அன்னை

 

அன்னை 


என்னை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்தவள்!!!
எல்லை இல்லா கருணை கொண்டவள்!! அவள் 
உதிரத்தை   உணவாக எனக்கு கொடுத்தாள்!!!
என் மீது எப்போதும் கரிசனம் தான் அவளுக்கு....
கணவனை வரித்து நான் பொறந்ததாய் என்னிடம் கூறுவாள்!!!
என் நலன் குறித்து அவள் விசனபடுகையில் - அவள் நலனை
என்றும் அறியாள்!!
சவலை பிள்ளையாய் பிறந்தேனாம் அதையும் என்னிடமே சொல்லுவாள்..!
வாழ்கையில் எனக்கு அமைதியை கற்று தந்த அன்புள்ளம் அவள் தான்..!!
எல்லாவற்றுக்கும் மௌனத்தை மொழியாக சொன்னவள்!!!
நான் செய்யும் தவறுகளை தான் செய்ததாக நினைத்து
தன்னை வருத்தி கொள்வாள்!!!
தானத்தையும் நிதானத்தையும் எனக்கு கற்று கொடுத்தது அவள்தான்....!!
எனக்குள்ள எல்லா குணங்களும் அவளிடம் இருந்து தான்  இங்கே சங்கமித்தன !!
என் மனதில் ஒரே ஒரு ஆசை தான் !!!
 வயோதிகம் அவளை தாக்கும்போது - பூமியாக
நான் இருந்து தாங்க வேண்டும்--
அவள் தலை வைத்து படுக்க வசதியாக என் மடியை பூமெத்தை ஆக்கி
அவள் களிப்புற தூங்க தாலாட்டு பாட வேண்டும்!!!
சிறுவயதில் நான் செய்த குறும்புகளை எல்லாம் சகித்து
என் அறிவை வளர்த்து எனக்கு வாழ்வு தந்த தெய்வமே
உன்னை எப்படி பாராட்டுவது ??
போற்றி பாடி உன் புகழ் இவ்வையகம் பரவ
இந்த சேய் பெற்ற தாய் நீதான் என்று உன்னை பெருமை படுத்தி பார்க்க
ஆவலாய் உள்ளேன்!!!
தாமரையை பேராய் கொண்டவளே!!!
அம்மா என்ற அழைப்புக்கு
அவதாரம் தந்தவளே...
உன் அடி பணிந்தேன்....
சரணம் கோடி அம்மா....

1 Response to "அன்னை"

  1. kargil Jay Says:

    my eyes were filled with tears.. we always die indebted (to our mom)