கலவையாய் சில கோர்வைகள்....

0 ரசித்தவர்கள்







மேகம்................/

மேலே மேலே

போக போக...

பொதியாய்...

பஞ்சாய்....

நகரும்

பனிதிரைகள்....


பனித்துளி............./

புல்லும்

மலரும்

சூடி கொள்ளுமே..

வைர நெற்றிசூடி!!!!



ரௌத்திரம்................./

பூகம்பமாய்

நெஞ்சில்

வெடித்தாலும்

புன்னகையில்

கோபம்....!!!!


வெற்றி.............../

சேணம்

கட்டிய

குதிரையாய்....!!

இலக்கை

அடையும்வரை...!!!

அதுவரை....?


அன்று...../

கூட்டத்தில்

ஒருவனாய்...

வரிசையில்...


இன்று..../

கூட்டமாய்....

என்

கை அசைவிற்கு...


தலைவன் ...../

தன் பசியை

தூரவைத்து...

பிறர் பசியை

தனதாக்கும்

தார்மீக

தொண்டன்....!!!



தொண்டன்........./


ஊரெல்லாம்

திரிந்தாலும்

உள்ளமெலாம்

தலைவனை

தாங்குமிந்த

தூண்.....


பேராசை................./

புதையலை

அள்ளி

எடுத்தாலும்

கிள்ளி கொடுக்க

மனமிலா

மாசாய்.....


கொஞ்சல்.............../

கால் கொலுசில்

கை வளையில்

கழுத்து புறமாய்...

உச்ணமாய்

உன் மூச்சு காற்று...

அழுத்தமாய்

இதழ்பதிப்பு......


சங்கடம்..................../


மெல்லவோ...

முழுங்கவோ

முடியா....

இருதலை

கொள்ளி

எறும்பாய்... மனம்....


சாதுர்யம்.............../

மௌனமாய்

நீயும்...

பேசியே

நானும்....

செய்யும்...

சரச விளையாட்டு.....

இசை................../

மகுடியின்

பாம்பாய்...

லயிக்கும்

எல்லையில்லா

கடல்...


ஊடல்................./

விடியலில்

தொடங்கி...

விடியும் வரை....

முறைப்பாய்

முரண்....


கூடல்................./

எதுகையும்

மோனையும்

நறுமுகையாய்...

இன்முகமாய்...

இருத்தி.....

பின்னிரவை

பகலாக்கும்

முயற்சி....



முறைபொண்ணு................../


பாவாடை

தாவணி

பதின்பருவம்....

எழிலோவியமாய்

என் தேவதை...


காத்திருப்புகள்.............../

பூங்காவிலே

இருத்தி இருக்கும்

உக்காரும் மேடைகள்

சொல்லும்

என் காத்திருப்புகளை....


தாமதம்./


விரைவாய் செல்லும் !!

புகைவண்டியாய் !!!மனது....

இன்றேனும் சீக்கிரமாய் .....

சந்தித்தால்... சுகமாய்....


தயக்கம்.............../

வெட்கத்தை

வெளியேற்றி

விருப்பத்தை

வினவ தான்

ஆசை..... இன்றேனும்....


இனிமை.............../

மயில்

குயில்

குரலோசை

இனிது...

அதைப்போலத்தான்...

உனதும்....


ஏக்கம்.................../

ஒவ்வொருமுறையும்

கடக்கிறேன்...

மொத்தமாய் உனை

விழுங்கியவாறு....

என்றேனும்

சொல்லுவேன்

எனதான

காதலை...

காதலோடு....



உரிமை................/

ஜனித்த போதே....

முடிக்கப்பட்ட

திருமண

சாசனம்....

சாதி சனம்

கூடி....

இரு மனங்களின்

நிலை அறியாது....


விலை..................../

மண்ணில்

ஜனித்த

உயிரும்

உயிரில் ஜனித்த

உயிரும்

விலையாய்

இன்று...???

மாயை

1 ரசித்தவர்கள்



என்னை அடக்கம்
செய்ய கல்லறை தயார்.....
உன்னுடன்
யான் புரிந்த
மௌன யுத்தம்
மெல்ல மெல்ல
அடங்கி...
அடங்கி...
காற்றாய்
ஓசையாய்
ஏதும் இல்லா
பிம்பமாய்...
அண்ட வெளியில்
அலை பாய்கிறது....
ஆவியாகி போன
அரை நொடியில்
உன் சிரிப்பை
பார்த்து
மொத்தமாய்
நொறுங்கி தான்
போனேன்..
உன்னை நினைத்தது
உலகில் பெரிய
பாவமாய்
உணர்கிறேன்
உரு பெற்று
எழுகிறேன்
மீண்டு வருகிறேன்
மாய தீயை
அணைத்து விட்டு
மெய்யாய் என்னை
உணர்ந்து கொண்டு...
கருவாகி
உருவாகி
உயிராகி
ஊனாகி
மண்ணாகும் வரை
மறவேன்....
பெண்ணால்
மாண்டவன்
பெண் எனும்
மாயையில் இருந்து
மீண்டவன்

அப்படியே............

0 ரசித்தவர்கள்









விழிகள் செதுக்கிய
கண்ணீர் துளிகள்
முத்துக்களாய்...
மௌன பார்வையில்
நீ சொன்ன வார்த்தைகள் ....
என் தோள் சாய்ந்து
நீ பேசிய வார்த்தைகள்
விரும்பிய செவிகள்...
நட்புடன் விரல் பிடித்து
விளையாடிய கைகள்....
காற்றின் நேசத்தோடு
காலாற நடந்த கால்கள்....
மணற்பரப்பில் கட்டிய
கோபுர கலசங்கள்....
கடந்த காலத்தின்
எச்சங்கள் தான்...
எனினும் .....
மூளையோடு
பதிந்து போன
நிழல் படங்கள்...
கண் மூடும் பொழுதும்
கனவிலும் கண் சிமிட்டும்...
நீளா துயிலில்
மீளாமல் போனாலும்
மிச்சமாய் இருப்பதும்
அவைகள் மட்டுமே....
இளமை மாறாமல்....
அதே நளினத்தோடு....
அதே புன்னகையோடு...
உறைந்து போன
நினைவு பெட்டகமாய்....
திறந்து திறந்து
பார்க்கிறேன் ...இவை
யாவும் உயிர் பெறாதா??
எல்லாமே நிஜம்தானே...
நிழலாய் போனதே....
நின்னை நினைக்கின்ற
நொடி பொழுதும் கூட
கடையோர புன்னகை
மட்டும் அப்படியே.....
இரவு வணக்கங்கள்
அன்புடன்
கவிதை சொல்லுங்கள் & கேளுங்கள்
ஜெயராமன் பரத்வாஜ்.

தனியாய் ....

0 ரசித்தவர்கள்






ஜனிக்கும்போதே
நஞ்சுகொடியோடு...
ஆனாலும்
ஆண்டவன் சொரூபம்
எவர் எடுத்து கொஞ்சினாலும்
இதழ்களில் சிரிப்பை தவிர
வேறெதுவும் தெரியாது....
பழக பழக பாலும் புளிக்குமாம்...
அப்படிதான் ஆனது...
மெல்ல மெல்ல ஏறும்
விசமாய் நெஞ்சில்
வினையும் சேர்ந்து...
வல்வினைகள்
தெரிந்து சில
தெரியாமல் பல..
ஆட்டம் ஆரம்பமானது...
கால் சராய் போடும்
காலம் போய்...
பதின்பருவம்
மெல்ல மெல்ல
ஆண்மை வந்ததாய்...
ஆணவம் வந்தது...
ஆசையும் சேர்ந்தது...
கூடாநட்பு....
துணையோடு
வஞ்சும் நஞ்சும்
விளையாட்டாய்
வினையென்று தெரியாது...
சாட்டை சுழற்றிய
பம்பரமாய்...
பரபரவென
மனது...
கள்ளம்...
கபடு....
இன்னும் இன்னுமென
பாபங்களை
பங்கு போட்டு...
திரும்பி பார்கையில்
தன்னந்தனியாய்
துணைக்கு வந்த
துணை எல்லாம்
வழித்துணையாய்...
அவரவர் இடங்கள்
அடைந்ததும்
அறுந்து போயின...
உப்பு தின்னவன்
தண்ணி குடிக்கனுமாம் ...
இப்போது குடிக்கிறேன்...
தனியாய்....
துணையில்லாமல்...

மனம் அலை கடலாய்

0 ரசித்தவர்கள்



பேராழியில் சிக்கி சின்னா
பின்னமாயிருந்தாலும் .....
போராடி என் உயிர்
துறந்திருந்தாலும்....
கடல் தாய் என்னை
முழுதுமாய்
விழுங்கி இருந்தாலும்....
பனை உயர மீன்கள்
என் சதையை பிய்த்து
எறிந்திருந்தாலும்
பரிதவிக்க மாட்டேன்
மை விழியில் சிக்கி
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கட்டிய என் கனவு
கோட்டையை ...
கண நேரத்தில்
இடித்து விட்டு
துளியும் சலனமின்றி
துடி துடிக்க விட்டு விட்டு .....
துயரங்களை சுமக்கும்
துறவியாய் ... ...
மௌனங்களை
மட்டுமே பதிலாய்...
வார்த்தைகள் கூட
சிக்கி தவிக்கிறது
சிந்திய கண்ணீரில்
இருந்த ஈரம் கூட
உன்னிடம் இல்லையென
மனம் அலை கடலாய்
ஆர்பரிக்கிறது...

பாதகங்கள்

1 ரசித்தவர்கள்

மண்ணாய்
மலராய்
மயிலாய்
குயிலாய்
எறும்பாய்...
பொதி சுமக்கும்
கழுதையாய்
பால் தரும் பசுவாய்....
பளு தூக்கும் எருதாய்...
விலங்காய் பிறந்திருந்தால்
வினை ஏதும் இல்லை...
ஆறறிவு பெற்று
மனிதனாய் பிறந்ததே
முதல் குற்றமாகி
முதல் கோணல்
முற்றும் கோணலாய்....
வஞ்சம் ...சூது..
நஞ்சு... களவு...
வார்த்தையில் அடங்கா...
பாதகங்கள் செய்வதே
பணியாய்.....
அறிந்து செய்யுமென
பாபங்களே
துரத்தும்
அறியாமல் செய்ய
பிழை அல்ல வாழ்க்கை...
புரிதல் நலம்...
அறிதல் சுகம்...
தன்னை அறிதல்
முழுமை...
தன்னலம்
வீழ்தல்...
மனிதம்....

விடுமுறை கூட விலங்கு தான்...

0 ரசித்தவர்கள்


சனி ஞாயிறு
தினங்களில்
மட்டும்
தரிசனம்
இல்லையாம்
கல்லூரி
விடுமுறையாம்
இந்த முறையெல்லாம்
யார் கொண்டுவந்தது..?
ஒரு நாள் உன்னை
பார்க்கவில்லையெனில்
உயிர் வலி கொல்லுதடி...
உன் பெயரை உச்சரித்தால்
வலியின் சுவடு
பய்ய பய்ய
மறையுதடி...
கைபேசியில்
உன்னுருவம்
இருந்தாலும் கூட
அசையாமல்
இருக்கும்
பொம்மையாய்
உன்னை காண
பிடிக்கவில்லை
உயிராய் அருகாமையில்
உக்கார்ந்து நீ
பேசுகையில்
குறும்பாய்
என் முடி பிடித்து
விளையாடுகையில்
உணர்கிறேன்
உன் காதலை...
கற்பனையை
நினைத்து பார்த்தாலும்
நிஜமாய் இருக்கும்
நின்னுருவம்
நிழலில் தெரிந்தால்
நிஜமென்று கூற
மனம் கூட
மரத்து போகிறது...
மரகட்டையாய்...
வாரத்தின் முதல் நாள்
வாசலில் தவமிருப்பேன்
வஞ்சி உன்னை காணும்வரை...

மௌன மொழி...

0 ரசித்தவர்கள்






இரவின் நிசப்தம்
காற்றில் கரைந்து
மௌனம் பேசியது
குயிலின் கூவலில்
விடியல் மெல்ல
தலையை எட்டி பார்க்க
சூரியனும் சேர்ந்து
பூவில் மேலுள்ள
பனித்துளியை
துடைத்து
பூக்கள் மலர
அங்கே
தேனீக்கள்
பூக்களோடு
ரீங்காரம் பாட...
மகரந்த சேர்க்கையோடு
பூக்களை
வண்டுகள்
முத்தமிட்டபடி...
பொழுதும் புலர்ந்தது ....
விடியலின் தாக்கம்
மொத்தமாய் தாக்க
புத்துணர்ச்சியோடு
புதிதாய்
தொடங்கினேன்
மற்றுமோர் நாளை..

கருவறையில் பொன் குவியல்

0 ரசித்தவர்கள்




கர்ப்ப கிரகத்தில்
கடவுள் இருந்தார்
கூடவே
பொன்னும் பொருளும் ...
பூதம் காத்த காலம் போய்...
இப்போது கடவுளும்
காத்து வருகிறார்...
காலம் காலமாய்...
மன்னர் ஆட்சி போய்
மக்கள் ஆட்சி வந்தது...
இதுவரை யாரும்
நுழைந்ததில்லை...
கருவறையில்...
படையெடுப்பின்
பிரதானமே
கொள்ளை அடித்தல் தான்...
சேமித்து வைத்ததெல்லாம்
பாதாள அறையில் தான்...
திறவு கோல் கூட
ரகசியம் காக்கும்...
எல்லாம் சரி...
எடுக்க எடுக்க
குவியல் குவியலாய்...
ஏழு மலையானே
மலைத்து தான் போனான்...
எண்ணற்ற திரவியம் கண்டு...
சுபிட்சம் என்பது
கேரளாவை பொறுத்தவரை
அதிகாரமாய் ஒலிக்கும்...
அடுத்து...
திருமால் பள்ளி கொண்ட
சீரங்கதிலும் ....
சிவன் கோயில் கொண்ட
தஞ்சையாம்....
காத்திருப்போம்
தங்க வேட்டைக்கு....

மண்ணாசை... கோல ஆசை...

0 ரசித்தவர்கள்





அதிகாலை பொழுதில்
சூரியோதயத்திற்கு
அஸ்திவாரமாய்...
காலையில்
சந்திரன் வாசலில்
கோலம் போட...
அதை காணும்
ஆவலில்
இருட்டு போர்வையை
போர்த்தி கொண்டு...
பனி விழும் நேரத்தில்
பாது காவலாய்
நின்றேன்...
அவள் கோலம்
போடும் அழகை
வர்ணிக்க
வார்த்தைகள்
கிட்டவில்லை...
கம்பரையும்
வள்ளுவரையும்
கண்ணதாசனையும்
வாலியையும்
வைரமுத்துவையும்
நினைவில் வைத்தேன்...
அவர்கள் பெயர்கள்
நினைவுக்கு
வந்த வண்ணமாய் இருந்ததே
தவிர எனக்கு....
வார்த்தை சிக்கவில்லை...
கேசத்தை அவள்
ஒதுக்கிய போது..
நெற்றியில் முதுமாலையா?
வியப்புடன் நோக்கினேன்...
வியர்வை முத்துக்கள்
கோர்த்திருக்க கண்டேன்....
பூக்களை சூழ்ந்திருக்கும்
பனித்துளியாய்....
அவள் முகம்......
ஒய்யாரமாய்
நின்று அவள்
போட்ட கோலத்தை
ரசித்தாள்....
சுற்றும் முற்றும்
பார்த்து...
திருஷ்டி சுற்றி
சிரித்து கொண்டாள்..
அந்த கோலத்திற்கு
அடித்தது யோகம்...
அவள் நின்ற
மண்ணாய்...
கல்லாய்...
அவள் போட்ட...
கோல மாவாய் இருக்க
மனம் ஆசையானது....

அறிவாய் மனிதம்....

0 ரசித்தவர்கள்





தோன்றலில்
பேதைமை இல்லை...
நம்மை சுற்றி
உலாவும்
இயற்கையில்
பேதம் இல்லை...
எப்போது பிறப்போம்
எப்போது இறப்போம்
என்பதை அறியோம்...
இருக்கும் சில
மணித்துளிகளில்
சாதித்ததாய்
மார் தட்டி
மதம் எனும்
மதம் பிடித்து ....
மனிதம்
மறக்கிறோம் ...
பெற்றவை எல்லாம்
இங்கிருந்தே...
கற்றவை எல்லாம்
இங்கிருந்தே...
காற்றில் ஊஞ்சல்
ஆடும் கூடு
ஆறடி ....
காற்றடைத்த
பையில்
சதைகளோடு
எலும்புகளும்
ஆடும் ஆட்டம்
என்னே என்னே..
பலமுறை
யாசித்தலும்
சில முறை
யோசித்தலும்
ஆறறிவை
கொண்டு...
அவன் செய்யும்
விதைகளும்
வித்தைகளும்
விந்தைகளும்
ஏராளம்...
ஏளனம்
எக்காளம்
எகத்தாளம்
எத்தனை எத்தனை
எள்ளி நகையாடி
உதாசீனபடுத்தி..
உன்மத்தம் ஆகும்
மனிதா....
இடும் காடும்
சுடும் காடும்
தொலை தூரம் இல்லை...
தொட்டுவிடும் தூரம் தான்...
நீ போகும் போதும்
அடக்கமாவதும் ...
அனலில் அடங்கி போவதும்
ஆறடி மட்டும் தான்...
அப்பழுக்கில்லா
உன் உயிர் மட்டும்
ஜனனம் தேடி.... 

எனக்கு மட்டுமே.....

0 ரசித்தவர்கள்







ஆழியில் சிக்கிய
துரும்பாய் .....
அல்லல் படும்
மனது......
அல்லும் பகலும்
அளாவிய ....
ஆசை வார்த்தைகள்...
நிதம் நிதம்
நித்திரை மறந்து ....
முத்திரை பதித்த
முரட்டு இரவுகள்...
பின்னிரவு நேரம்
சுவர்கோழி
கூவலையும்
புறத்தே தள்ளிவிட்டு...
பூபாளம் இசைத்த
இரவுகள் ஏராளம் ....
அத்தனையும்
மொத்தமாய் ....
ஊழி காற்றில்
உரு தெரியாது போனதே...
உண்மை அறியாது..
நிந்தனை செய்யும்
நின்னை .....
சரிந்த சீட்டு கோட்டைகளாய்
காற்றில் கட்டிய மாளிகையாய்
கண் முன்னே நொறுங்கி போனதே....
நெஞ்சம் கல்லாய் போனதா...?
நினைவும் மறந்தே போனதா..?
நிஜங்களும் நிழலானதா..?
நிலை கண்ணாடியில்
நித்தம் பார்கிறாயா?
நின்னையே கேட்டு பார்?
நீ செய்வது சரியோ?
நீயாய் வந்தாய்....
நீயாய் சென்றாய்....
உன்னை உளமார
நேசித்ததை தவிர....
வேறென்ன பிழை செய்தேன்...
வேதைனையில் .....
மனமிடும் ஓலம்
எனக்கு மட்டுமே.....

அறிவு சுடர்

0 ரசித்தவர்கள்
 அறிவு சுடர்
 
 
 


மௌனத்தின்
இறுக்கம்
என்னை
மொத்தமாய்
இறுக்கியது...
விழி பிதுங்கிய
சோகத்தில்
கையறு நிலையில்
மெல்ல மெல்ல
நினைவு தப்பியது..
இறுமாப்பு சிரிப்புடன்
அருகாமையில் நீ...
அதிர்ந்து அதிர்ந்து
குலுங்கிய என் மனம்
கொஞ்சம் கொஞ்சமாய்
கெஞ்சியது...
உயிர் போகும் தருணம்...
ஒரு முறையாவது
சொல்லிவிடு...
ஏளனம் செய்யாதே..
என்னுள் கலப்பு
இல்லை...
கனிமத்தில் கூட
கலப்பு இருந்தால்
தான்
பொலிவு ...
ஆனால்...
கரியாய் இருந்தாலும்
பட்டை தீட்டி பார்
உன் கண்களும் கூசும்
என் ஒளி பார்த்து...
அப்போதாவது
புரியுமா...
அப்பழுக்கற்ற
அறிவு சுடர்
என...

மனதின் ஓட்டம் ....

0 ரசித்தவர்கள்
 மனதின் ஓட்டம் ....
 
 
 
சிரிப்பை கொடுத்து...
சிந்திக்கும் அறிவை கொடுத்து
சிறகடிக்கும் எண்ணங்கள் கொடுத்து...
சுதந்திரத்தை சுவாசிக்கவும் ....
சிரமத்தை அணுகவும்
கற்று தந்த நீ...
வலிகளையும்
வடுக்களையும்
மறைக்க கற்று
தராமல் போனாயே..
எந்தையே...
ஏங்க வைத்து
என்னை
மொத்தமாய்
அலைகழிப்பதில்
உனக்கென்ன
ஆனந்தம்....?
துளியாய்
விஷமும் தா..
மயான பாதைக்கு
பூ தூவ
மலரும் கொண்டுவா....
கவிதைகள் அனைத்தும்
எனதே..
ஆண்பாலாய் இருந்தாலும்
அன்பால்
எழுத பட்டவை...
வலிகளை
வார்த்தையில்
கோர்க்கிறேன்...
வடுக்களோடு
போகட்டும்
என் வலி...
பெயர் போட
இஷ்டம் இல்லை...
இதுவும் அவள்(கலை மகள்)
போட்ட பிச்சை தானே...
உயிர் ஜனித்த
பொழுதை விட
உயிர் கொடுத்த
பொழுதை
உயிராய் நினைத்தேன்...
ஜனித்த போது
எனக்கு மட்டுமே
பிடித்தது...
உயிர் கொடுத்த போது
உலகமே வியந்தது..
கவிதை குழந்தை...
உன்னிடம் எதையும்
மறைத்து எனக்கு
பழக்கமில்லை...
இன்றும் அப்படிதான்...
திறந்த புத்தகமாய்
நீ மட்டும்
ரகசியமாய்
வந்தாய்...
ரகசியம்
சொல்லி தந்தாய்...
ரகசியமாய்
போனாயே...
இப்போது ரகசியம்
காக்க தெரியாமல்...
தினம் தினம்
போராட்டத்தில்
கனவுகளை
கொன்று
வருகிறேன்...
ரகசியமாய்
எப்போது வருவாய்??
 
 
 

ஓசையின் நிசப்தம்

0 ரசித்தவர்கள்
 
 
 ஓசையின் நிசப்தம் 
 
 
 
 
கருவேல காட்டு வழி...
மாலை கவ்வும் வேளை....
மையிருட்டு நேரம்...
மையல் கொண்ட தையல்
மைவிழியாலே...
மனதை பிசைந்தாளே....
போதைக்கு போதையானளே
இருட்டுக்கு கூட
கேட்காமல்
சங்கேதமாய்
வார்த்தைகள் பேசி...
சிக்கி தவிக்கும்
முத்துகளை
சிரிப்பில்
கொணர்ந்தாளே....
நேரம் போனது தெரியாது...
நேசத்தை பகிர்ந்தோமே...
கால சுவடுகள்
பாதம் பதிய
சென்ற இடமெல்லாம்
உன் நினைவு தான்
இத்தனையும் செஞ்ச...
எனை மட்டும்
விட்டு விட்டு
வெளி தேசம் செல்ல தான்...
மனசு ஒப்பு வந்தேப்படி?
வடிவே அழகே
உன்னை பிரிந்தாலும்
சுகமாய் இருந்தால்
அது போதும் எனக்கு
ஏழேழு ஜென்மம் வரை
கூட வரும்....
உன்னை பிரிந்து
உயிர் வாழும்
ஒரு ஜீவன்...
கால கண்ணாடியை
துடைத்து தான்
பார்க்கிறது....

காலை மலர்..

0 ரசித்தவர்கள்









இனிய காலையில்
பறவைகளின் சீழ்க்கைஒலிகள்
சங்கீதமாய்.....
விடியலின்
இன்னொரு பரிணாமம்....
மீண்டும் துவங்கும்
புதிய நாளாய்...
உவகையோடு ஏற்று
பறவையோடு மனதையும்
உயர பறக்க விடுங்கள்..
நேற்றைய நினைவுகள்
எச்சங்களாய்..
குப்பையை சேர்க்காது
சுத்தம் செய்யுங்கள்....
வன்மம் வஞ்சம்
வாது சூது
களவு பொய்மை
புறத்தே தள்ளி
புத்தம் புது
மலராய் ...
இந்த நாளை
தொடங்குங்கள்..
காலை வணக்கங்களோடு
கவிதை சொல்லுங்கள்....
கவிதை கேளுங்கள்...

அன்புடன் ஜெயராமன் பரத்வாஜ்.

ஊஞ்சலாடும் நினைவுகள்

0 ரசித்தவர்கள்
 ஊஞ்சலாடும் நினைவுகள்
 
 
 
 
உரசி பார்க்கும்
உன் நினைவுகள்
ஊடுருவி செல்லும்
உன் பார்வைகள்
பழகி போன
பாத சுவடுகள்...
கண்ணை கட்டி
விட்டாலும்
தடம் மாறாது
நீள் தண்டவாளமாய்
கைகளை காற்றில்
அலைய விட்டு
உன் கேச கற்றைகள்
என் கையில் சிக்கி
செல்லமாய் நீ
சிணுங்கும் நொடியில்
வலித்தாலும் அதை
வாய் சொல்லாது
இதழில் சிரிப்பை
தேக்கி வைத்திருப்பாய்
கண்ணா மூச்சி ஆட்டம்
என் முன்னே
வந்து வந்து
எனக்காக நீ
விட்டு கொடுப்பாயே
அப்போது தான்
புரிந்து கொண்டேன்
விட்டு கொடுத்தலும்...
விளையாட்டில் நீ
விட்டு கொடுத்தாய்...
வாழ்கையில் விட்டு
கொடுத்து விட்டு
உன்னுடனான
பொழுதுகளை
துணைக்கு
அழைக்கிறேன்...

நினைவு சாரல்

0 ரசித்தவர்கள்
 
 
 
நீண்ட தொரு பயணத்தில்
துளியாய் ஆரம்பித்து...
கம்பிகளாய் தெறித்து...
தெருவை சுத்தம் செய்து...
அனைவரையும்
ஆடை கழற்றாமல்
குளிப்பாட்டி...
அன்னையை போலவே
அன்பை பொழிகிறது
மழை....
ஆங்காங்கு பள்ளத்தை
சமசீராய் ஆக்கிவிட்டு
அருமையாய் ஒரு
ஜலதரங்கம் பாடும்
மழையை
ஆராதிக்கிறேன்...
இயற்கை அன்னையின்
இன்னொரு கொடை....
 

இன்றும் !!
நினைவு இருக்கிறது...
தூறல் போடும் மழையில்
மிதிவண்டி பயணத்தில்...
துப்பட்டாவை குடையாக்கி
துரிதமாய் செல்ல செல்ல...
மழையின் சாரல்
என் வேகத்தை அணை போட...
வியர்வை துளிகளா...
மழை துளிகளா...
வித்தியாசம் தெரியாது...
சிறியதாய் இருக்கும்
கைகுட்டையால்
என் முக துடைத்து
அழகு பார்ப்பாய்...
எப்போது இல்லாமல்...
அன்று மட்டும்
ஜொலிப்பதாய் சொல்வாயே....
இறந்து போன காலங்கள்..
நினைவுகளை மட்டுமே
என்னிடம் விட்டு
சென்றது......

பரிச்சயம் என் பாக்கியம்

1 ரசித்தவர்கள்



வாழ்க்கை ஒரு ஆசான்
ஒவ்வொரு நாளும்
ஒரு அனுபவம் தான்...
சந்திக்கும் ஒவ்வொருவரும்
போதிப்பவன் தான் ....
நட்பின் இலக்கணத்தை
இக்கணம் வரை
வரமாய் தந்தவளே
உற்றார் உறவுகள்
உதாசீன படுத்தும்போது ...
உரிமையாய் என்னை
உறவு கொண்டாடி...
உற்சாக படுத்தும்
உனக்கு ...
கைம்மாறு என்செய்வேன்
எதிர்பார்த்து
செய்வதல்ல என
நட்பிற்கு
மகுடம் சூடினாய்
இனம் மதம்
இன்ன பிற  இத்யாதிகளை
பின்னுக்கு தள்ளிவிட்டு
துவண்டு போன
என் மனதில்
துளிராய் வந்து
விருட்சமாய்
இருக்கிறாய்...
என் அந்திம காலம்
எப்போது என
எனக்கு தெரியாது....
அப்போதும் கூட
உன் மடியாய் இருந்தால்
உவகை கொள்வேன் ...
நட்பிற்கு நன்றி சொல்லி ...
நன்றிக்கு களங்கம் வேண்டாமென
வணங்கி நிற்கிறேன்...
வாழிய நீ ....

எண்ண சிதறல்கள்.....

2 ரசித்தவர்கள்






என்னை கவிஞனாக்கினாய்...
ஒப்பு கொள்கிறேன்...
செல்லா காசான எனக்கு
மதிப்பு தந்தாய்
மறுக்கவில்லை....
காத்திருப்பின்
வெறுமையை
எனக்கு உணர்த்தினாய்...
உண்மைதான்....
பிரிவின் வலியை
கற்று தந்தாய்.....
சலனபடவில்லை...
புலம்பலின்
அர்த்தம் சொன்னாய்...
அதையும் ஏற்றேன்...
அனைத்தையும் செய்த நீ
அடக்கம் செய்து விட்டு
போயிருக்கலாம் ....
அமைதியாய்
இருந்திருப்பேன்...
சுவாசம் கூட
சிறு சலனமே
என்னை பொறுத்த வரை...
நீ இல்லாத போது...


இன்று மட்டும்
நீ சொல்லிவிட்டு போ ...
இதுவரை நடந்தவை
கனவு தான் என்று...
நிஜத்தின் சுவடு
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னை அரிக்கட்டும்.....
அப்போதாவது
நீ உணர்வாய்...
என் வார்த்தைகள்
கலப்பு இல்லை என்று... 



துரத்தி துரத்தி
சென்ற
மழையின் வேகம்
கடைசியில்
என்னை தொட்டு
நனைத்து சென்றது...
தோல்வியின்
முகத்தில்
வேர்வை
சிதறல்கள்
மழை துளிகள்...
மௌனமாய்
ஒரு புன்னகை...

மழையின் சாரல்...
அந்தி சாயும் பொழுது..
ரோந்து பணியில்
கண்ணும் கருத்துமாய்...
காவலாளிகள்....
வாகன சோதனை...
மனங்களின்
புலம்பல்கள்...
டியூஷன் போன
பையன் திரும்பி
வந்தானா...?
கல்லூரியில் இருந்து
கன்னி பெண் திரும்பினாளா?
பெண் காவலாளியாய்
இருந்தாலும்
அடிப்படையில் அவளும்
ஒரு தாய் தானே? 


வெளிச்சத்தின் பிம்பம்......

0 ரசித்தவர்கள்




இறுக்கமாய்
மூடி இருந்த
மனதினுள்...
வெளிச்சம்
புக முடியா
குகைக்குள்ளும்
கீற்றுகளாய் ...
ஒளிகற்றைகள் .....
பிரமித்து போனேன்..
மெல்ல மெல்ல
தெரிந்தது...
வந்தது
ஒளியல்ல...நீ ....
இதயத்தை
ஓட்ட வைத்தாலும்
அதில் ஒட்டிய
சுவடு தெரிவதை போல்...
அவ்வபோது நீ
கீறுகிறாய்...
வழிகிறது
செங்குருதி.....
ஆனால்
வலி தெரியவில்லை...
மரத்து போன
நெஞ்சிற்கு
இதுவும்
ஒரு காயம் தான்....
சிரிக்க முயல்கிறேன்...
உதடுகள் அசைகிறது...
உள்ளமோ அழுகிறது...
மறைக்க திரை
போட.....
திரையிலும் நீ...
வெளிச்சத்தின்
பிம்பம்......
வெளியேறுமா?
வெறுமையை
சுவைத்த படி .....

காகித கப்பல்...

0 ரசித்தவர்கள்






மனதில் இருக்கும் வலியை
எழுத்தில் வடித்தேன்...
ஒவ்வொரு வரியும்
கண்ணீராய்.....
துளி துளியாய்
சேகரிக்க .....
பெரு வெள்ளம்...
கவிதையில்
தெரிந்தது
என் வலி..
நிம்மதியாய்
திரிந்த காலம்.....
நிர்மூலமாய்
போனது...
நித்தம் ஒரு
கவிதையை
தத்து எடுத்துக்கொண்டு...
மனம்
ஆற்றாமையில்
ஓலமிடுகிறது.....
யாரிடம் சொல்வேன்...
கடை விரித்தேன்...
கொள்வார் இல்லை...
எழிலும் போனது...
அழிய கூடியது தானோ..?
அறிவுக்கு புரிந்தது...
வலியை உணர்ந்தவனுக்கு....
வாழ்க்கை ஒரு
காகித கப்பலாய்....
தண்ணீர்க்கு
இணையாக
என் கண்ணீர்....

சிக்கி முக்கி காதல்...

0 ரசித்தவர்கள்





சிக்கி முக்கி காதல்...

உன் அழகை
பேச பேச
சிக்கி  தவிக்கிறது
வார்த்தைகள்..
உன்னிடம் நான்
தவிப்பதை போல

அடுத்தடுத்து வீடு
அருகருகே வாசல்
அடுக்களை வரை
அவதானிப்பாய்...
அவ்வபோது
அளவெடுத்து பேசுவாய்..
அதிர்வு இல்லாமல்
அன்னமே தோற்று போகும்
அழகிய உன் நடையில்
அதனாலே உன்னை
அதிகமாய் பிடித்து போனது...
அதிலும் நீ தலை சாய
அதிசயிப்பாயே
அன்று தான் உணர்ந்தேன்
அமைதியை  பிடிக்காதவர் எவர்?

இரு விழிகளை 
உருட்டுகிறாயே!!
அப்போது
ஆலையில்
அடிபட்ட
கரும்பாகிறேன் ...
கலகலவென
நீ சிரிக்கையில்
என் உள்ளம்
குலுங்குவது
உனக்கு கேட்கிறதா?
கூட்டமாய்
வந்தாலும்
தனித்து
தெரிவாயே....?
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்பக்கம் இழுக்க
இவைகள் தான்
காரணிகள்....

சிதறி கிடந்த
புத்தகங்களை
சிதறாமல்
நீ எடுத்தாய்...
மொத்தமாய்
சிதறியது
நான் தான்...
உன்னை பார்த்தவாறு
ரோட்டோரத்தில்
தவறி விழுந்தேன்...?

வெளியே கிளம்ப
எத்தனிக்கையில்
அவசரமாய் வந்து ...
அழுத்தி விட்டு செல்வாய்
கைக்குள் மடக்கிய
ரூபாய் தாள்கள்...
காந்தி சிரிப்பதை
பார்த்திருப்பீர்கள்
என்னழுகை
தெரியாது...
அவள் என் பால்
கொண்டுள்ள
அன்பின் பால்...
அவ்வபோது
வரி கட்டுவாள் ....
அவளை பற்றி
வர்ணிப்பதால்...

காதல்
ஒரு விசித்திர நோய்
பார்க்கும் வரை
எதுவும் இல்லை
பார்க்காத போது
பிரளயமே
நடக்கிறது
மண்டை
கூட்டிற்குள்.. .
யோசிக்க
தெரியாத
நானே கூட
யோசிக்க கற்று
கொடுத்தது காதல்
மட்டுமே...

கவிச்சோலை

0 ரசித்தவர்கள்













 உன் விழிகள் காந்தம் தான்...
மறுக்கவில்லை...
ஆனால் நானோ 
கல்லாயிற்றே ....
ஈர்க்கபடுவதற்கு 
இரும்பு அல்லவே...

நித்தம் 
புதிது புதிதாய்
பூக்கள் 
வண்ண மயமாய் 
வாசனைகளும் தான் ...
நீக்க மற
எல்லா இடத்திலும்..
நுகர தெரிந்த 
எனக்கு...
பூக்களை காண தான் 
கொடுத்து வைக்கவில்லையே ?

முடவன் 
கொம்பு தேனுக்கு 
ஆசை படலாமா? 
முன்னோர் சொன்னது...
இளையோர் சொல்லுவது...
முடவனாய் இருந்தாலும் 
முயற்சி செய்தால்
முடியாதது இல்லை...
இவ்வுலகில்...

உன்புருவ 
நாணேற்றி 
கண்களால் 
கணை விடாதே.....
விரயமாகி போகும்...
வீணலுக்கு 
இட்ட நீராகும்... 

உன்னிடத்தில் 
சொல்ல ஆசை...
நீ வரும்போதெல்லாம் 
வீதியே உன்னோடு வருகிறது..
துப்பட்டாவை சரியாய் 
போட்டு கொள்...

உன் பெயர் சொல்லும் 
ஒவ்வொரு முறையும் 
எனக்கு மட்டுமே 
கேட்கிறது ...
என் இதயத்தின் 
சீழ்க்கை ஒலி.....

சிறிது நேர 
சந்திப்பு தான் 
என்றாலும் 
சிறிது சிறிதாய்
அசை போட்டு...
முழு நாளாகி... 
நாட்களாகி 
வாரங்களாகி 
மாதங்களாகி....
வருடங்களாகி...
அந்த சிறிது 
சந்திப்புக்கு 
இன்றும் ஆவலோடு... 

போராட்டம்...
உனக்கு பிடித்த வார்த்தை...
சமாதானம் 
எனக்கு பிடித்த வார்த்தை...
உடன்பாடு 
நம் இருவருக்கும் பிடித்த வார்த்தை..
என்னால் உனக்கு பிடித்தது
உன்னால் எனக்கு பிடித்தது...

விட்டு கொடுப்பதில் நீ 
எப்போதும் என்னை 
மிஞ்சுகிறாய்...
ஒரு முறை கேட்டேன் 
அப்படி என்ன இருக்கிறது என்று...
சிரித்தவாறே சொன்னாய்...
உன் முகத்தில் சிரிப்பை 
காண .....
நான் கொடுக்கும் விலை அது என்று... 

ஏறக்குறைய 
பதினைந்து வருடமாய் 
உன்னை எனக்கு தெரியும்...
தீடிரென இன்று வந்து 
என்னை பார்த்து 
கேட்கிறாய்... 
நீங்கள் தான்....அவரா? 
வெட்கித்து போனேன்... 

என் கவிதைக்கு 
முலாம் பூசும் 
அனைவரையும் 
ஒரு சேர கேட்கிறேன்..
கவிதையே 
 பொய்மைதானே?? 

சிகரம் நோக்கி 
புறப்பட்டேன் 
வளைவுகள் 
நெளிவுகள் 
இடர் பாடுகள் 
ஏராளம்... 
ஆனாலும் 
தளரவில்லை... 
எனக்கு 
தெரிந்தது 
உச்சிச்சிகரம் 
மட்டுமே... 


அறை கூவல்...

0 ரசித்தவர்கள்








ஒ சிங்கள அரசே... 
உன்னை எச்சரிக்கிறேன்... 
உனது நரித்தனத்தை 
என் இனத்திடம் காட்டாதே... 
நீ செய்யும் சதிகள்...
கொத்து கொத்தாய்
கொய்து போடும் 
என் இன சடலங்கள்... 
புற்றீசலாய் 
வெட்ட வெட்ட 
துளிர்க்கும் 
ஆலம்....
உலகம் முழுதும் 
உயிர் விட்டிருக்கும் 
ஆணி வேராய்...
ஊன கண்ணால் 
அதை காண முடியாது...
உன்னையும் ஈன்றது 
ஒரு தாயோ? 
இலங்கை வேந்தன் 
காதை தெரியாதா? 
எங்கள் இனத்தாலே 
அழிந்தான்... 
பிறன் மனை கண்டதால்... 
நீ இப்போது செய்வதில் 
சிறு மாற்று கூட இல்லை... 
வன்புணர்ச்சி செய்கிறாய் 
மிருகங்கள் கூட 
செய்ய விழையா....
என் இன பெண்கள் 
விடும் கண்ணீர் 
உன்னை தீயாய் பொசுக்கும் ....
கொடுங்  கோலனே.... 
சரித்திரம் அறிந்ததில்லையா? 
ஹிட்லர்... 
இடி அமீன்... 
இவர்கள் வரிசையில் 
நீயும் ஒரு நாள் 
கல்லால் அடி பட்டு தான் 
கல்லறைக்கு போவாய்... 
உன் இன பெண்கள் 
இங்கே சுதந்திரமாய் 
சுவாசிக்கிறார்கள்... 
இதை கண்டாவது... உன் 
இழிசெயலை 
இனியும் செய்யாதே... 
வீறு கொண்டு எழும் 
என் இன இளங்குருதி
உன் தலையும் 
கொய்து உருட்டும் .....
மறவாதே.... 
இதுவும் நடக்கும்... 

தமிழ் தாயே

0 ரசித்தவர்கள்













மண்ணாய் மரமாய் 
ஜடமாய் திரிந்தேன் .....
உன் பார்வை பட்டு 
துளிர்த்தது .....
என்னுள் ஒரு 
மாற்றம்...
இப்போதெல்லாம் 
எதை பார்த்தாலும் 
ரசிக்கிறேன்... 
இளமை கொப்புளிக்க 
கவிதை எழுதுகிறேன்.. 
இடையிடையே 
என்னுள் வந்து வந்து 
போகிறாய்.. 
நான் சுவாசிக்கும் காற்றாய்... 
நாபிகமலத்தில் - என் 
நரம்பு மண்டலத்தில்...
செங்குருதியில்... 
எல்லாமாய் 
வியாபித்து 
என்னை 
புதியவனாய் 
புத்திமானாய் 
மாற்றினாய்... ....
அனைத்தும் 
செய்தாயே 
தமிழ் தாயே... உன் 
பாதம் தொட்டு 
வணங்கினேன்......
கண்களில் வழியும் 
கண்ணீரை 
துடைக்கிறாய்..... 
என்னையும் 
கவிஞன் ஆக்கினாய்... 
என்ன பேறு பெற்றேன் 
இப்படி நான் 
அவதானிக்க 
அவனியில் 
பவனி வர.... 
வார்த்தை இல்லை 
சொல்வதற்கு.... 
வார்த்தையால் 
கட்டிய 
வாடா மாலை இது... 
ஏற்றுகொள் தாயே 
என் உள்ளம் குளிர..... 




-ஜெயராமன் பரத்வாஜ்-

புதிர்கள்....

0 ரசித்தவர்கள்









சிறகடிக்கும் எண்ணங்கள் 
சிறிது சிறிதாய்.....
கடிவாளம் போடப்பட்ட 
எருதாய்.....
சேணம் கட்டப்பட்ட குதிரையாய்....
ஒரு சேர பயணிக்கையில்... 
எண்ணிலடங்கா சிதறல்கள்.. . 
போய் சேரும் இடம் சரியா...
வாயிற் காப்போன் விடுவானா...
விரட்டி அடிப்பானா.. 
விடுதியில் இடம் கிட்டுமா... 
புதிதாய் சேர்ந்த கல்லூரி 
பாடங்கள் எளிதாய் இருக்குமா...
சேக்காளிகள் ஒத்துழைப்பார்களா? 
ஒதுக்கி வைப்பார்களா?
ஒன்றும் தெரியாது.....
தேக்கி வைக்கப்பட்ட 
புதிர்களுக்கு ....
விடியலில் 
விடை காண .....
உங்களை நாடி..... 

உச்சி வெயிலில் 
வெறும் காலில் 
நடக்கையில் ....
சூரியனின் வெப்பம்...
உடம்பை குத்தும் 
ஈட்டிகளாய் குளிரின் உச்சம்...
பனிகாலத்தில்... 
இவை அனைத்தும் 
பழகி போன 
உடம்பிற்கு... 
அவள் பிரிந்து சென்ற 
தினம் முதல்.. 
அவள் சென்ற திசையை 
ஆவலாய் பார்க்கும் கண்களே... 
திரும்பி வந்துவிடுவாளா... 
மாட்டாளா.....
என சிந்தை கலங்கி... 
சிதிலமாகி போனதே... 
உடம்பு மரத்து போன 
உணர்வுகள்... 
இயற்கையை தாங்கும் 
சக்தியை கொடுத்த இறைவா....
இதை தாங்கும் சக்தியையும் 
கொடுத்திருக்க கூடாதா?? 


பயணம்

0 ரசித்தவர்கள்






கருவறையில் விதைக்க பட்ட 
கல்லறை பயணம் இது... 
அஞஞானத்தில்
மெய்ஞானம் காண.. 
அத்தனையும் மீறி...
பாவத்தில் பாவத்தை 
கழுவி... 
தேகத்தின் சுத்தம் 
புண்ணியங்கள் 
அறியா ....
செய்யும் கர்மவினை 
திரும்ப திரும்ப 
வந்தடையும் ....
சுவற்றில் வீசப்பட்ட 
பந்தாய்.....
காற்றில் புதைக்க 
முடியாத ....
வினைகள் இது.... 
புதைந்து போன 
ரகசியங்கள்.... 
யாரறிவார்... 
பரம்பொருளை தவிர.... 
யாருக்கும் தெரியாது 
என்றெண்ணி...
செய்யும் செயல்களை ....
சிரித்தவாறே பார்கிறான் ...
பித்தன் ஒருவன்... 
கல்லறை போகும் போது...
கணித்து சொல்வான்...
உனக்கிருக்கும் 
பிறப்பு குறிப்பு... 
பிறவா வரம் கூட...
கிட்டலாம் ...
மனிதனாய் நீ இருந்தால்... 
மரணம் கூட 
உன்னை வணங்கும்.... 

தினமும் மலரும் 
மலருக்கு தெரியாது...
சூட போவது... 
தேவனிடமா....
தேரடியா...
தேவகியா..... இல்லை 
மக்கி போகும் 
மயானமா... 
ஏதும் தெரியாது... 
அதை போல் தான்...
வான் மழை பொழியும் 
நீர்....
சேரும் இடம் தெரியாது...
பாகுபாடுஇன்றி 
பயணம் செய்கிறது... 
ஆறறிவு கொண்டு...
ஆற்றல் பல கண்டு.... 
அனைத்தும் அறிந்த 
மானிடா... 
நீ மட்டும் ஏன்
பாகு படுத்துகிறாய் 
மனதை மாசு 
படுத்துகிறாய்... 
கீழோன்...மேலோன்... 
என 
பகுதி பிரித்து 
வாழ்கிறாய்...
இருப்பவன் எல்லாம் 
மேலோன் என்றால்.. 
இல்லாதவன் எல்லாம் 
கீழோனா...... 
பிறப்பில் உண்டோ... 
இவையெல்லாம்.. 
இறப்பில் உண்டோ... 
இவை அனைத்தும்...
இடுகாடு போகும்போது... 
அனைவரும் ஒன்று தான்...
சேமிக்க பட்ட செல்வங்கள் கூட 
நிரந்தரம் இல்லை... 
மரணம் ...............
சொல்லும் மந்திரம் என்ன...
கட்டி இருக்கும் கோவணம் கூட... 
வெட்டியான் உருவி விடுவான்... 
அக்னியில் உன்னை 
பொசுக்கும் போது 
நீ உணர்வதென்ன? 
உணராத வரை 
நீயும் ஒரு பொணம் தான்.....

ஆறறிவு பெற்ற 
மனிதன் கண்டான் 
அணுவில் ஒரு ஆபத்து... 
ஆனால்... 
அவையெல்லாம் 
கூட 
நிறுத்த முடியவில்லை... 
இயற்கையின் சீற்றத்தை... 
இப்போதாவது புரிந்து கொள்... 
நீ மேலே செல்ல செல்ல... 
சேரும் தூரம் 
மிக அருகில் ...