுக்கிறார்கள் பூக்களை
அவர்களிடம் சொன்னேன் !!
பூக்களை அளக்காதீர்கள்
அழகுக்கு அளவு கிடையாது!!!
சிரத்தையாக
எழுதினேன்
பரீட்சையில் தோல்வி
சிந்தித்து எழுதினேன் -
கவிதை
காதலில் வெற்றி !!!
எப்போதும் சுற்றி வரும்
நீ
இப்போதெல்லாம்
வருவதில்லையே?
நிழலை பார்த்து
நிஜம் கேட்டது ...
குடையை மடக்கும் வரை..
உன்னிடம் சொல்லாமல்
தினமும் கடந்து
செல்கிறேன் ...
ஆனாலும் எனக்கு தெரியும்
நீ என்னை மட்டுமே
பார்க்கிறாய் என்று?!!?
உனக்கு மட்டும் சொல்கிறேன்
உன்னை பேதலிக்க வைக்க
என்னை தவிர
யாரும் இலர்!!
Posted in
haikoo
மயான காட்டில்
மக்கி போகும்
உடலுக்கு
மரியாதை
பிரேதத்தின் மீது மாலை!!!
பிறக்கும்போது
ஒட்டு துணி இல்லாது
வெற்றுடம்பாய்
அழுத உடன் தெரிகிறது
அம்மணம்...!!!
வழி மாறிய பாதை
நிழல் தப்பிய இரவு
மழை தப்பிய பருவம்
எதுவும் நினைவில் - இல்லை
ஒட்டிய வயிறை நினைக்கையில் ...
பிறப்பும் இறப்பும்
பிரபஞ்சம் அறியும்
பிறவாமல் இருக்க
பிறிதொரு வழி உண்டோ?
பிணியும் பசியும்
பின்னிருந்த போழ்து
பேதலித்த மனது!!!
வாசல் வரை வந்து
பிச்சை கேட்ட மனது
பிச்சை போட எத்தனிக்கும்போது
எங்கோ எட்டி பார்க்கிறது
வறட்டு கௌரவம் ..!!
எப்போதும் சிரித்தேன்
என்னை கேலிபொருளாய்
எண்ணி என்னையும்
காட்சி பொருளாக்கி
கடை விரித்து விட்டனர்...!!!
சிறிது சிறிதாக
சேர்த்து வைத்த
சந்தோசம்
ஒரே நொடியில்
காணாமல் போனது
என்னுடைய கிழிந்த
கோவணம்!!!
களவாணிகள்
நிறைந்த ஊர்
சொன்னது ஒரு
களவாணி...!!
நகரத்தின் காவல் அதிகாரி !!!
Posted in
haikoo