உலக நாயகன்


உலக  நாயகன்  
கருவறை இவனுக்கு நாடக மேடை...
கருவில் இருந்த சிசு நடனம் ஆடியதால்
கருவை சுமந்த தாய் பெருமிதம் அடைந்தாள் ...
கலைக்கு இவனே அதிபதி ஆவான் என்று
கமல் ஹாசன் என்று நாமம் சூட்டினாள்....
கல்வி கற்க பள்ளி சாலைக்கு போகும் சமயம்...
கலையை கற்க இவன் நாடக சாலைக்கு போனான்...
களத்தூர் கண்ணம்மா இவன் முதல் பிரவேசம்...
காண்பவர் எல்லாம் களிப்புற சாகசம் செய்தான்..
கலைக்கே இவன் புது அரிதாரம் பூசினான்!!
கலைத்தாய் இவனுக்கு அன்றே மகுடம் சூட்டினாள்...
கலையும் செருக்கும் ஒன்றென இருக்கும் என்பர்...
கலையை மட்டுமே இவன் கையாள்கிறான்...
கலைஞானி என்று வசிஷ்டர் வாயால் பிரம்மா ரிஷி....
கலைஞர் இவனுக்கு அளித்த காசோலை...
கதை கவிதை கருத்து என இவனுக்கு பன் முகம் உண்டு...
காலங்கள் மாறினாலும் கலைகள் அழிவதில்லை.....
கமல் ஹாசன் தனக்கென அடையாளத்தை
கருத்துடன் செதுக்கி விட்டான்...
கலையே இவனிடம் இனி கற்பதற்கு இல்லை என
கையை விரிக்கும் வரை இவன் கற்பதை நிறுத்த மாட்டான்...
கலையை இவன் தெய்வமாக பார்ப்பதால்
கரிசனம் கொஞ்சம் அதிகம் தான்....
கற்றோர் சபையில் இவன் ஒரு பல்கலை கழகம் .....
கற்பதற்கு இவனிடம் உள்ளது ஏராளம்..
காரணம் இவனிடம் இருக்கும் ஆர்வம்....!
காண கிடைக்காத ஒன்று இவுலகில் உண்டு எனில் - அது
கமல் ஹாசன் என்று நான் கூறுவேன்..
ஆயிரம் முறை தோற்றாலும்
அடுத்த முறை நிச்சயம் ஜெயிப்பேன் என்று
அகங்காரம் இல்லாது கூறுவான்....
அடுத்த தலைமுறைக்கு இவன் ஒரு
எடுத்து காட்டு...
இவன் காலத்தில் பயணித்தேன் என்பதே
எனக்கு கிடைத்த பெரும் பேறு......

ஒவ்வொரு தடையும் இவன் படிகற்களாய்  
மாற்றியே உயரம் ஏறுகிறான் 
மதத்தை பிடித்த மதத்தை மிதிக்கிறான் 
ஜாதிமத பேதமெல்லாம் சாபமாய் 
மனிதமாய் மலர்வதே வரமாய் 
நல்லுறவை நாடும் வல்லூராய் 
வானம் பறக்கிறான் .....!!!!

1 Response to "உலக நாயகன்"

  1. kalai Says:

    கமல் நடிப்பு துறைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் .......
    அவரது புகழை கொஞ்சும் தமிழில் அழகு படுத்தி இருகிண்டிர்கள்