Airtel Super Singer Jr. 2009 master ஸ்ரீகாந்த்



Airtel Super Singer Jr. 2009
master ஸ்ரீகாந்த்

பிரம்மா தன படைப்பை
தவறில்லாமல் செய்தது இவனை மட்டுமே!!
சரஸ்வதி இவன் பால் அன்பு கொண்டு
இவன் நாவில் குடி கொண்டாள்!!!
இவனை ஈன்ற தாயும் இன்று
நிச்சயம் பெருமை கொண்டிருப்பாள்,

அரங்கமே கூடி இவனை வாழ்த்தி பேசும்போது
அவை அடக்கத்தோடு இவன் தலை தாழ்த்தி
நிற்கையில் மானுடமே மலைத்து தான் போனது...

நீ பிறக்கும்போதே வரம் வாங்கி வந்தவன்....
நீ அம்மா என்று சொன்ன வார்த்தை கூட
வள்ளுவன் குறளை ஈடு செய்து இருக்கும்...
பால பருவத்தில் அனைவரும் ஓடி விளையாடினால்
ஓரிடத்தில் அமர்ந்து இவன் அனைவரையும் ஓட வைக்கிறான்...
சொல் நயம் மிக அழகு ..
பேசும் பொற் சித்திரம் இவன்...
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது...
இச்சொல் இவனுக்கு மட்டுமே பொருந்தும்...
தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சாமி இவன்....
அட்சரம் பிசகாமல் இவன் உச்சரிப்பு
செம்மொழிக்கு இன்னும் அழகு...
"ல" "ழ" லகரம் ழகரம் எல்லாம்
இவனுக்கு சரளம் .....
இவனை பரிச்சயம் செய்துகொள்ள
இறைவனே பூமிக்கு வந்தாலும்
விந்தை ஒன்றும் இல்லை....
தேவதைகள் முன்னமே வந்து
இவனோடு போட்டி போட்டு
இவன் திறமையை பட்டை தீட்டுவது
இவன் செய்த பூஜாபலன்...
இவன் குரலால் இசையால்
இவ்வுலகை ஆளபோவது திண்ணம்...
இது என்னுடைய எண்ணம்....

12 வருடங்களுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி
இவன் அதுபோல தான்
தவமிருந்து பெற்ற பிள்ளை இவன்.......
தவமே இவனை தவம் இருந்தது...


0 Response to "Airtel Super Singer Jr. 2009 master ஸ்ரீகாந்த்"