1 ரசித்தவர்கள்
மழையே நீ
நேராக கடலில்
போய் விழலாமே
எங்கள் வீதிகளில் '
உலா வருவதில்
உனக்கென்ன ஆனந்தம் ?
உன் பலத்தில்
ஒரு பாதி கூட
எங்கள் தெருக்களுக்கு
கிடையாது
நொடியில் உடைந்து போய்
சிதிலமாகி போகும்
பள்ளங்கள் தெரியாமல்
வாகன ஓட்டிகள்
வீழ்ந்து எழுவதை
காண உனக்கென்ன ஆவல் ?
உன் மீது எனக்கிருந்த
அவாவை
அறவே ஒழித்துவிடாதே!!
அன்பை தவிர வேறறியேன் !!

  

2 ரசித்தவர்கள்
என்னை அடிக்கும்போது
வலி தெரியவில்லை
 நீ என்னை கடந்த பிறகு
வலியை உணர்கிறேன்
என்னை தொடாமல்
என்னை அடிக்க
உன்னால் மட்டுமே முடியும்
உன் கண்களுக்கு வலிமை
அதிகம் தான் !!!

பேசிய வார்த்தைகளுக்கு
உயிர் இருந்தால்
இன்றும் அது
உன்னை
நேசித்ததை
உளமார
சொல்லிருக்கும்

உனக்கென்ன பைத்தியமா
மழையில் நனையும்
என்னை ஏளனம் செய்தனர்
என் நண்பர்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
மழையில் நனைவது
பிடித்த விஷயம் என்று
நீ என்னிடம் சொன்னது??

 

3 ரசித்தவர்கள்




எழுத்தாணி பிடித்து

எழுதிய காலம் போய்
இணையத்தில் எழுதும்
காலம் வந்தாலும்
இலவசம் என்ற சொல்
இருக்கும் வரை
இந்தியா ஒளிராது

பிச்சை காரர்கள்
நிறைந்த நாடு
பிச்சை பற்றி
அறிந்த நாடு
எங்கள் அரசியல்
கூட பிச்சை கேட்டு
தான் ....
ஆன்மிகம் பேசினாலும்!!
பகுத்தறிவாக பேசினாலும் !!!

புண்ணியம் தேடி
காசிக்கு செல்லும் பக்தா!!
எல்லாம் உனக்குள் அடக்கம்
கீதையும் அதை தான் சொல்லுகிறது
உன்னை சுற்றி அனைத்தும் இருக்கும்போது
உலகை சுற்றி ஆராய்வதேன்?

280 லட்சம் கோடி
வெளிநாட்டு வங்கியில் முடக்கம்
ஆனாலும் இன்றும் பிச்சை
எடுக்கும் அரசியல் வாதிகள்
இந்தியா இன்றும்
பிச்சைகார நாடு தான்
நிமிர விடாமல்
முதுகெலும்பை
இலவசத்தால் வளைத்து
வைத்திருக்கும்
வித்தை
இவர்களால் மட்டுமே
முடியும் போலும்??

அன்னை

1 ரசித்தவர்கள்

 அன்னை 

அறியா பருவம் தனில்
அன்பை மட்டுமே உணர்ந்து
ஆதரவை கரம் பிடித்த கைகள்
அன்னையின் முந்தானை விட்டு
என் தமக்கையின் முந்தானையை
கெட்டியாய் பிடித்து கொண்டேன்
"தத்துபுத்திரன்" என்ற பட்டமும்
வாங்கி கொண்டேன்  -இன்றும்
அவள் தான் எனக்கு அமுது ஊட்டுகிறாள் !!
என் மீது உரிமையோடு சண்டையும் போடுகிறாள்
கடிகார முள் சில சமயம் தவறுதலாய் மணி காட்டும் -
இவள் காட்டும் கரிசனம் சொல்லில் அடங்காது !!!
எத்தனை தவறு செய்தாலும் -
முகம் காட்டாது என்னை அரவணைக்கும்
அன்பு நெஞ்சம் !!
காலம் ஒரு ஆசான்
எதையும் நமக்கு தாமதமாய் புரிய வைக்கும்
இவள் அன்பும் அப்படிதான்
புரியாத புதிராய் இருந்தவள்
புரிந்த பின்
நெகிழ்கிறது !!
போருக்கு பின் அமைதி
அனைவரும் அறிந்த ஒன்று
அமைதியாக இருக்கும் கடல்
ஒரு சமயத்தில் பொங்கும்
ஆனால் எவ்வளவு
ஆவேசம் இருந்தாலும்
ஒரு நொடியில்
மறந்து விடுவாள் !!!
இவளிடம்
இன்றும் நான் யாசிப்பது
இவளுடைய அன்பை மட்டுமே - இவள்
அன்பை மட்டுமல்ல
ஆஸ்தியையும் அள்ளி தந்தாள்
மறுபிறப்பில் இவள் மகவாய்
உயிர் எடுக்க ஆசை
இனியொரு பிறப்பு
எனக்கு இருக்கும்
என்ற பட்சத்தில்    

0 ரசித்தவர்கள்
 அவதார புருஷர்

உயிர்கள் ஜனிப்பது
உறவுக்காக
உறவுகளால்
உயிர் ஜனிக்கும்
நான்கு விரல்களாய் இருந்தோம் 
ஐந்தாம் விரலாய் அவதானித்தார்
உன்னதமாய் உயிர் எடுத்து 
உறவாய் வந்த வரவு
சேகர் என்ற பெயரோடு
தமக்கை கொண்டு வந்த சீர் -
உறவாய் வந்து
உயிரில் கலந்த உன்னதம்
இன்று நினைத்தாலும்
கனவாய் தோன்றும்
நிழலாய் மனதில்
நிஜங்கள் ஓடும்
ஒட்டி இருந்த உறவுகள்
வெட்டி போன போது
கண்ணின் இமையென
காத்து நின்ற தனயன்
இறைவனை கண்டதில்லை
இவரை கண்ட பிறகு
இறைவனை காணும்
எண்ணம் எனக்கில்லை
இனியொரு பிறப்பு
இப்புவியில் இருந்தால்
இவருடைய அங்கமாய்
இருக்க ஆசை
இதயமாய் இருந்தால்
இதமாய் இருப்பேன்
காலாய் இருந்தால்
இவரை சுமப்பதில்
இறுமாப்பு கொள்வேன்
எதுவாய் இருந்தாலும்
அதனதன் பலனை
அக்கணமே தருவேன்
இருந்தவரை
இதுவரைக்கும்  
இவரிடம்  
நான் பட்ட கடனை
எப்படி செலுத்துவேன்
நன்றி என்ற ஒற்றை வார்த்தை
இதழ் சொன்னாலும்
இதயம் விம்முகிறது
இவருடைய
கனிவு மிகு
கருணைக்கு
தலை தாழ்த்தி
வணங்கினேன்
வழங்கினேன்
வாழ்த்துப்  பா!!

சுடும் உண்மை

2 ரசித்தவர்கள்
சுடும் உண்மை 

ஒட்டிய வயிறு
ஒடுங்கிய கன்னம்
கலைந்த கேசம்
கண்களில் மிரட்சி
ஒரு பிடி கவளம்
உண்ணும்வரை...

வண்ண வண்ண தொலைகாட்சியில்
வண்ணமாய் தெரிந்த படத்தில்
வறுமையும் தெரிந்தது
ஏழையின் சிரிப்பில் இறைவன் தெரிவான்
ஏழை எப்போது சிரிப்பான்??
இறைவனை காணும் ஆவலில்
இறைஞ்சுகிறேன் ???


தினமும் என்னை கவனி
இயந்திரத்தின் மீது
எழுதப்பட்ட வார்த்தை
எழுதபடாமல் இருக்கும்
ஏழையின் வயிறு!!!

குசேலன் கூட
பணக்காரன் ஆனான்
கண்ணனின் கடை பார்வையில்
கடைசி வரை ஏழை மட்டும்
ஏழையாகவே இருக்கிறான்
கரை ஏற்ற கண்ணனை
காணோம் ??

இல்லாதவர்களுக்கு
இலவசம் தரும் அரசே
அவர்களால் இயன்றதை
பெற ஏதாவது செய்
பிச்சை என்ற வார்த்தை
அகராதியில் கூட வேண்டாமே !!!!

ஒட்டு கேட்டு வரும்
அரசியல் வாதி
வரும்போதே
கத்து கொடுக்கிறார்
பிச்சை எப்படி
எடுக்கவேண்டும் என்று!!!

எங்கள் ஊரில்
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை தான்
ஏழை கூட
பணக்காரன் ஆகிறான்
அரசியல் வாதி உபயத்தில் ....

ஒவ்வொரு முறையும்
தவறாது வந்து
ஒட்டு கேட்டு செல்லும்
தலைவன் தவறியும்
தொகுதி நலன் கருதி
எதுவும் செய்யவில்லை
தன் சுயநலத்தை தவிர??

2 ரசித்தவர்கள்

 அக்கா பொண்ணு 

தாய் பத்துமாதம் கருவில் சுமந்தாள்!!!
தந்தை தன் நெஞ்சில் சுமந்தார்!!!
தனயன் கைகளில் தாங்கினான் !!-
தாய்மாமன் ஈடு செய்ய இவளுக்கு ஒரு
வாழ்த்துப்பா எழுதினேன் -!
என்னால் இயன்றதை தான் முயல்கிறேன் !
"மாமோய்" என்று மதுரமாய் அழைத்தவள் !!!
நால்வர் ஓடுவோம் கூப்பிட்ட மாத்திரத்தில் -
பேசும் பொற்சித்திரம் இவள் -
கண்கள் பேசியதை யாரேனும் கண்டதுண்டோ ?
மொழி இல்லாமல் விழியால் பேசுவாள் -
சிறு பிராயம் முதல் "வெற்றி" என்ற
வார்த்தைக்கு விளக்கம் அளித்தவள் !! 
வெற்றி இருக்கும் இடத்தில வீரம் இருக்கும்
வீரம் இருக்கும் இடத்தில கருணை இருக்கும்
கருணை இருக்கும் இடத்தில அன்பு இருக்கும்
அன்பு இருக்கும் இடத்தில செல்வம் இருக்கும்   
ஆனால் இவை அனைத்தும் இருந்தாலும்
அமைதியாய் இருப்பாள் -
 நிறை குடம் நீர் தளும்பாது -
 நிதர்சனமான உண்மையை
உண்மையாய் உணர்த்தியவள் -
உலகம் கண்ட மாமனிதர்கள்
உறவாய் அமைதல் பேறு
இவளும் அப்படி தான்
இவளை உறவாய் பெற்றது
நான் பெற்ற பேறு !!

நிலவு இவளிடம்
நாணத்தை பயின்றது
மின்னல் இவளிடம்
சிரிக்க கற்றது
காற்று இவளிடம்
நிதானத்தை கற்றது
அற்றனைகள்
அனைத்தும் கற்றது
அடியேனும் கற்கிறேன்
அமைதியாய் இருக்க !

   

6 ரசித்தவர்கள்


அற்றினைகள்


வாசம் தரும் மலர்கள் - அதன் 
வாசம் அறிவதில்லை 

மேகம் தீர்க்கும் தாகம் - அதன் 
தாகம் தெரிவதில்லை 

செழித்து நிற்கும் கதிர்கள் - அதன் 
பசி அறிவதில்லை 

பொதி சுமக்கும் எருது - அதன் 
சுமை கண்டதில்லை 
நிழல் தரும் மரங்கள்  - அதன் 
நிழலில் ஒய்வதில்லை 
 அற்றினைகள் அனைத்தும் 
அடுத்தவர் நலன் கருதும் போது !!
ஆறறிவு மனிதன் மட்டும் -
அனைத்தையும் களவாடி 
அதற்கும் ஊறு செய்கிறான் ?? 
அறிவானா அவன் குற்றம் ?? 
இயற்கை தந்த சீதனம் 
இடர் தராது காப்போமே ??
 

காதலும் கற்று அற

1 ரசித்தவர்கள்

காதலும் கற்று அற

உன் விழி மூடி யோசிக்கையில் 
என்னுலகம் இருளானது - நீ
விழி திறந்து   பார்த்தாய் 
என் மதி இழந்து போனது !!

எனது விழியிடம் கேட்டேன் - 
பார்த்தவற்றில் 
உன்னை கவர்ந்தது ஏதென்று ?
அழுத்தமாய் ஒற்றை வரியில் 
உன் பெயரை தான் சொன்னது...?

நெருப்புக்கு அணை நீர்
நீருக்கு அணை காற்று 
காற்றுக்கு அணை மழை 
இயற்கை மட்டுமல்ல 
இணையாக நீ இருந்தால் 
எதையும் என்னால் 
ஈடு செய்ய முடியும் ...?

மழை பொழியும் போது 
சொட்டும் நீர் குமிழ் போல் 
அவ்வபோது வந்து போகிறது 
உன்னை பற்றிய நினைவு !!! 

தூவானமாய் இருக்கும் வரை 
மழைக்கு அழகு ....
பெருமழையாய் வந்துவிட்டால் 
குடையை தேடும் மனது ....
அரணாய் இருக்கும்போது  
அல்லல் இல்லை 
அது மழைக்கு மட்டும் அல்ல
உனக்கும் சேர்த்து தான் !!!

மழலை பேசும் கிள்ளைக்கு 
மடி திறந்தாள் அன்னை 
கவி பாடும் எனக்கு - நீ 
என்ன தர போகிறாய்? 
பரிசாக எதை கொடுத்தாலும் 
பரிவோடு ஏற்றுகொள்வேன் !!!

வழிப்பறி அதிகம் தான் 
ஆனால் நீ பறித்தது 
என்னை அல்லவா? 
யாரிடம் புகார் கொடுக்க? 
அதையும் நீயே சொல்லு ?

காவல் நிலையத்தில் 
அனைவரும் இருக்கும்போதே
என்னை கவர்ந்து சென்றாய் ?
நீ என்ன என் இதயத்திற்கு 
காவலாளியா? இல்லை 
கள்வியா? 
பூட்டுக்கள் இல்லாமல் 
சாவிகள் இல்லாமல் 
திறந்து இருந்த 
என் இதயத்தை 
நேற்று பழகிய நீ 
பூட்டி வைத்து சென்றாயே ?
துடிப்பது என் இதயமடி ?
கிராதகி ... 

எல்லாவற்றுக்கும் 
மாற்று வசதி  இருக்கிறது 
தொலைந்து போன 
என் இதயத்திற்கு 
ஈடாக எதை தர போகிறாய்?

நீ வீட்டில் செல்லமாய் 
வளந்திருக்கலாம் 
என்னையும் ஏனடி 
குழந்தையாய் கொஞ்சுகிறாய் ? 
நீ கிள்ளி கிள்ளி 
என் கன்னங்கள் வலிப்பது 
உனக்கெங்கே தெரிய போகிறது? 
ஆனாலும் சுகமாய் தான் இருக்கிறது!!??!!

அனைவரும் வந்தனர் 
அனைவரும் போயினர்
ஆனால் நீ வரும்போது 
மட்டும் ஏனடி 
எனக்குள் இத்தனை நடுக்கம்? 
ஒரு பிரளயத்தை உண்டுபண்ணிவிட்டு 
ஒன்றுமே அறியாமல் போகிறாயே??

இத்தனை  நாளாக தொலைவில் இருந்து பார்த்தேன்
இன்று தான் அருகமையில் வந்தேன் 
அருகே வர வர அதுவரை 
என்னோடு இருந்த தைரியம் 
உன் அருகில் வந்த உடன் 
அரவமே  இல்லாமல் வெளியேறியது !!
குனிந்த தலை நிமிரவே இல்லை 
உன்னை கடக்கும் வரை??

என்னை உற்று பார்ப்பதை 
எப்போது நிறுத்த போகிறாய் ?
விழிகளில் தேக்கி வைத்திருக்கும் 
காதலை உன்  இதயத்திற்கு 
சொல்லி அனுப்பு !!
மற்றவை இதயம் அறிந்துகொள்ளும்  -
சொல்லாத வரை மனம் கூட 
பிணம் தான்!!!






5 ரசித்தவர்கள்




மதராச பட்டினம்


இயக்கம் :  விஜய் 
ஒளிப்பதிவு :  நீரவ் ஷா 
இசை           : பிரகாஷ் G.V.
எடிட்டிங்  : அந்தோணி 
தயாரிப்பு : கல்பாத்தி அகோரம் 

நடிகர்கள் :  ஆர்யா , நாசர்,பாலா சிங் , ஹேமா பாஸ்கர், பாலாஜி, ஜீவா 
நடிகைகள்  : ஆமி ஜாக்சன் . 


படத்தின் தலைப்பை பார்த்து விட்டு ஏதோ நகரத்தை பற்றிய படம் என்று எண்ணி விடாதீர்கள் !!! ரத்தமும் சதையுமாய் உணர்வுகளை உள்வாங்கி சொல்லப்பட்ட படம் ,
அட!!  தமிழ் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அருமையாய் ஒரு படம். 
மிக நேர்த்தியாய் சொல்லப்பட்டு இருப்பது மிக நன்று. 
இயக்குனர் மிகவும் சிரத்தை எடுத்து இந்த கதையை ஒரு காப்பியமாய் நமக்கு தந்திருப்பது சிறப்பான விஷயம். 
ஒருவரை ஒருவர் மிஞ்சி கதாபாத்திரமாக மாறி தங்களுடைய  பங்களிப்பை 
முழு ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்து  கொடுத்திருப்பது பாராட்டுகுரிய  விஷயம்
கதையும் , கதை களமும் கையாண்டு இருக்கும் விதமும் மிக அருமை. 
காட்சி அமைப்புகள் , கலை நுனுகக்கங்கள் , ஒளிப்பதிவு, இசை அனைத்தும் தூண்களாய் இருந்து இந்த படத்தை தாங்கி நிற்பது மிக சிறப்பு. 
படத்தில் குறையை பூத கண்ணாடி வைத்து பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது.
ஆனாலும் மேல் தட்டு மக்களுக்கும் கீழ் தட்டு மக்களுக்கும் நடக்கும் போராட்டம் இன்னும் எத்தனை காலம் தான் சொல்ல போகிறார்கள் என்பது படத்தின் பலவீனம் தான்.

இது இந்திய சுதந்திரத்தின் கால கட்டத்தின்  போது எடுக்கப்பட்ட படமாகையால் அனைத்தையும் கவனம் கொண்டு காட்சி காட்சியாய் நம் மனதில் பதிய வைத்திருக்கிறாய் இயக்குனர். அதற்காக அவரை மனதார பாராட்டலாம். 


காதலை இவ்வளவு அழகாய் சொல்ல முடியுமா? இறந்து போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ் மஹால் ஆகட்டும், அதன் பொலிவு இன்றும் காதலின் சின்னமாய் நம் மனதில் பதிந்துள்ளது , அதை போல் தான் இந்த படமும் , கதையின் கரு காதலை மையமாக கொண்டு சொல்ல பட்டு இருப்பதால் நம்மை பல இடங்களில் அட போட வைத்து விடுகிறார்  படத்தின் இயக்குனர். 
  
படத்திற்கு வலு சேர்ப்பது ஒளிப்பதிவும் , இசையும் , கண்ணுக்கு குளிர்ச்சியாய் ஒளிப்பதிவு என்றால்(நன்றி நீரவ் ஷா ) , காதிற்கு இனிமையாய் இசை , பின்னணி இசையாகட்டும், பாடல்கள் ஆகட்டும் நன்கு தேர்ந்திருப்பது  (நன்றி : G.V.பிரகாஷ்) இவர் சிகரம் தொடும் காலம் வெகு தூரம் இல்லை . படத்திற்கு படம் இவர் மெருகு பெற்று இருப்பது உண்மையில் பாராட்டுக்குரிய விஷயம். 

கதாநாயகன் ஆர்யா  இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொமொரு பொக்கிஷம் 
தனக்கென ஒரு தனித்தன்மையை இவர் படத்திற்கு படம் மாறு பட்டு காட்டிருப்பது உண்மையில் அசத்தலான விஷயம். இவர் வரும் ஒவ்வொரு காட்சியும் மிக நன்று 
சிறப்பான தோற்றம் மொத்த படத்துக்கும்  குத்தகை தாரர் இவர் தான்.  நடிப்பில் நல்ல தேர்ச்சி . நாசர் , பால சிங் , ஹேமா பாஸ்கர், அனைவரும் நல்ல தேர்வு,

சம காலத்திற்கு படம் நகரும் சமயம் கால் டாக்ஸி ஓட்டுனர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் அவரோடு நடக்கும் சம்பாசனை சற்றே ஆயாசமாய் இருக்கிறது, தவிர்த்து இருக்கலாம்!

கதாநாயகி மிக நல்ல தேர்வு, அறிமுகம் என்ற சுவடே தெரியாது ஆர்யாவுக்கு  போட்டியாக ஒவ்வொரு இடத்திலும்  மனதில் பதிய வைக்கிறார் ஆமி ஜாக்சன் . 

பூட்டி வைக்கப்பட்ட இதயத்தில் திறந்து வைக்கப்பட்ட ரகசியம் காதல் மட்டுமே
காதலை மையபடுத்தி சொல்லப்படும் எந்த படமாக இருந்தாலும் அதில் புதுமை இருந்தால் தான் மக்கள் அங்கீகாரம் கிடைக்கும். இந்த படத்திலும் அதுபோல் சுவாரஸ்யமான பக்கங்கள் உள்ளது. 


படம் துவக்கம் முதல் முடிவு வரை தொய்வு இல்லாது சிறப்பாக எடுத்து செல்வது இயக்குனர் என்றால் , அதை இணைத்து கொடுத்திருப்பது அந்தோணி யின் சிறப்பான எடிட்டிங்கும் தான் .  இதைனையும் சொல்லிவிட்டு படத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை என்று எண்ண வேண்டாம்.

இதை திரையில் சென்று பார்க்க வேண்டிய படம் என்பதால் சிறப்புகளை மட்டும் சொல்லி உங்கள் மனதில் படம் பார்க்கும் எண்ணத்தை  விதைக்கும் எண்ணமே அன்றி வேறு ஒன்று இல்லை. 

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. மதராச பட்டினம் தவிர்க்க கூடாத படம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

மொத்தத்தில் ஜன ரஞ்சகமான படம். 

"காதல்" என்ற வார்த்தையில் உள்ள "ஜீவனை" காண அனைவரும் மதராச பட்டினம் சென்று வாருங்கள் .

review rendered by 
jayaraman bharatwaj.
9840550333   
 
   

0 ரசித்தவர்கள்




நிழல் உருவங்களை
நிலவு ஒளியில் கண்டதுண்டா?
கிளை இல்லா மரம்
கரங்கள் வெட்ட பட்ட
வீரனை போல்
கம்பீரமாய்
விண்வரை வளர்ந்து
காற்றின் கோர பிடியில்
சொந்தங்களை இழந்து
துயரத்தின் முனையில்
இருந்தாலும்
துளிர் விடும்
நம்பிக்கை என்னும்
தாரக மந்திரம்
மரத்திற்கு
தெரியும் போலும் !!!

ஹைக்கூ

2 ரசித்தவர்கள்



சிறை பிடித்த வார்த்தைகள்
கவிதையாய் !!!!
சிறை பிடித்த இதயங்கள்
காதலாய்!!!!
சுதந்திரமாய்  இருந்தால்
எதுவுமே நிலையாய் இல்லை...

உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் எதுவுமில்லை
ஆனாலும் உன்னிடம் பேச
காரணம் வேண்டுமா என்ன?

காலையில் விழித்தவுடன்
கண்ணாடி பார்க்கிறேன்
என் கண்ணில் எப்போதும்
நீ இருக்கிறாய் என்பதற்காக

உனக்கும் எனக்கும்
என்ன சம்பந்தம் ? -கேட்கிறாய்
உன்னிடம் என்னை
தொலைத்துவிட்டு
நான் படும்
அவஸ்தை தெரியாமல்?


கூடு விட்டு கூடு பாயும்
வித்தை
காதலில் மட்டுமே
காரணம்
அவளுக்காக
இவன் படும்  அவஸ்தை

உயிர் இருக்கிறது
எப்படி தெரியும் ?
இதய துடிப்பாய்
நீ இருக்கும்போது !!
மட்டுமே

உலகம் உருண்டை
உலகறிந்த உண்மை
நீ மட்டுமே அழகி
நான் மட்டும் அறிந்த
உண்மை !!!!

ஆலயம் ஆண்டவன்
இருக்கும் இடம்..
அவள் இருக்கும் இடமே
எனக்கு ஆலயம் !!!

என்னை உன் கண்ணால்
தினமும் அடிக்கிறாய்
ஆனாலும் எனக்கு
சுகமாய் தான்
இருக்கிறது...!!
நிறுத்திவிடாதே !!!

மயக்கும் உன் விழிகளை
கொஞ்சம் மூடிகொள்
மருத்துவர் எல்லாம்
உன் வாசலில்
மயக்க மருந்து
மிச்சமாம் !!!

இதயத்தை
பறவையோடு ஒப்பிடாதீர்
எப்போது பறக்கும்
என்று யாராலும்
கணிக்க முடியாது !!!

கொலுசு அணிந்த
உன் கால்கள்
நக பூச்சோடு
உன் கை விரல்கள்
மையிட்ட உன் கண்கள்
இதை எழுதினாலே
கவிதையாய் தெரிகிறது
உண்மைதானே?

பல நிறங்களில் -  நீ -
உடை அணிந்தாலும்
உன் வெட்கபுன்னகையில்
அவைகள் நிறங்கள்
அற்று போகின்றன !!!

உன்பெயர் சொல்லி
அழைக்கும்போது
தேனை   தடவிய
சுளையாய்
நாவில் இனிக்கிறது !!
எனக்கு மட்டுமே!!!

முதன் முதலில்
உன்பெயரை உச்சரித்தேன்
 திரும்பி பார்த்து
புன்னகை பூத்தாய்
இப்போதெல்லாம்
உன்பெயர் தான்
எனக்கு மந்திரமாய் !!!

நேயர் விருப்பமாம்
அவர்களுக்கு தெரியுமா
என்னுடைய விருப்பம்
நீதானென்று ??

உதட்டு பூச்சு
நக பூச்சு
நகை பூச்சு
எல்லாம் சரி
அதென்ன
வெட்கபூச்சு?
யார் சொல்லி கொடுத்தது? 

 

ஹைக்கூ

0 ரசித்தவர்கள்



ஹைக்கூ


பனித்துளிகள் காற்றோடு
பூக்களின் மீது
சரசமாட  -
சந்திர ஒளியில்
ஒளியும் -ஒலியும

உன்னை தேடி தேடி
காலணி கூட
பழையதாகி போனது  - ஆனால்
உன்னை பற்றிய நினைவு மட்டும்
புதிதாய் - இன்று பழகியதை போல்.... 

உலகம் அறிந்த அழகி -  நீ
உன் நிழல் தொடும் அருகதை அற்ற
அசிங்கம் நான்
ஆனாலும் நமக்குள் நடந்த
வேதியல் மாற்றம் தான் காதலா?

நிலவில் கால் வைத்த
ஆர்ம்ஸ் ஸ்ட்ரோங்
நிச்சயம் உணர்ந்து இருப்பான்
ஒரு பெண்ணை ஸ்பரிசித்த உணர்வில்
நிலவு ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் !!!

எத்தனையோ நிழல் உருவங்கள்
என் வீட்டு மாடியில்
உன்னை மட்டும் கண்டுபிடித்தேன்
எப்படி என்று கேட்டாய் ??
உன்னை மட்டும் அல்ல - உன்
நிழலையும் சேர்த்து தான்
பதித்திருக்கிறேன் என் விழியில் !!!

உள் வாங்கி வெளி விடும்
மூச்சை கூட கொஞ்சம்
பிடித்து வைக்கிறேன்
உன் வாசம் வரும்போது ,,,!


என்னை பித்தனாகி
விட்டதாய் பெருமைகொண்டாய்
பித்தனாய் இருந்த நான்
புத்தனாய் மாறியதை
அறியாமல் ...!

அடிக்கடி நகம் கடிக்கிறாய்
எங்கள் வீட்டில் என்னை
திட்டுகிறார்கள் - உபயம்
உன்னால்  தானடி  ?

கனலாய் கக்கிய
உன்பார்வை  - என் மீது
அனலாய் மோதியதில்
சென்னை வெயில்
எனக்கு குளிரடித்தது

மோகத்தை மறைக்காதே
உன் முகம் காட்டி
"கண்கள் "
என்னிடம் கெஞ்சுகிறது
 

அவளோடு உரையாடல்

2 ரசித்தவர்கள்







மழை வரும்போதெல்லாம்
குடையை மறந்தாலும்
உன்னை மறப்பதில்லை!!!
தேங்கிய குட்டையாய்
உன் நினைவுகள்...!!!

உன் சிரிப்பை பார்த்து
நாட்கள், மாதங்கள்,
வருடங்கள் ஆனாலும்
உன் வெட்க புன்னகை ஒன்று போதும்
இவை அனைத்தையும் மறந்து போக!!!

உன் பெயரை
சொல்லும் யாரும் -
எனக்கு எதிரி அல்ல
அது உன் எதிரியாக
இருந்தாலும் கூட!!

தனியாய் நடந்தேன்
துணையாய் வந்தாய் -
இப்போதும் நான்
தனியாக தான் இருக்கிறேன்
உன் நினைவுகளோடு
உறவாடிக்கொண்டு

இருப்பதை எல்லாம்
கொடுத்து விட்டேன்
ஆனாலும் எனக்கு
கவலை இல்லை -ஏனெனில்
கேட்டது நீயல்லவா?

குறுந்தகவல் தான்
ஆனால் நீ படிப்பதால்
அது தொடர்கதையானது!!

உன் மேல்
விழுந்த மழை துளி - கூட
சந்தோஷ படுகிறது
உன்னை தொட்டு விட்ட
சந்தோஷத்தில் !!

நீ என்னை பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
மாண்டு பின் உயிர்ந்தேழுகிறேன்
உன்னால் எனக்குள் நடக்கும்
அதிசய விளையாட்டு!!!

நீ செல்லமாய்
சிணுங்கும் போதெல்லாம்
கொலுசு மணிகள்
வாயை மூடி கொண்டன
உன் மீது பொறாமை கொண்டு!!!


உன் மீது கோவம்
கொள்ள ஆசை ?
அப்போதுதான் - நீ என்னை
சமாதான படுத்த
இதழ் பதிப்பாயே?

உன்னிடம் ஏதாவது
பெறவேண்டும் என்று
ஆவலாய் உள்ளது !!
இதழால் அடிப்பாயா?

உன்னை தொட - எனக்கும்
காற்றுக்கும் போட்டி
காற்றிடம் நான் தோற்று போனேன்
ஆனாலும் என் மனதை
முதலில் தொட்டது நீ தான்
என்று தேற்றினாய்!!!

2 ரசித்தவர்கள்





என்னிடம் சொல்லாமல்
காலன் எடுத்து சென்ற
என்னுயிர் அண்ணனை
தினமும் தேடுகிறேன்
அண்ட வெளியில்
ஆவியாய் இருந்தாலும்
ஆத்மாவாக இருந்தாலும்
ஆதரவாய் இருந்தான்
தோள் சாய ......
அழுதால் துடைக்கும் - கை
அவனாக தான் இருக்கும் ....
என்னிடம் எதை கேட்டாலும்
கொடுத்து இருப்பேன் காலனுக்கு
உயிர் எடுத்த பிறகு
உடலுக்கு என்ன வேலை
அவனை எரித்தேன்
உலாவுகிறேன்
உயிரோடு பிணமாக...
கண்களில் காந்தம்
அவனுக்கு மட்டுமே சொந்தம்..!
அதனால் தான் அதை பிறர்க்கு
அளித்துவிட்டான் உவகையோடு ...!
என்னுடன் பயணித்த காலங்கள்
இனி கிட்டுமா?
அழுவது தெரியாது
சிரித்து மழுப்புகிறேன்
வாழ்க்கை நாடகம் தான்
இப்போது புரிகிறது...
புரிய வைத்துவிட்டு
பறந்து போய்விட்டான்
காற்றோடு...!!!!

தவறிய தருணங்கள்

1 ரசித்தவர்கள்


வழி தவறிய
செம்மறி ஆடு..
கசாப்பு கடையில்
அலங்கார பொருளாய்
அதன் தலை....!!!

வகை வகையாய் மீன்கள்
வரிசையாய் ....
விற்றால் தான்
விறகு எரியும்
மீன்காரி வீட்டில் - பசி
ஏக்கத்துடன்
அவளின் கைக்குழந்தை
பாலுக்கு அழுகிறது...

உன்னிடம் உள்ளதை
கொடுத்துவிட்டு
ஊமையாய் அழுகிறேன்
இதயம் தொலைந்துபோன
துக்கத்தில் ....!!
இன்று
நினைவு நாள்
புதைந்துபோன
காதலை
புதுப்பிக்க ஒரு
நாள் தாருங்கள் !!
மீண்டு உயிர் வாழ?

சொல்லி கொள்ளாமல்
சென்றது அவள் - ஆனாலும்
இன்றும் அழுகிறது
அவளை பற்றிய
என் நினைவு மட்டுமே!!!

எனக்கு தெரியும்
அவள் என்னை
காதலித்ததை விட
என்னுடைய
பரிசை மட்டுமே!!!

என்னுடைய கவிதையை
ரசித்து பேசினாள்
என்னுடைய காதலை
நிராகரித்தாள் - இன்றும்
ரசிக்கிறாள் ....!!!

எழுதுகோல்
ஏட்டை காதலித்தால்
கவிதை குழந்தை
பிறந்தது...!!!

அப்படி என்ன இருக்கிறது
காதலில் ?
காதலித்து தோற்று போன
தந்தை கேட்டார்?

காதல் ஒருமுறை தான்...
அங்கீகரிக்க
பட்டால்!!
சத்தம் இல்லாமல்
இதயத்தோடு இதயம்
சேரும் விந்தை
காதலில் மட்டுமே !!!

இருமனம் சேர்ந்தால்
திருமணம் -
இன்றும் எனக்கு
தனியாவர்த்தனம் தான் !!

பாவூர் ராஜா கவிதைகள்

குறுந்தகவல்

2 ரசித்தவர்கள்




கட்டண தேதியும்
கடன் வசூலிப்பும்
கச்சிதமாய் வருகிறது
குறுந்தகவலாக

காதல் செய்தியை
தூதாக
குறுந்தகவலில்
அனுப்பினாள் - கல்யாண
பத்திரிக்கை
கூரியரில் வந்தது!!
சரியான விலாசத்துடன்

கைபேசியின்
பயன்
குறுந்தகவல்
களஞ்சியமே

குறுந்தகவல்
விலாசம் தெரியாத
தபால் காரன் போல்
எவர்க்கும் கிடைக்கும் - உபயம்
கைபேசி மட்டுமே!!

கைபேசிக்கு
பிடித்த வார்த்தை
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் உள்ளார்!!!

பிச்சை காரன் கையில் - இருக்கும்
கைபேசியின் ரிங் டோன்
"அம்மா தாயே " !!!!

கைபேசியின்
அழைப்புக்கு
காரிகையின் பதில்
டயல் செய்த எண்ணை
சரிபார்க்கவும்!!!

கைபேசி
நம்கூடவே
இருக்கும் எமன்
பொய்கள் உற்பத்தி
ஆகும் பாசறை
நுணலும் தன் வாயால் கெடும்
என்பதை போல!!

காலையில்
கைபேசியில் விழித்து
குறுந்தகவல் படித்து
காலை கடன் முடித்து
கிளம்பு முன்
இன்று ஒரு தகவல்
இனிய நாளாக !!

காதல் ஒரு அனுபவ பாடம்

2 ரசித்தவர்கள்

காதல்
திறந்து வைக்கப்பட்ட இதயத்தில்
மூடி வைக்கப்பட்ட ரகசியங்கள்
விழிகளில் உறவாடி
இதழ்களில் விளையாடி
இரவில் மட்டும்
விழித்திருக்கும் செவிகள்
கண்கள் பனித்தாலும்
இமைகள் மூடாது
விடியும் வரை
இருட்டோடு
போட்டி போட்டு
விழித்திருந்து
மொழி பேசிய
மௌன கதைகள்
ஏராளம்..!!!
கோபத்தை கூட
குரலில் காட்ட முடியா
கும்மிருட்டுக்கும் கேட்காது
பேசிய வார்த்தைகள் ...!!
இரவு எங்களுக்கு காவலன்
நிலவு தான் எங்கள்
திண்ணை விளக்கு
நேரம் பார்த்து பேசியதில்லை
நெடிய பயணம் அது
சுவாரசியமாய் இருக்கும்
கணக்கில் அடங்காது
திருமணம் இல்லாமல்
நாங்கள் குழந்தையோடு
கொஞ்சி விளையாடிய
நிகழ்வுகளும் உண்டு
பேர் வைக்க சண்டையும் உண்டு
நினைத்து பார்த்தால்
சிரிப்பாய் இருக்கும்
ஆனால்
காதலில் மட்டுமே
இது சாத்தியம்
கற்பனை திறன்
அதிகரிக்க
காதலித்து பாருங்களேன் ...!!!
நீங்களும் கவி பாடுவீர்கள்
கவி பாடும் அனைவரும்
நிச்சயம் காதலை
உணர்ந்து இருப்பர்!!!
இல்லை என்று சொன்னால்
உண்மை உரைக்கவில்லை
என்று தான் பொருள் ...!
எவரையும் குறிப்பிட்டு
சொல்லவில்லை...!!
என் அனுபவத்தை
உங்களிடம்
பகிர்ந்தேன்..
அவ்வளவே!!!

காதல் ஒரு அனுபவ பாடம்

haikoo

1 ரசித்தவர்கள்




செடியில் இருந்து
விழுந்த மலர்
செடியில் ஒட்டுவதில்லை..
உடைந்துபோன மனங்களும் தான்!!

பொய் பேச தெரியாது
கபடம் அறியாது இருந்தேன் !!!
காதலிக்கும் வரை!!!
இப்போது பொய்
என்னிடம் கற்கிறது!!!
பொய் சொல்ல...???

எனக்கு தெரியாது
எதை வேண்டுமானாலும்
எடுத்து செல்
என் இதயத்தை தவிர!!!
பிடித்தவற்றை பிரியத்துடன்
கொடுத்தல் சுகம்!!!


அழுதால் அழுவேன் ...!!
சிரித்தால் சிரிப்பேன் ...!!
உன்னுடைய நிழல்
பிம்பம் நான் தான்!!
உன் முகத்தை
கண்ணாடியில் பார்ப்பது போல்!!

பூக்கடையில் அளந்து
கொடுக்கிறார்கள் பூக்களை
அவர்களிடம் சொன்னேன் !!
பூக்களை அளக்காதீர்கள்
அழகுக்கு அளவு கிடையாது!!!

சிரத்தையாக
எழுதினேன்
பரீட்சையில் தோல்வி
சிந்தித்து எழுதினேன் -
கவிதை
காதலில் வெற்றி !!!

எப்போதும் சுற்றி வரும்
நீ
இப்போதெல்லாம்
வருவதில்லையே?
நிழலை பார்த்து
நிஜம் கேட்டது ...
குடையை மடக்கும் வரை..

உன்னிடம் சொல்லாமல்
தினமும் கடந்து
செல்கிறேன் ...
ஆனாலும் எனக்கு தெரியும்
நீ என்னை மட்டுமே
பார்க்கிறாய் என்று?!!?

உனக்கு மட்டும் சொல்கிறேன்
உன்னை பேதலிக்க வைக்க
என்னை தவிர
யாரும் இலர்!!