skip to main |
skip to sidebar
எழுதியது
jayaram
Tuesday, July 19, 2011
8:56 AM

பேராழியில் சிக்கி சின்னா
பின்னமாயிருந்தாலும் .....
போராடி என் உயிர்
துறந்திருந்தாலும்....
கடல் தாய் என்னை
முழுதுமாய்
விழுங்கி இருந்தாலும்....
பனை உயர மீன்கள்
என் சதையை பிய்த்து
எறிந்திருந்தாலும்
பரிதவிக்க மாட்டேன்
மை விழியில் சிக்கி
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கட்டிய என் கனவு
கோட்டையை ...
கண நேரத்தில்
இடித்து விட்டு
துளியும் சலனமின்றி
துடி துடிக்க விட்டு விட்டு .....
துயரங்களை சுமக்கும்
துறவியாய் ... ...
மௌனங்களை
மட்டுமே பதிலாய்...
வார்த்தைகள் கூட
சிக்கி தவிக்கிறது
சிந்திய கண்ணீரில்
இருந்த ஈரம் கூட
உன்னிடம் இல்லையென
மனம் அலை கடலாய்
ஆர்பரிக்கிறது...