2 ரசித்தவர்கள்





என்னிடம் சொல்லாமல்
காலன் எடுத்து சென்ற
என்னுயிர் அண்ணனை
தினமும் தேடுகிறேன்
அண்ட வெளியில்
ஆவியாய் இருந்தாலும்
ஆத்மாவாக இருந்தாலும்
ஆதரவாய் இருந்தான்
தோள் சாய ......
அழுதால் துடைக்கும் - கை
அவனாக தான் இருக்கும் ....
என்னிடம் எதை கேட்டாலும்
கொடுத்து இருப்பேன் காலனுக்கு
உயிர் எடுத்த பிறகு
உடலுக்கு என்ன வேலை
அவனை எரித்தேன்
உலாவுகிறேன்
உயிரோடு பிணமாக...
கண்களில் காந்தம்
அவனுக்கு மட்டுமே சொந்தம்..!
அதனால் தான் அதை பிறர்க்கு
அளித்துவிட்டான் உவகையோடு ...!
என்னுடன் பயணித்த காலங்கள்
இனி கிட்டுமா?
அழுவது தெரியாது
சிரித்து மழுப்புகிறேன்
வாழ்க்கை நாடகம் தான்
இப்போது புரிகிறது...
புரிய வைத்துவிட்டு
பறந்து போய்விட்டான்
காற்றோடு...!!!!