haikoo





செடியில் இருந்து
விழுந்த மலர்
செடியில் ஒட்டுவதில்லை..
உடைந்துபோன மனங்களும் தான்!!

பொய் பேச தெரியாது
கபடம் அறியாது இருந்தேன் !!!
காதலிக்கும் வரை!!!
இப்போது பொய்
என்னிடம் கற்கிறது!!!
பொய் சொல்ல...???

எனக்கு தெரியாது
எதை வேண்டுமானாலும்
எடுத்து செல்
என் இதயத்தை தவிர!!!
பிடித்தவற்றை பிரியத்துடன்
கொடுத்தல் சுகம்!!!


அழுதால் அழுவேன் ...!!
சிரித்தால் சிரிப்பேன் ...!!
உன்னுடைய நிழல்
பிம்பம் நான் தான்!!
உன் முகத்தை
கண்ணாடியில் பார்ப்பது போல்!!

பூக்கடையில் அளந்து
கொடுக்கிறார்கள் பூக்களை
அவர்களிடம் சொன்னேன் !!
பூக்களை அளக்காதீர்கள்
அழகுக்கு அளவு கிடையாது!!!

சிரத்தையாக
எழுதினேன்
பரீட்சையில் தோல்வி
சிந்தித்து எழுதினேன் -
கவிதை
காதலில் வெற்றி !!!

எப்போதும் சுற்றி வரும்
நீ
இப்போதெல்லாம்
வருவதில்லையே?
நிழலை பார்த்து
நிஜம் கேட்டது ...
குடையை மடக்கும் வரை..

உன்னிடம் சொல்லாமல்
தினமும் கடந்து
செல்கிறேன் ...
ஆனாலும் எனக்கு தெரியும்
நீ என்னை மட்டுமே
பார்க்கிறாய் என்று?!!?

உனக்கு மட்டும் சொல்கிறேன்
உன்னை பேதலிக்க வைக்க
என்னை தவிர
யாரும் இலர்!!

1 Response to "haikoo"

  1. kargil Jay Says:

    அழுதால் அழுவேன் ...!!
    சிரித்தால் சிரிப்பேன் ...!!
    உன்னுடைய நிழல்
    பிம்பம் நான் தான்!!
    super..superb..

    one thing, the nizhal kavithai is very different one... it is not just haiko.. it has something.. to ask 'where are you' the shadow should be present.. when it is present, there is no point in asking it..