என் வாழ்வின் சில பக்கங்கள் 


என் கடந்த கால நாட்குறிப்பை பொரட்டி பார்த்தேன்...
வருடங்கள் ஞாபகம் இல்லை...!!
ஆனாலும் அது சந்தோஷ தருணங்கள் போலும்....!!!
எப்போதும் நம் கடந்த காலத்தின் நிகழ்வுகள்,,,
நிகழ காலத்தின் தொடர் கதையாய்....!!!
நம்மை ஏதோ ஒரு ரூபத்தில் தொடர்ந்து
நம்முள் ஒரு நினைவு விதையை விதைத்து விட்டு
விலகி செல்கிறது...!!
எங்கோ கேட்கும் பாடல் கூட
நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்..!!

தொடர்பு விட்டு போன நண்பனின் தொலைபேசி எண்கள்...!!
தொலைந்து போனதாய் நான் கருதும் என்னுடைய
வங்கியின் ரகசிய குறியீடு எண்கள்...!!
வர வேண்டிய வரவுகள்...!
கொடுக்கவேண்டிய தொகைகள்...!!
இப்படி சொல்லிகொண்டே போகலாம்!!!
சந்தோசம் என்னும் வார்த்தைக்கு அப்படி
என்னை ஒரு மாயம் இருக்கிறது...!!
அவ்வார்த்தையை உச்சரிக்கும்போதே
அளவிலா ஆனந்தம் அடைகிறேன்!!!
வாழ்வின் நிதர்சனமான என்று ...!!
எதுவும் கிடையாது...!!!
எல்லாமே மாயை தான்!!!
இப்படியெல்லாம்  நாடகம் அரேங்கேறிருக்கிறது...!
கொடுத்தவை எல்லாம்    இங்கிருந்து எடுத்தவைதான்....!!!
எடுத்தவை எல்லாம்   இங்கிருந்து கொடுத்தவை தான்!!!
உலகம் ஒரு நாடமேடை தானே???
நன்றாய் நடிப்பவரின் நாடி ஒரு நாள்

அவரிடம் சொல்லாமல் தான் போகபோகிறது..!!
அன்னபட்சியாய் இருக்க பார்க்கிறேன்..!!
பாகுபடுத்தி பார்த்து அதிலிருந்து...!!
பாசத்தை மட்டுமே நேசிக்கிறேன்...
நலம் விரும்பிகள் இருக்கலாம்...!!
நட்டாற்றில் விட்டு சென்ற நண்பனும் இருக்கலாம்!!
உதட்டில் புன்னகை சிந்தி உள்ளத்தில் விஷம் கொண்ட
உறவாகவும் இருக்கலாம்!!!
இதுவும் கடந்து போகும் என்று
உளமார நினைத்துவிட்டால்...
உள்ளத்தில் உயர்ந்துவிடுவாய்!!!
உன்னை அறிந்து கொள்....
உனக்குள் இருக்கும் ரகசியம்...!!!
உன்னுடனே உறங்கட்டும்...!!
உரக்க சொல்லிவிடாதே....
உலகம் உன்னை பரிகாசிக்கும்....!!!
பூட்டி வைத்துகொள் யார் தட்டினாலும்
திறந்துவிடாதே...!!!
ரகசியங்கள் ...ரகசியமாய்
இருக்கும்வரை தான் நன்று...!!
அதை செய்தி ஆக்கிவிடாதே...!!


1 Response to " "

  1. hemikrish Says:

    mikavum arumai....azhagana varikal....