skip to main |
skip to sidebar
எழுதியது
jayaram
Friday, July 1, 2011
8:38 PM
அறிவு சுடர்
மௌனத்தின்
இறுக்கம்
என்னை
மொத்தமாய்
இறுக்கியது...
விழி பிதுங்கிய
சோகத்தில்
கையறு நிலையில்
மெல்ல மெல்ல
நினைவு தப்பியது..
இறுமாப்பு சிரிப்புடன்
அருகாமையில் நீ...
அதிர்ந்து அதிர்ந்து
குலுங்கிய என் மனம்
கொஞ்சம் கொஞ்சமாய்
கெஞ்சியது...
உயிர் போகும் தருணம்...
ஒரு முறையாவது
சொல்லிவிடு...
ஏளனம் செய்யாதே..
என்னுள் கலப்பு
இல்லை...
கனிமத்தில் கூட
கலப்பு இருந்தால்
தான்
பொலிவு ...
ஆனால்...
கரியாய் இருந்தாலும்
பட்டை தீட்டி பார்
உன் கண்களும் கூசும்
என் ஒளி பார்த்து...
அப்போதாவது
புரியுமா...
அப்பழுக்கற்ற
அறிவு சுடர்
என...