பாதகங்கள்


மண்ணாய்
மலராய்
மயிலாய்
குயிலாய்
எறும்பாய்...
பொதி சுமக்கும்
கழுதையாய்
பால் தரும் பசுவாய்....
பளு தூக்கும் எருதாய்...
விலங்காய் பிறந்திருந்தால்
வினை ஏதும் இல்லை...
ஆறறிவு பெற்று
மனிதனாய் பிறந்ததே
முதல் குற்றமாகி
முதல் கோணல்
முற்றும் கோணலாய்....
வஞ்சம் ...சூது..
நஞ்சு... களவு...
வார்த்தையில் அடங்கா...
பாதகங்கள் செய்வதே
பணியாய்.....
அறிந்து செய்யுமென
பாபங்களே
துரத்தும்
அறியாமல் செய்ய
பிழை அல்ல வாழ்க்கை...
புரிதல் நலம்...
அறிதல் சுகம்...
தன்னை அறிதல்
முழுமை...
தன்னலம்
வீழ்தல்...
மனிதம்....

1 Response to "பாதகங்கள்"

  1. Priyanka Agrawalla Says:

    Nice one jayaram... this was the simple poem tht I understood.. left I felt difficult to understand..

    very well said :)