இந்தியா ஒளி(ர்)கிறது


இந்தியா ஒளி(ர்)கிறது
சமவெளி பகுதியில் போனதுண்டா...
ஒத்தயடி பாதை கேள்விப்பட்டதுண்டா?
கிராமங்களில் இன்னும் பஸ் வசதி இல்லா
இல்லங்களும் இருக்கிறது...?
மின்சாரத்தை காணாத சுப்பனும் இருக்கிறான்!!
கணினி காலம் வந்தாலும் எங்களுக்கு
கால் வயிறு கஞ்சி தான்!!!
இந்தியா!! கிராமங்களில் தான் வாழ்வதாக
வாழ்ந்து போன தேச தந்தை காந்தி மகான்
வாழ்த்தி விட்டு போனார்!!!

கிராமங்களில் நாங்கள் உழைப்பதால்
நகரங்கள் நன்றாகவே ஒளிர்கிறது...!!!!
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை
தண்ணீருக்கு போராடி போராடி
கண்ணீரை தான் பாய்ச்சலுக்கு அனுப்புகிறது!!!
விளைச்சல் மட்டும் வரவில்லை என குறை !!!
விலை வாசி  தினம் பட்டியலில் .....!!!
பொருட்கள் படிப்பதற்கே அன்றி
வாங்குவதற்கு அல்ல!!!
இந்தியா ஒளிர்கிறது என்று சொன்னால்
எப்படி??

1 Response to "இந்தியா ஒளி(ர்)கிறது"

  1. hemikrish Says:

    nalla oru thought ..arumai..