சூறாவளி 
வானத்தை தொடும் அளவுக்கு 
ஆழியை போல் காற்றை கண்டதுண்டா?? 
சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர்!!!
சுற்றி சுற்றி வந்து சுருட்டி செல்லும்...!!!
யானை வாயில் போன கரும்பு போல்...!!
இதற்கு விதி விலக்கு கிடையாது.....!
தேசத்திற்கு தேசம் வித்யாசபடும் !!
பேரும் கூட தான்!!!காட்சி விரிவது 
திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் தான்!!
அதுவும் பாலை வனமாய் இருந்துவிட்டால்...
சொல்லவே வார்த்தை போதாது...!!!
தூரத்தில் ஆரம்பித்து...அருகில் அருகில்..
மிக அருகில் வரும்போது...
மணல் காடாய் .....
பெரிய மாளிகையும் இதற்கு முன்னால் 
பூஜ்யம்தான்...!!!
மழையை விரட்டி விரட்டி இது 
விளையாடும் சடுகுடு...
காற்றும் மழையும் 
இயற்கையின் பிள்ளைகள்...
இறைவனின் ஈடு இல்லா 
படைப்புகள்...!!!
அவைகளுக்குள்ளும் 
பாகு பாடு உண்டு...
மென்மையை தாங்கி வரும்
தென்றல் கூட காற்று தான்...!!!
காற்றுக்கு தடை கிடையாது..!!
எங்கும் எப்போதும்.....
நம் மூச்சாக!!!


 




1 Response to " "

  1. mano Says:

    arumaiyana varnainai..suravaliyai paatha anubavam....azhagu..