நிழல் உருவங்களை
நிலவு ஒளியில் கண்டதுண்டா?
கிளை இல்லா மரம்
கரங்கள் வெட்ட பட்ட
வீரனை போல்
கம்பீரமாய்
விண்வரை வளர்ந்து
காற்றின் கோர பிடியில்
சொந்தங்களை இழந்து
துயரத்தின் முனையில்
இருந்தாலும்
துளிர் விடும்
நம்பிக்கை என்னும்
தாரக மந்திரம்
மரத்திற்கு
தெரியும் போலும் !!!

0 Response to " "