நினைவு பெட்டகத்தில் சாரலாய் சில துளிகள்

0 ரசித்தவர்கள்
மௌனமான இரவு பொழுதின் சுவர் கோழியின்
சீழ்க்கை மட்டும் அடிக்கடி தூக்கம் கலைக்க ....!!!

தூக்கத்தை துடைத்துவிட்டு இருட்டை வெறித்தேன்
கருமேகம் மழையை தூது விட துடித்தவாறே......!!!!


புள்ளிகள் வைத்தவாறே மழையும் தொடங்கியது
பூமியை நனைத்தவாறே......!!!!

குளிர் தென்றலும் சாமரம் வீச கிளைகளும்
தாலாட்டு பாடி கொண்டே.....!!!!

மண்ணின் மணத்தை நுகர்ந்தவாறே மெல்ல
ஜன்னலின் அருகமர்ந்து மழையை ரசித்தேன்.....!!!

தனிமையில் இருப்பதிலும் எல்லாம் மறந்து
இயற்கை ரசிப்பதிலும் இருக்குமொரு ஏகாந்தமே....!!!!

தூரத்தே தெரிந்த விளக்கொளியில் மழை துளிகள்
முத்துக்களாய் ஜொலித்தவாறே......!!!!!

மின்னிய் முத்துக்கள் என்னின் முகத்தில் தெறித்தே
மறந்து போன என்னின் நினைவை மீட்டெடுத்தே....!!!!

இப்படி ஒரு இரவில் கொட்டும் மழையில் நம்மின்
கலவியும் இருட்டுடன் ஐக்கியமானதே....!!!!

இதழ் பிரித்து இருட்டுக்கு தெரியாமல் நீ கொடுத்த
முத்தமதில் என்னின் கன்னங்களும் சிவந்தே...!!!!

கீழ் உதடும் மேல் உதடுமாய் மாறி மாறியே
உனக்கு தந்த முத்தத்தில் ரகம் பிரிக்க வகை பிரிக்க ...!!!

மன்மதனும் ரதியுமே பொறாமை கொண்டு
மறைந்தோடி போனாரே.....!!!!

ஆடை விலகிய பதுமையை அணு அணுவாய் ரசித்தே
அட்டையாய் ஒட்டி கொண்டே.....!!!!

ஊர்ந்து ஊர்ந்தே மேலேறி உச்சம் முதல் கால் வரையில்
காம கணைகளை வீசியவாறே....!!!

குத்தும் ரோமகற்றைகளும் உணர்ச்சி பிரதேசத்தில்
முத்துக்களை அள்ளி தெளித்தவாறே.....!!!!

அச்சமும் நாணமும் விலகி போன தருணத்தில்
ஆண்மையும் பெண்மையும் மென்மையாய்......!!!!

குறியோடு குறி நோக்கி மோக மழை கொட்ட
கொட்டும் மழையும் சற்றே நிதானித்தே....!!!!

துய்த்ததொரு இச்சையும் இன்று வரையில்
நிஜமாய் மனதில் நிழலாய் படரும் நினைவுகள்....!!!

ஓ...!!! இன்றும் என் தூக்கம் கெட்டே அதனோடு
என்னின் அமைதியும் பறந்தே.....!!!!

வெறிக்கிறேன் இருளை மீண்டும் ஒரு அத்யாயமாய்
ஆரம்பமானது அடுத்த ஜனனம்.....!!!!



-----//-----------------////-----------------////--------------------/////------////


மூங்கில் காட்டில் வண்டாய் துளை போட்டே
காற்றின் வேகத்தில் துளையோடே வந்துலாவும்
சங்கீதமாய்....!!!!

என் நெஞ்சு கூட்டில் எப்போது போட்டாயடி
குருதி பெருக துளை விழுந்தே என்னோடு
கலந்தாய் சுவாசமாய்...!!!

தண்ணீரில் அமிழ்ந்த காற்றடைப்பானாய்
சிக்குண்டு தவிக்கிறேன் உன்னொடுனான
அன்னோன்னியமான அருகாமையில்....!!!!

மூச்சு திணறுகிறது சந்தோசத்தில் மனதினுள்
இனம் புரியா உற்சாகமும் சீழ்க்கையுமாய்
மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட....!!!!

ஆசை ஆசையாய் கேட்கிறது மனம்
அள்ளி தரும் எச்சில் முத்தங்களை
எண்ணிக்கையே இல்லாமல் சிவக்க சிவக்க....!!!!

வாழ்க்கையின் தத்துவமே இதைத்தானோ
சொல்லுகிறதோ இன்பத்தின் ஊற்றாய்
உணர்ச்சி குவியலோடு புணர்ச்சியுமாய்....!!!

சர்ப்பம் தீண்டிய உடலாய் மேனி முழுதும்
வேகமாய் பரவுகிறதே உன் மீதான ஆசை
உன்னை முழுதுமாய் ஆக்ரமித்தே....!!!!

அணு அணுவாய் நுகர்கிறேன் உன்னின்
வாசத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரையில்
இப்போதெல்லாம் பெண்ணின் வாடை
மிகவும் பிடித்தமானதாய்....!!!!

மெல்ல மெல்ல உச்சத்திற்கு செல்கிறேன்
உன்னின் துணையோடே.....!!!! 
 
-----//--------------////--------------------/////-------------------/////---------------


சிறகுகள் இல்லாமலே என்னின் எண்ண பறவை
பறக்கிறதே நீயிருக்கும் இடம் தேடியே.....!!!!

வாசம் தேடும் மலராய் உன்னின் வாசம் தேடுகிறதே
என்னின் சுவாசமும்....!!!!

மௌன ஒத்திகை நடத்துகிறேன் உன்னோடு பேசவே
மனனமாய் சில வார்த்தைகளும் கூடவே...!!!!

நமக்குள் இருப்பதெல்லாம் வெறும் நட்பென
நினைக்கிறேன் சில சமயங்களில்....!!!

என் மீது நீ காட்டும் கரிசனம் அவ்வபோது என்னின்
தாயார் காட்டும் அன்பாய் தெரிகிறது.....!!!!

உரிமையாய் நீ கண்டிக்கும் போதும் சரி
உறவாடி கண்ணடிக்கும் போதும் சரி ....!!!!

எனக்குள் பிரளயமாய் பிரவாகமாய் நீ
ஆக்ரமிக்கும் போது தான் உணர்கிறேன்
நம்மிடையெயான காதலை...!!!

தொலைந்து போகிறேன் உனக்குள்ளே
தொலைத்து கொள்கிறேன் மீட்பதெற்கேனும்
நீ வருவாயென...!!! 
 
 
//----------////-------------/////----------------------//////---------------//////--------


குளத்தில் தெரிந்த நிலவின் நிழலை நிஜமென
துரத்தும் பேதையாய் மனது...!!!!

கழுதையாய் மனது பொதிகளை சுமந்தே
நினைவு படுகையில் சுமை தாங்கியாய்.....!!!

பெண்ணெனும் மாயை என்னையும் கவர்ந்தே
நானும் கவிழ்ந்தே .......!!!!!

நித்தமொரு பிம்பமாய் காட்சி பிழையில்
பாதரசம் தாங்கிய பிரதிபலிப்பில்......!!!!

விழிகள் இருந்தும் பெயர் தெரியா நகருக்கு
தன்னந்தனியனாய் பயணிக்கிறேன்.....!!!

இன்றேனும் கடந்திடுமோ என்னை தொடரும்
நிழலும் தான் வெளிச்சம் பாயும் ராப் பொழுதில்....!!!!

முற்றும் துறக்க மனமில்லாது பற்றி கொண்டு
நிற்கிறேன் ஆசையெனும் தூண்டிலோடு....!!!!

//---------------////----------------////------------/////---------/////-----------////----

பனி பெய்யும் பொழுது கவிந்த இருட்டும்
களவு செய்யவும் கலவி செய்யவும்
ஏற்றதாய் ....!!!!!

இரண்டுமே ஏதோ மோகத்திலும் வேகத்திலும்
கவர்ந்து செல்லும் மானுட தேவையாய்
இருப்ப்தும் எடுப்பதுமாய் வாழ்க்கை....!!!!

ஊர்ந்து செல்லும் காலம் கூட சற்றே
ஒய்வாய் மௌனமான இருட்டும் கூட
மெல்லமாய்.....!!!!

சலனமே இல்லாமல் காற்றும் கூட
பூக்களோடு களித்து கொண்டே
மகரந்தசேர்க்கைக்கு கட்டியமாய்...!!!

இரண்டாம் சாமம் நெருங்க நெருங்க
எங்கோ கேட்கும் நாயின் ஓலம் கூட
மனதிற்குள் சங்கடமாய்......!!!!

இரவின் தாலாட்டில் தொட்டிலில்
தூங்கும் மழலையாய் மனது
தூக்கம் தேடியே.....!!!! 
 
//------------////------------------------/////--------------------////------------- ////

என்னின் நாட்குறிப்பில் பல நாட்கள்
தொலைந்து போன பக்கங்களிலிருந்த சில
தொலையாத உன்னின் நினைவுகள் என் மனதில்.....!!!!

ஆழமாய் மூச்சிழுத்தே சுவாசிக்கிறேன் மனதினுள்
வெற்றிடமாய் ஆகி போன உன்னின் இருப்புகள்
இன்றும் வெற்றிடமாய்.....!!!

மந்தகாசமாய் புன்னகைக்கிறேன் அதனொடே
மறைக்கிறேன் என்னின் மன அழுத்தங்களை
மருந்திட்டாலும் மறையாத வடுக்களை....!!!

எப்படி வந்தாய் ஏன் வந்தாய் எப்போது சென்றாய்
ஏதும் நானறியேன் வந்ததும் இருந்ததும் சென்றதும்
நீ தான் ஏதும் சொல்லாமலே......!!!

உன்னின் மௌனம் எனக்கு சம்மதமாய் அதே
மௌனம் தான் என்னை கொல்லும் விடமாய்
முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல்....!!!!

இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறேன்
ஒரு தலை முழுதும் பாரமாய் அழுத்தியே
சுக்குநூறாய் வெடித்ததாய் உணர்கிறேனே....!!!!

என்னோடு பேசிய பழகிய விரும்பிய நாட்கள்
மட்டுமே கனவாய் இருந்ததோ...? நிஜமாகி போன
உறவுகள் மட்டும் பொய்த்து போனதே....!!!!

வெற்றிடமாகி போன இதயத்தை அப்படியே
விட்டுவிட்டேன் மறுபடியும் நீ வரக்கூடுமென
மனதிற்குள் ஒரு நப்பாசையாய்....!!!

///---------------////-------------------/////----------------/////---------------//-///-///


மௌன ஒத்திகையில் மனம் மட்டுமே லயித்து
கலவி குறித்தே சலனங்களில் சஞ்சலம் மறந்தே

நள்ளிரவு தொடும் நேரம் ஏகாந்தமாய் மனதினுள்
துள்ளி குதித்தே கரை புரண்டோடும் ஏக்கத்தின்
இன்னொரு முகமாய்....!!!!

பின்னிய சர்ப்பமாய் புணர்ச்சி விதிகளை
மீறியதோர் கலவியும்....!!!!

ஆதாம் ஏவாளை நினைவு படுத்தியே
ஆடைகளை துறந்தே ஆசைகளை
வரித்தே....!!!!

ஜனன மரண ஒப்பந்தத்தின் தொலைந்து போன
பக்கங்களாய் பெண் சிசுவதையும்...!!!

பெருமை கொள்ள மனம் நாணுதே பாரத தாய்
திருநாடு எனும் பேச்செடுக்கையில்லெல்லாம்....!!!

இப்படி ஒரு இழி செய்லை செய்வதும் ஒரு
பெண்ணெனும் போதே நெஞ்சமெல்லாம்
பதறுதே....!!!

தாய் திருநாடு தாய் மொழி எல்லாம் சரி
பெண் என்றாலே போக பொருளாய் எண்ணும்
நிலை என்று மாறும் இந்த அவனியில்...!!!!

வெட்கி தலை குனிகிறேன் ஆணாக பிறந்ததையெண்ணி.....!!!! 
 ----------////---------///-----///....///-------/////-------------------//////////-----------/////