பஞ்ச பூதங்களுடன் யாத்திரை..

 

 

 


பஞ்ச பூதங்களுடன் யாத்திரை...

இருட்டில் தொலைத்த
என் சுதந்திரத்தை...
வெளிச்சத்தில் தேடினேன்...
இருட்டில் தொலைத்தால்
தொலைத்த இடம்
தெரியவில்லை....

முழுவதுமாய்
நனைந்தேன்...
முக்காடு கூட
போடவில்லை...
மழை மீது
இருந்த காதல்...

வெயிலின் அருமை
நிழலில் தெரியுமாம்...
தெரிவதற்கு
இருக்கவேண்டுமே...
மரித்து போகாமல்..?

அந்தி சாயும் நேரம்
அருகருகே
மரங்கள்...
கயிற்று கட்டில்
இறுக்கத்தில்...
சுகமாய் வீசிய
தென்றல்...
தாலாட்டு இல்லாமல்
தூக்கம் வந்தது...

தீயாய்
எழுந்தது
மனதில்...
கொழுந்து விட்ட
எண்ணங்கள்..
அணைக்க முயன்று
தோற்று போனேன்....
ஆசை வெட்கமறியாது...
உண்மைதானோ?

0 Response to "பஞ்ச பூதங்களுடன் யாத்திரை.."