வீட்டின் கேவல்


வீட்டின் கேவல்
இடிந்து போன சுவர்களை பார்க்கும்போது - என்
இயலாமையும் கூடவே வருகிறது.....
வயோதிகம் வந்த உடன்
வியாதியும் என்னுடன் நட்பு கொள்கிறது,,,,
கட்டிய வீட்டை தொட்டு பார்த்து
கரிசனமாய் மனம் எண்ணுகையில் - என்
கையறு நிலை எனக்கே புரிகிறது...
நெடுநாள் பழகிய நண்பன்
மரித்து விட்டான் என செய்தி வந்தால்
மனம் பதறுமே அதை போல்
வித்து விட்ட இந்த வீட்டை பார்கையில்
கண்களின் ஓரம் ஈரம் கசிவதை என்னால்
தடுக்க முடியவில்லை....
மருத்துவம் பார்க்க எனக்கும்
வருமானம் பத்தவில்லை....
இதற்கு தான் என்னை இத்தனை சிறப்பாய் கட்டினாயா?
இடிந்துபோன வீட்டின் ஈன குரல் என் காதில்
ஒலிக்கையில்
என் இயலாமையை எண்ணி
என் மீதே எனக்கு கோவம் வருகிறது!!!

0 Response to "வீட்டின் கேவல்"