மழை



மழை 

நினைவு தெரிந்த நாளிலிருந்து மழைக்கும் எனக்குமான உறவு...!!
நெடிய தொரு பயணம் போல...!!!
மழை துளி சட்டையில் கோலம் போட்டு...என்
மேனியை நனைக்கும் போது எனக்குள் சொல்ல முடியா உவகை ...!!
அதுவும் மிதிவண்டியில் பயணிக்கையில் ......
அளவிலா சந்தோசம் தான்...!!!
அடை மழையாய் இருந்தாலும் சரி..!
ஆலங்கட்டி மழையாய் இருந்தாலும் சரி!!!
எனக்கு சம்மதமே...!!!
என் அனுமதி இல்லாது என்னை தீண்டும் உரிமை
மழைக்கு மட்டுமே ....!!!
என் காதலி என்னை தொடுவதற்கு நாணுவாள்....!!! ஆனால்
மழை காதலி என்னை ஆலிங்கனம் செய்து
என்னை முழுமையாய் தழுவி விளையாடுவாள்....!!!!
ஆதலினால் காதலியுங்கள் .....மழையை....!!!!
தொப்பல் தொப்பலாக நனைந்து வீட்டுற்குள் செல்லுகையில் ...!!
இன்னும் கொஞ்சம் நனையலாமே  என்று என் மனம்
என்னிடம் கெஞ்சும் அவலம் ....நினைக்கையில் ....
எனக்கே சிரிப்பாகத்தான் தோன்றும்....!!!!
மழை விட்டாலும் விடாத  தூவானமாக...!!
ஏதாவது ஒரு மரத்தின் கீழ் நின்று பாருங்களேன்...!!
யாரையாவது கொஞ்சம் மரத்தை அசைக்க சொல்லுங்களேன்..!!
காற்று சில சமயம் அவ்வேலையை செவ்வனே செய்யும்!!!!
உங்கள் மனதில் உற்சாகம் உங்களாலே வர்ணிக்க முடியாதே!!!
வாழ்வின் சிறு சிறு சந்தோசங்கள் இது போல தான்...!!!
நம் அடி மனதில் இருக்கும்....
ஏர் கொண்டு கிளறுங்கள் .....

நீங்கள் அறியாது
நீங்களே மழையோடு போட்டி போட்டு
உங்களை நனைத்து கொள்விர்கள்...!!!
இதுவரை அப்படி இல்லை என்றால்....
ஒரு முறை அதை முயற்சி பண்ணுங்கள்...!!
அதை நான் அனுபவித்தது போல்...
நீங்களும் மழை கவிதை அழகாய் கோலம் போடுவீர்கள்..!!!





2 Response to "மழை"

  1. hemikrish Says:

    nalla oru karpanai..keep writing...

  2. Janani Says:

    Kavidhai varigal padikkumbothe mazhaiyill nanaintha Paravasam thanthadhu.........."MAZHAI" en kadhali-varigal arumai........