அன்னை

1 ரசித்தவர்கள்

 அன்னை 

அறியா பருவம் தனில்
அன்பை மட்டுமே உணர்ந்து
ஆதரவை கரம் பிடித்த கைகள்
அன்னையின் முந்தானை விட்டு
என் தமக்கையின் முந்தானையை
கெட்டியாய் பிடித்து கொண்டேன்
"தத்துபுத்திரன்" என்ற பட்டமும்
வாங்கி கொண்டேன்  -இன்றும்
அவள் தான் எனக்கு அமுது ஊட்டுகிறாள் !!
என் மீது உரிமையோடு சண்டையும் போடுகிறாள்
கடிகார முள் சில சமயம் தவறுதலாய் மணி காட்டும் -
இவள் காட்டும் கரிசனம் சொல்லில் அடங்காது !!!
எத்தனை தவறு செய்தாலும் -
முகம் காட்டாது என்னை அரவணைக்கும்
அன்பு நெஞ்சம் !!
காலம் ஒரு ஆசான்
எதையும் நமக்கு தாமதமாய் புரிய வைக்கும்
இவள் அன்பும் அப்படிதான்
புரியாத புதிராய் இருந்தவள்
புரிந்த பின்
நெகிழ்கிறது !!
போருக்கு பின் அமைதி
அனைவரும் அறிந்த ஒன்று
அமைதியாக இருக்கும் கடல்
ஒரு சமயத்தில் பொங்கும்
ஆனால் எவ்வளவு
ஆவேசம் இருந்தாலும்
ஒரு நொடியில்
மறந்து விடுவாள் !!!
இவளிடம்
இன்றும் நான் யாசிப்பது
இவளுடைய அன்பை மட்டுமே - இவள்
அன்பை மட்டுமல்ல
ஆஸ்தியையும் அள்ளி தந்தாள்
மறுபிறப்பில் இவள் மகவாய்
உயிர் எடுக்க ஆசை
இனியொரு பிறப்பு
எனக்கு இருக்கும்
என்ற பட்சத்தில்    

0 ரசித்தவர்கள்
 அவதார புருஷர்

உயிர்கள் ஜனிப்பது
உறவுக்காக
உறவுகளால்
உயிர் ஜனிக்கும்
நான்கு விரல்களாய் இருந்தோம் 
ஐந்தாம் விரலாய் அவதானித்தார்
உன்னதமாய் உயிர் எடுத்து 
உறவாய் வந்த வரவு
சேகர் என்ற பெயரோடு
தமக்கை கொண்டு வந்த சீர் -
உறவாய் வந்து
உயிரில் கலந்த உன்னதம்
இன்று நினைத்தாலும்
கனவாய் தோன்றும்
நிழலாய் மனதில்
நிஜங்கள் ஓடும்
ஒட்டி இருந்த உறவுகள்
வெட்டி போன போது
கண்ணின் இமையென
காத்து நின்ற தனயன்
இறைவனை கண்டதில்லை
இவரை கண்ட பிறகு
இறைவனை காணும்
எண்ணம் எனக்கில்லை
இனியொரு பிறப்பு
இப்புவியில் இருந்தால்
இவருடைய அங்கமாய்
இருக்க ஆசை
இதயமாய் இருந்தால்
இதமாய் இருப்பேன்
காலாய் இருந்தால்
இவரை சுமப்பதில்
இறுமாப்பு கொள்வேன்
எதுவாய் இருந்தாலும்
அதனதன் பலனை
அக்கணமே தருவேன்
இருந்தவரை
இதுவரைக்கும்  
இவரிடம்  
நான் பட்ட கடனை
எப்படி செலுத்துவேன்
நன்றி என்ற ஒற்றை வார்த்தை
இதழ் சொன்னாலும்
இதயம் விம்முகிறது
இவருடைய
கனிவு மிகு
கருணைக்கு
தலை தாழ்த்தி
வணங்கினேன்
வழங்கினேன்
வாழ்த்துப்  பா!!