நட்பு

நட்பு   
அரிச்சுவடி எழுதும் காலம் தொட்டு - என்
அருகாமையில் அமர்ந்து  - நீ
அன்பை பகிர்ந்து கொண்டாய் -
ஆசையாய் நீ தந்த எச்சில் மிட்டாயில்
என் நாவில் உன் சுவையை உணர்த்தியது...
ஏளனம் செய்யும் மற்றவரை பற்றி
ஒருபோதும் நீ புறம்  பேசியது இல்லை....
ஒவாமையால் நீ அவதிபட்டாய் !!
ஊசிகள் உன் உடம்பை சல்லடையாய் தைத்தது ....
ஒரு நாள் தீடிரென நீ காணாது போனாய்...
சாமியிடம் சென்றுவிட்டதாக அனைவரும்
ஒருசேர கூறினார்கள்....
அனைவர்க்கும் தெரிந்து சென்ற நீ
என்னிடம் மட்டும் எதுவும் கூறது சென்றுவிட்டாயே???
எப்போது வருவாய்??
உன் சுவை அரிய என் மனம் துடிக்கிறது...
தப்பாமல் வருவாயா??
இப்படிக்கு
செல்லிப்பன்
1 ம் வகுப்பு

0 Response to "நட்பு"