போலி முகமூடி



போலி முகமூடி
போலி என்று சொல்லுபோதே - உங்கள் 
முகம் சுளிக்கிறதே - 
தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை 
தன் பிள்ளை என உரிமை கொண்டாடும் 
தன் மானம் இலா கயவர் கூட்டம் - யாரோ 
பெற்ற பிள்ளையை திருடி செல்லும் 
மானம் இல்லா வர்க்கம் -
சமூகத்தில் நடந்தேறும் அவலம்- 
திருட்டு திரை குதிரைகளை தான் -
மனம் வெம்பி கூறுகிறேன் -
பலமாதம் காத்திருந்து - 
இரவு பகல் கண் விழித்து 
ஊண் உறக்கம் பல மறந்து 
உயிரையும் துச்சமென 
ஊசலில் ஆட விட்டு -
வெண் திரையில் நாம் காண
வெந்து மடியும் கலைஞன் -
பிறன் மனை நோக்குவது  - எப்படி பழியோ 
அது போல் தான் இதுவும் -
தான் பெற்ற பிள்ளையை 
தானே கொஞ்ச முடியாத தாய் உள்ளம்!!
மனசாட்சி உள்ள எவரும் இதை 
அங்கீகாரம் செய்யாது இருந்தாலே 
இதன் இறுமாப்பு இல்லாது போகும்
மூடிய கையில் என்ன உள்ளது என்று தான் 
எவரும் நினைப்பர் - இப்படி 
மூடி வைத்த ரகசியத்தை திறந்து 
வைத்த கள்ளன் தன் தாயையும் கூட
விற்று பிழைப்பான் போலும்- 
பிறர் உழைப்பை உறிஞ்சி வாழும் 
அட்டையை அண்ட விடாதீர் 
அன்பு நெஞ்சங்களே !!



4 Response to "போலி முகமூடி"

  1. Unknown Says:

    THE KAVIDHAI WAS GOOD BUTI DIDN"T LIK D WAY U PICTRISE..............EVEN U ALSO DID THE SAME THING.....................உங்கள் கவிதை சுயநலத்திற்காக ஆறறிவில்லா அட்டையின்
    படத்தை அட்டை படமாக அதற்க்கு தெரியாமல் பயன்படுத்தி உள்ளீர்கள்(யாரோ எடுத்த
    புகைபடம்வேறு)பாவம் புகைப்படக்காரர். அவரது உழைப்பும் உறியப்பட்டுள்ளது .............பயப்படாதீர்........... நீங்கள் அட்டைஎன்று
    சொல்லமாட்டேன்........
    பூவில் அழகாய் தேனுரியும்'
    தேன்(நீ)
    அதை திருடியுண்ணும் சாதாரண மனிதன்(நான்).....................இப்போழ்து உங்கள் முகமுடியில் SWEET போலி ஒட்டிக்கொண்டு.............

  2. jayaram Says:

    anbu thozha nee solvathu sarithaan1! anaal prasurikkaatha padathai naan kalavaadi poda villai...! pothu paarvaikku vaikka patta padathai eduthu thaan pottu ullaen!!!

  3. Unknown Says:

    பொதுவாக உள்ள
    பூவில் தென் திருடும் தேனீ மனிதனிடம் மல்லுகட்டுகிறது

  4. Darkmatter Says:

    Nice one