பிரார்த்தனை..


பிரார்த்தனை..

பிறருக்கு செய்வதால் தான் அது பிரார்த்தனை ..!!
எப்போதும் எனக்கு என்ற ஒற்றை சொல்லை விட..
நமக்கு என்று சொல்லி பாருங்கள் நாவும் அசையும்..!
பிறருக்காக செய்யப்படும் பிரார்த்தனை கட்டாயம்
பலன் தரும் கற்பக விருச்சம்!!
வாடிய பயிர் கண்டு வாடிய வள்ளலார் முதல்
மானுடம் தழைக்க தன்னையே தியாகம் செய்த
தெரேசா வரை அனைவருக்கும் பொது
பிறருக்காக வாழ் என்ற தாரக மந்திரம் தான்...!!!
தனக்கு என்னை செய்யவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ
அதை மற்றவருக்கு செய் என்று குரானும் கூறுகிறது...!!
மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் பிரார்த்தனை!!!
மனம் ஒன்றி நீ மற்றவருக்கு செய்யும் பிரார்த்தனை
மனித நேயத்தை உனக்குள் விதைக்கும்...! இதில்
மாற்று கருத்து கிடையாது...!!!
பிரார்த்தனை என்பது
பொருள் வேண்டியோ!!
வசதி வாய்ப்பு வேண்டியோ அல்ல!!
பாபர் செய்தது போல் ...
பிறர் உயிர் வாழ வேண்டி
பிரார்த்தனை செய்ய
கடவுளும் கண் திறப்பார்...!!!!

0 Response to "பிரார்த்தனை.."