மன்னர் ஆட்சி



மன்னர் ஆட்சி 

இதுவரை சரித்திரத்தை நாம் திரும்பி பார்த்தோம்!! மாறாக...
சரித்திரம் திரும்புகிறது.....
தனி நாடு கோரிக்கை எங்கும் ஒலிக்க தொடங்கி விட்டது...!!
பாரதி பாடிய பாடலுக்கு மரியாதை குறைகிறது....!!!
"முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்புறம்  ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் -
சிந்தனை ஒன்றுடையாள்!!!!"
அந்த வரிகளுக்கு உள்ள அர்த்தம் புரியாது
அரசியல் அவலம் இங்கு அரங்கேறுகிறது!!!
தனி நாடு கோரிக்கை எவ்வளவு பெரிய முட்டாள் தனம்!!!
பஞ்ச தந்திர கதைகளில் சொல்லாத கருத்துக்களா??
ஆண்டாண்டு காலமாய் அடிமை பட்டு இருந்தோம் !!
அப்போது கூட நிம்மதியாய் தான் இருந்தோம்...
சுதந்திரம் என்ற வார்த்தை ஒலிக்க தொடங்கி...
இன்றுவரை சுவாசிக்கும் காற்று கூட வரி ஆகிறது  !!!
 இந்தியாவை கூறு போட கோடாலிகள் தயார்!!!
பாரத மாதாவை காப்பாற்ற யாரிங்கு உளர்?
சட்டம் ஒழுங்கு வார்த்தையாக மட்டுமே இருக்கிறது??
தடி எடுத்தவன் தண்டல் காரன் என்பது போல்..
இனி அடுத்தவன் வருகை மிக எளிதாகி விடும்!!!
இந்தியன் என்று சொன்னால் மட்டும் போதாது!!!
இளைஞனே எழுந்து வா...
தினவெடுத்த தோள்கள் எங்கே??
தீமையை தீமையால் தான் வேரறுக்க முடியும்!!!
ஒன்று பட்ட பாரதம் என்று பேரிகை முழக்கு!!!
இளைய சமுதாயமே
நாளைய இந்திய கணுவு இருக்கட்டும்..!!!
இன்றைய நிலையை நீ உணரந்துகொள்!!!
வாழ்க பாரத மணி திரு நாடு!!!


1 Response to "மன்னர் ஆட்சி"

  1. Aravind Manickam Says:

    Amazing one :P