தந்தை



 தந்தை

என் வாழ்வின் எனக்கு முதல் அடையாளம் தந்த வள்ளல்,,!!
கண்டிப்பை கருவிலே வளர்த்தவர்..!
முறுக்கு மீசையும் மிடுக்கு பார்வையும்,,,!!!
பார்ப்பவர் நெஞ்சில் ஒரு மரியாதை தானாய் ஓட்டிகொள்ளும் ..!!
எங்களுக்கு இன்றும் இவர் மீது பயம் கலந்த அன்பு உண்டு..!!
மீசையும் பார்வையும் பார்த்து பயபடாதவர்  யாரும் இல்லை!!!
ஆனாலும் எங்களுக்கு இவர் ஒரு பொக்கிஷம்!!!
நன்மை எனபடுவது யாதெனின் தீது இல்லாத சொல் என்ற
வள்ளுவன் வாக்கை நெஞ்சிலே சுமந்தவர்...!!!
வெண்மை இவர் போடும் சட்டை மட்டும் அல்ல இவருடைய கையும் தான்!!!
பட்டாளத்தில் பணிபுரிந்ததால் எங்களுக்கு கதை சொல்லும் ஆசான்!!!
அவர் சொல்லும் கதை கேட்டு எங்களுக்கு தேச பக்தி உதிரத்தில் கலந்தது உண்மைதான்!!!
எனக்கு தெரிந்து அவரிடம் தெரியாத விஷயம் எதுவும் கிடையாது...!!!
பன்மொழி புலவர்....!!!
இசை கேட்டு ராகம் சொல்வதாகட்டும்!!!
ஆங்கிலப்புலமை கண்டு அயலாரும் இவரை தலைவணங்கிய காலம் உண்டு!!!
எனக்குள் இருக்கும் எனக்கு தெரியாத திறமையை
எனக்கே தெரியாது வளர்த்தவர்!!!
எழுத்துலகில் நான் பயணிக்கிறேன் என்றால் அதற்கு இவரும் ஒரு கர்த்தா!!
எல்லா புகழும் இறைவனுக்கே என்று அன்றே சொன்னவர் இவர்!!!
அதிகாலை பொழுதாகட்டும் அந்தி பொழுதாகட்டும் குளிர்ந்த நீரில் தான் தேகம் நனைப்பார்  !!!
தன்னை தானே வருத்தி பிறர் மகிழ மனம் கனிவார்!!!
எங்களுக்கு எல்லா நேரத்திலும் துணிவை புகட்டும்
துரோணர்    இவர் தான்!!!
இன்னுமொரு ஜென்மம் இருப்பின் இவர் மகனாக பிறக்கத்தான்
ஆசை எனக்கு!!!


0 Response to "தந்தை"