ஓசையின் நிசப்தம்

 
 
 ஓசையின் நிசப்தம் 
 
 
 
 
கருவேல காட்டு வழி...
மாலை கவ்வும் வேளை....
மையிருட்டு நேரம்...
மையல் கொண்ட தையல்
மைவிழியாலே...
மனதை பிசைந்தாளே....
போதைக்கு போதையானளே
இருட்டுக்கு கூட
கேட்காமல்
சங்கேதமாய்
வார்த்தைகள் பேசி...
சிக்கி தவிக்கும்
முத்துகளை
சிரிப்பில்
கொணர்ந்தாளே....
நேரம் போனது தெரியாது...
நேசத்தை பகிர்ந்தோமே...
கால சுவடுகள்
பாதம் பதிய
சென்ற இடமெல்லாம்
உன் நினைவு தான்
இத்தனையும் செஞ்ச...
எனை மட்டும்
விட்டு விட்டு
வெளி தேசம் செல்ல தான்...
மனசு ஒப்பு வந்தேப்படி?
வடிவே அழகே
உன்னை பிரிந்தாலும்
சுகமாய் இருந்தால்
அது போதும் எனக்கு
ஏழேழு ஜென்மம் வரை
கூட வரும்....
உன்னை பிரிந்து
உயிர் வாழும்
ஒரு ஜீவன்...
கால கண்ணாடியை
துடைத்து தான்
பார்க்கிறது....

0 Response to "ஓசையின் நிசப்தம்"