அன்னை மீனாக்ஷி


அன்னை மீனாக்ஷி

அரைகால் சராய்  போட்டு
அவசர நடை நடக்கும் பொழுது முதல்
அன்ன நடை நடந்து வயோதிகனாகும் வரை
பல சமயங்களில் உன்னை கடந்து சென்றிக்கிறேன்
எப்போதும் நீ சிரித்த முகமாய் தான் எனக்கு காட்சி அளித்தாய்...ஏனெனில்
நீ தான் என் தாய் அல்லவா!!
சேய் பார்த்து சிரிக்காத தாய் உண்டா? -இப்புவியில்
தாய் அறியாத சேய் உண்டு .....
உன்னை கடந்து தான் சென்றேன் என்றேன் ஆனால்
உன்னை கண் கொண்டு பார்த்தது இல்லை....ஆனால் நீயோ
என்னை எப்போதும் கவனித்து கொண்டு தான் இருக்கிறாய்
என் மீது உனக்கு இருக்கும் அக்கறை யார் சொல்லி வந்தது?
உலகாளும் உமையாளே  - உன்னை காண நேரம் கூட இல்லாது
அலுவலாய் நான் அலைந்து திரிந்து பராரியாய் போனேன் ...
துன்பம் ஒன்று இல்லாது இருந்தால் மாய உலகத்தில் உன்னை
நினைத்து பார்க்கும் மனங்கள் எது?
இவ்வளவு சொல்லும் நானே கூட
இடர் வரும் பொழுது தானே உன்னடி பணிகிறேன்
என்னை சுயநலவாதியாக எண்ணிவிடாதே !!!
என்னை நீ  காப்பாற்றி விட்டாய்....என்னால் இவ்வுலகை காண
என் சிசுவை காப்பாற்ற  உன்னை விட்டால் யார் இருக்கா எனக்கு??
நீயே வழி சொல் அதற்கு...

0 Response to "அன்னை மீனாக்ஷி"