மௌன மொழி...







இரவின் நிசப்தம்
காற்றில் கரைந்து
மௌனம் பேசியது
குயிலின் கூவலில்
விடியல் மெல்ல
தலையை எட்டி பார்க்க
சூரியனும் சேர்ந்து
பூவில் மேலுள்ள
பனித்துளியை
துடைத்து
பூக்கள் மலர
அங்கே
தேனீக்கள்
பூக்களோடு
ரீங்காரம் பாட...
மகரந்த சேர்க்கையோடு
பூக்களை
வண்டுகள்
முத்தமிட்டபடி...
பொழுதும் புலர்ந்தது ....
விடியலின் தாக்கம்
மொத்தமாய் தாக்க
புத்துணர்ச்சியோடு
புதிதாய்
தொடங்கினேன்
மற்றுமோர் நாளை..

0 Response to "மௌன மொழி..."