வெளிச்சத்தின் பிம்பம்......





இறுக்கமாய்
மூடி இருந்த
மனதினுள்...
வெளிச்சம்
புக முடியா
குகைக்குள்ளும்
கீற்றுகளாய் ...
ஒளிகற்றைகள் .....
பிரமித்து போனேன்..
மெல்ல மெல்ல
தெரிந்தது...
வந்தது
ஒளியல்ல...நீ ....
இதயத்தை
ஓட்ட வைத்தாலும்
அதில் ஒட்டிய
சுவடு தெரிவதை போல்...
அவ்வபோது நீ
கீறுகிறாய்...
வழிகிறது
செங்குருதி.....
ஆனால்
வலி தெரியவில்லை...
மரத்து போன
நெஞ்சிற்கு
இதுவும்
ஒரு காயம் தான்....
சிரிக்க முயல்கிறேன்...
உதடுகள் அசைகிறது...
உள்ளமோ அழுகிறது...
மறைக்க திரை
போட.....
திரையிலும் நீ...
வெளிச்சத்தின்
பிம்பம்......
வெளியேறுமா?
வெறுமையை
சுவைத்த படி .....

0 Response to "வெளிச்சத்தின் பிம்பம்......"