கருவறையில் பொன் குவியல்





கர்ப்ப கிரகத்தில்
கடவுள் இருந்தார்
கூடவே
பொன்னும் பொருளும் ...
பூதம் காத்த காலம் போய்...
இப்போது கடவுளும்
காத்து வருகிறார்...
காலம் காலமாய்...
மன்னர் ஆட்சி போய்
மக்கள் ஆட்சி வந்தது...
இதுவரை யாரும்
நுழைந்ததில்லை...
கருவறையில்...
படையெடுப்பின்
பிரதானமே
கொள்ளை அடித்தல் தான்...
சேமித்து வைத்ததெல்லாம்
பாதாள அறையில் தான்...
திறவு கோல் கூட
ரகசியம் காக்கும்...
எல்லாம் சரி...
எடுக்க எடுக்க
குவியல் குவியலாய்...
ஏழு மலையானே
மலைத்து தான் போனான்...
எண்ணற்ற திரவியம் கண்டு...
சுபிட்சம் என்பது
கேரளாவை பொறுத்தவரை
அதிகாரமாய் ஒலிக்கும்...
அடுத்து...
திருமால் பள்ளி கொண்ட
சீரங்கதிலும் ....
சிவன் கோயில் கொண்ட
தஞ்சையாம்....
காத்திருப்போம்
தங்க வேட்டைக்கு....

0 Response to "கருவறையில் பொன் குவியல்"