பயணம்


பயணம்
நெடிதூர பயணம் செல்ல
நெடுநாள் கனவு...
நினைத்து பார்கையில்
மானுட பிறவி கூட
பயணம் போல தான்...
மயானம் போகும் காலம் வரை
பயணித்து கொண்டு தான் இருக்கிறோம் ..
பயணிகள் மாறினாலும் பாதை என்றும்
மாறியதில்லை....
மைல்கற்கள் நம் வயதை அவ்வபோது
அறிய வைக்கும்...
அனுபவம் நம்மை நமக்கே பிரதிபலிக்கும்
ஆற்றல் இருக்கும் வரை
ஆவேசம் கரை கடக்கும்
ஆரழியாய் உருமாற
நமக்கு நாமே குழி வெட்டும்
அதிசயம் கூட நடந்தேறும்...
அமைதியாய் இருக்க
அருந்தவம் புரியவேணும்...
பகீரதனம் செய்தாவது
பணிவை புரிஞ்சுக்கணும்
பக்குவம் அடைந்துக்கணும்
நாடு நடப்பு போற தொட்டு
நாமளும் இருந்துக்கனும்...

0 Response to "பயணம்"