கானகம் என் அகம்

1 ரசித்தவர்கள்
 கானகம் என் அகம்

வண்ணமாய் எண்ணங்கள் 
எண்ணங்கள் எழுத்துக்களாய் 
முன் எப்போதுமில்லாமல் 
இப்போது தூரிகை 
பிடித்த ஓவியனாய் 
சொற்களில் 
நளினம் 
என்னை சுற்றி பார்க்கிறேன்
எல்லாமே ஓவியமாய் 
நான் மட்டும் அருவமாய் 
அனைத்தையும் உணர்கிறேன் 
மௌனமாய் இருக்கும் ஓசை 
காற்றின் ஒலியை எனக்கு 
அறிமுகம் செய்கிறது ...
பறவையின் சிறகுகள் 
படபடப்பாய் ....
தட்டுகளை எறிந்தது போல்... 
மரத்தில் இருந்து உதிரும் 
சருகுகளில் எழும் 
சங்கேத மொழி 
உயிர் விட்ட துயரத்தை- என்னுள் 
உணர செய்கிறது .....
தாலாட்டு பாடும் 
தென்றல் 
மரத்திற்கு இதமாய் 
ஓங்கி நின்ற மரத்தின் 
இலைகளின் சலசலப்பு 
வகுப்பறையில் ஆசிரியர் 
இல்லாத சமயம் 
சலசலக்கும் 
பள்ளி சிறார்கள் போல ... 
மரத்தில் ஓட்டை போடும் 
கள்ள மரங்கொத்தி 
எதை திருட வந்தது...? 
யாருமில்லா தேசத்தில் 
யாருக்காய் பாடுகிறது குயில்?
சுவடுகள் இல்லாத 
பாதங்கள் 
மணலில் 
அணில்களின் நாட்டியம் 
கானகம் 
என் அகமாய் மாற
எனக்குள் தோன்றிய 
ஒரு சிறிய கற்பனை 
அதற்கு அணையேது?


கிறுக்கலாய் ......

1 ரசித்தவர்கள்
கிறுக்கலாய் ...... 



சிரிக்க கற்று கொடுத்தாய்
சிந்திக்க கற்று கொடுத்தாய்
சிறகடிக்க கற்று கொடுத்தாய்
சொல்லாமல் சென்றாய்
அழுகை மட்டும்
சொல்லி கொடுக்காமல் .....

நேர் வகிடு
நெற்றியில் சந்தன கீற்று
குங்குமமும் சேர்த்து
காதோரம் ரோஜா பூ
எளிமையான வாயில் புடவை
வேறு எதுவும் தேவையில்லை...
அலங்கார பொருட்கள் இல்லாமல்
அம்மன் வீதி உலா...

பரமன்
பிரம்மன்
நாராயணன்
மூவரும் சேர்ந்து
தரிசிக்க வந்தேன்னவோ
உன்னை தான் ...
சக்தியாய் நீ...

கடவு சொல்
கணினி கேட்டது
இன்றும் ஜெபிக்கிறேன்
உன்பெயரில் தான்
என் நாள் துவக்கம் !!!

சத்தம் உனக்கு பிடிக்காது
சாந்தம் எனக்கு பிடிக்காது
நமக்குள் எப்படி நடந்தது
காதல் யுத்தம் ....

ஒரு முறை சிரித்தால் -
சிநேகம்
மறு முறை சிரித்தால் - அன்பு
மறுபடியும் சிரித்தால்
எப்படி எடுத்துகொள்வது ?
அதையும் நீயே சொல்லிவிடு ...!

ஒவ்வொரு முறையும்
உன்னிடம் பேசும்போது
தொலைபேசியில்
காசுகளை போடும்போது
எண்ணுவதில்லை
உன் சிரிப்பிற்கு
விலை ஏது?

காந்தம்
இரும்பை இழுக்கும்
இயற்கை விதி
உன் விழியால்
நான் இழுக்கப்பட்டேன்
ஒ!! இது தான் காதல் விதியா?

நீ மருத்துவம் படிக்கிறாய் !!
உனக்காகவே புதிது புதிதாய்
வியாதிகளை தேடுகிறேன் !!
எனக்குள் செலுத்தி கொள்ள .....

ஊசி எடுத்து
நீ குத்திய உடன
முகத்தை சுருக்கினாய்
அன்று முழுதும்
எனக்கு வலித்தது...

மனதில் ரணமாய்
உன் எண்ணம்
வெளியில் அனலாய்
வீசியது
இப்போதும் கூட
மருந்திட
வர மாட்டாயா....
ரணத்தில் வழிகிறது
ரத்தம்...

முத்தம் கொடுத்தாய்
இரவுக்கு கூட தெரியாமல்
நிலவு மட்டும்
கண்டு களித்தது
அன்று நடந்த
அற்புதத்தை !!!

எப்போதும் போல்
என்னிடம் சண்டை போடு
இப்போதெல்லாம் - என்
தூக்கம் கூட
கெடுகிறது
சண்டையில்லாமல் ....

ஒருவழியாய்
அனைவரையும்
சமாதான படுத்தினேன்
உன்னிடம் தான் பாக்கி
உன் சம்மதம்
எப்போது தருவாய்?

அடிக்கடி கடிகாரம்
பார்க்கும் பழக்கம்
எனக்கு கிடையாது
உன்னிடம் பழகும் வரை ....

நேரம் தவறாமல் நீ...
நேசம் தவறாமல் நான் ...
விழிகளில் விசாரித்து
மௌனமாய் செல்லும்
நமது காதல்
ஒருவகையில்
ஊமை காதல் தான்....

கடற்கரையில்
கால் தடங்கள்
நடந்தது நீ,,,
மனதில் பதிந்தது
ஓவியமாய் !!!


எங்கோ அடிக்கும் 
மணியின் ஓசை
உன்னை நினைவு படுத்துகிறது
உனக்காய்
கோவிலில் காத்திருந்ததை ....!!

வலியது தாயன்பு

1 ரசித்தவர்கள்
வெற்று காகிதமாய் இருந்த
என் மனதில்
கிறுக்கலாய் சில
வரிகள்
வாரம் தப்பினாலும்
நாட்கள் தப்பினாலும்
நேரங்கள் தப்பினாலும்
நிமிசங்கள் தப்பினாலும்
அவள் நினைவு
தப்பியதில்லை
உறங்கும் பொழுதும்
உறக்கம் வராத போதும்
அவள் சிந்தனை தான்
என்னை ஈன்ற என் தாய்
எவ்வளவு சிரம பட்டிருப்பாள்
நெஞ்சம் கசிகிறது
அவள் கண்ட வலி கண்டு...