2 ரசித்தவர்கள்

ஹோலி

வான வில்லின் வர்ணங்கள்
வண்ண வண்ண பொடிகளாய்
பொழுது பூக்கும் வேளையில்
பூக்களை போல்
கூட்டம் கூட்டமாய்
வண்ணங்களை பூசிக்கொண்டு
வாலிபமும் வயோதிகமும்
வயது மறந்து
விளையாடும்
வண்ண வண்ண விளையாட்டு
வெட்கம் கூச்சம் எல்லாம்
வெட்கத்தோடு
வெளியேறி போகும்
விண்மீன் கூட்டமாய்
வீதியெங்கும்
விடலைகள்
விதி விலக்கில்லாமல்
குழல் ஊதிய கண்ணனாய்
குழல் கொண்டு வர்ண ஜாலத்தை
பன்னீராக தெளித்து
வாழ்த்து பாடும்
வைபோக விழா
காதலின் ஊடலும்
கண பொழுது
பின் தள்ளும்
உவகையோடு
உள்ளம் கொஞ்சும்
உலகம் கொஞ்சும்
உன்னத விளையாட்டு
உணர்வுகள் தெறிக்க
உளமாய் வாழ்த்தினேன்




இன்று எனது நாள்...

0 ரசித்தவர்கள்









இன்று எனது நாள்...



அதிகாலை எழும்போதே
என் மனதில் ஒரு உவகை
சொல்லமுடியாத சந்தோசம்
பிறந்த பிறப்பின்
பலனை உணர்ந்த தருணம்
இன்று மட்டும்
இப்படியே இருந்திட கூடாதா?
எப்போதும் இது போல்
இருந்தால் ஆகாதா ?
என்னை எதிர்நோக்கி -பெரும்
படையே இருந்தது
அனைவரின் முகத்திலும்
சந்தோஷ மின்னல்கள்
முன் பின் தெரியாதோர்
முகம் நோக்கி நலம் விசாரித்து
நினைக்கும் போதே
சீழ்க்கை அடித்தது இதழ்...
எல்லாம் ஆள்காட்டி விரலில்
வைக்கப்படும் ஒரு துளி மை
மந்திரம் தந்திரம்
வசியம் எல்லாம் செய்யும்
வைக்கப்படும் இந்த மை.!!
ஒரு நாள் ராஜா கதை தான் !!
இருந்தாலும் பிடித்து இருக்கிறது!!
நீண்டு நிற்கும் கூட்டத்தில்
இணைப்பாய் என்னையும்
சேர்த்து கொண்டேன்
வாக்கு பதிவிற்கு
சோதனை கூடத்தில்
எலிகளையும் தவளையும்
சோதித்த எனக்கு
என்னுடைய வாக்காளர் அட்டையை
சோதித்த போது ஏனோ அது
எனக்கு நினைவுக்கு வந்து போனது !!
அனைத்தும் முடிந்து
வாக்கு போட்டு வெளிய
வந்த பிறகு
எவரும் என்னை
ஏறடுத்து பார்க்கவில்லை
அவர்களை சொல்லி
குற்றமில்லை
அவர்களும்
அப்படிதானே ....

மரித்து போக ஆசை..

5 ரசித்தவர்கள்


மரித்து போக ஆசை..

பிறக்கும்போதே

பிரம்மன்

இறப்பையும்

இணைத்து விட்டான்

இலவசமாக

மரணம் என்பது

மறுபடியும் ஜனனமே ....

பிறவா வரம் வேண்டி

தவமாய் தவம் இருந்தோர் பலர் ...

மரித்து போக ஆசை



என்னுடைய மரணம்

சிலரை களிப்புற செய்யலாம்

பலரை கலங்க செய்யலாம்

உறவுகளை

பலம் இழக்க செய்யலாம்

ஆனாலும்

மரித்து போக ஆசை

இரவல் வாங்கி வந்த உயிர் தானே

சுயம்புவாய் இருந்து இருந்தால்

சிறப்பாய் இருந்து இருக்கும்

மரணம் என்பது

மற்றுமோர் பயணம் தான்

ஆனாலும் மரித்து போக ஆசை



தொட்டு விட்ட தூரம் தான்

தொடும் நேரம் தான் தெரியாது

ஆனாலும் மரித்து போக ஆசை



இனியொரு பிறப்பெடுத்து

எனகென வாழ ஆசை

இருந்தவரை வாழ்ந்துவிட்டேன்

இயன்றவரை தந்துவிட்டேன்

நிராயுதபாணியாய் நிற்கிறேன்

கடந்து வந்த பாதை

கடக்க போகும் பாதை

எல்லாமே ஒரு வழி பயணம் தான்

எந்த ஊருக்கு சென்றாலும்

இறுதி ஊர்வலம் மயானம் தான் ....

இடையில் கிடைக்கும் எதுவும்

நிதர்சனம் கிடையாது...

நிம்மதியும் கூட தான் ....

ஆனாலும் எனக்கு

மரித்து போக ஆசை...



இழப்புகள் இருக்கலாம்

வலிகள் இருக்கலாம்

வழிகளும் இருக்கலாம்

வஞ்சமும் இருக்கலாம்

நஞ்சும் இருக்கலாம்

அன்பும் இருக்கலாம் -ஆனாலும்

எனக்கு மரித்து போக ஆசை



அல்லல் படும் உயிரை

அனுதினமும்

சுமந்து

ஊனுக்கு ஊன் - என

உள் ஒன்று வைத்து

புறம் ஒன்று பேசும்

பஞ்சமகா பாவிகள்

லோகத்தில் இருந்து

மரித்து போக ஆசை...