skip to main |
skip to sidebar
எழுதியது
jayaram
Monday, August 1, 2011
9:15 AM
1 ரசித்தவர்கள்

என்னை அடக்கம்
செய்ய கல்லறை தயார்.....
உன்னுடன்
யான் புரிந்த
மௌன யுத்தம்
மெல்ல மெல்ல
அடங்கி...
அடங்கி...
காற்றாய்
ஓசையாய்
ஏதும் இல்லா
பிம்பமாய்...
அண்ட வெளியில்
அலை பாய்கிறது....
ஆவியாகி போன
அரை நொடியில்
உன் சிரிப்பை
பார்த்து
மொத்தமாய்
நொறுங்கி தான்
போனேன்..
உன்னை நினைத்தது
உலகில் பெரிய
பாவமாய்
உணர்கிறேன்
உரு பெற்று
எழுகிறேன்
மீண்டு வருகிறேன்
மாய தீயை
அணைத்து விட்டு
மெய்யாய் என்னை
உணர்ந்து கொண்டு...
கருவாகி
உருவாகி
உயிராகி
ஊனாகி
மண்ணாகும் வரை
மறவேன்.... பெண்ணால்
மாண்டவன்
பெண் எனும்
மாயையில் இருந்து
மீண்டவன்