காலை மலர்..










இனிய காலையில்
பறவைகளின் சீழ்க்கைஒலிகள்
சங்கீதமாய்.....
விடியலின்
இன்னொரு பரிணாமம்....
மீண்டும் துவங்கும்
புதிய நாளாய்...
உவகையோடு ஏற்று
பறவையோடு மனதையும்
உயர பறக்க விடுங்கள்..
நேற்றைய நினைவுகள்
எச்சங்களாய்..
குப்பையை சேர்க்காது
சுத்தம் செய்யுங்கள்....
வன்மம் வஞ்சம்
வாது சூது
களவு பொய்மை
புறத்தே தள்ளி
புத்தம் புது
மலராய் ...
இந்த நாளை
தொடங்குங்கள்..
காலை வணக்கங்களோடு
கவிதை சொல்லுங்கள்....
கவிதை கேளுங்கள்...

அன்புடன் ஜெயராமன் பரத்வாஜ்.

0 Response to "காலை மலர்.."