ஹைக்கூ
































இந்த உலகில்
கேட்காமல் எதுவும்
கிடைக்காது...
அன்பும் தான்!!!

நீட்டிய கை
தானாய் சுருங்கியது
அவள் மனம் போல்!!
நட்பிற்கு இலக்கணம்
தேவை இல்லை!!!                                                              
பாகுபாடு
தேவை இல்லை
எண்ணிக்கை தேவை இல்லை !!


உதாசீனம்
மிக பெரிய விசயமன்று
அதை நீ செய்யும் வரை!!!
அடுத்தவர் செய்யும்போது தான்
நம் தவறு நமக்கே தெரிகிறது!!!
நாம் செய்யும் வரை ...?

இன்று ஏசுநாதர்
இருந்திருந்தால்
கட்டாயம் சொல்லிருப்பார்
ஒரு கன்னத்தை காட்டுமுன்
அதற்கு அவன் தகுதியா என்று!!!


என்னை மிகவும்
பாதித்தது
அவள் என்னை
உதாசீனபடுத்தியது அல்ல !!
என்னை கேலி பேசியது!!
அவள் என்ன வானில் இருந்தா வந்தால்?
வயிற்றில் இருந்துதானே வந்திருப்பாள்?

என்னை முழுதுமாய்
தொலைத்தேன்
அடையாளம் தெரியாது
அருவமாய்
அப்போதாவது
உனக்கு தெரியாமல்
உன்னை நேசிப்பேனே?
நீ என்ன செய்ய முடியும்?

என்னுடைய தேடல்
பணங்களை அல்ல
மனங்களை மட்டுமே!!
இன்றும் அது தேடலில்
ஜீவன் அடங்கும் வரை...
அது தொடரும் !!!


உண்மையில்
சுருங்கி இருப்பது
தொட்டால் சுருங்கி அல்ல!!
மனங்கள் மட்டுமே!!!



கடவுளை கண்டவர்
கலங்கியது இல்லை
கலங்கிய எவரும்
கடவுளை கண்டதில்லை!!
உன்னுள் இருக்கும்
உன்னை நேசி
பிறர் உன்னை
கட்டாயம் நேசிப்பார்!!!

0 Response to " "