உதிர்ந்த இலை



உதிர்ந்த இலை

இலையுதிர்காலம்  தொடங்கும் சமயம்
மரத்தின் அருகில் சென்று இருக்கீர்களா??
உதிர்ந்து போன இலைகள் தங்கள்
உயிரை மரத்திற்கு உரமாய் தந்து விட்டு தான் போகிறது!!!

காய்ந்து போயிருந்தாலும் எருவாய் உருமாறும் அதிசயம்!!!
மக்கி போய் மண்ணோடு மண்ணாக ....
அடையாளம் தெரியாது போனாலும்...!!!
அழியும்போதும் அதன் அடையாளைத்தை - மரத்தின்
அடியில் தான் விட்டு போகிறது...!!!
மரம் பட்டு துளிர்வது இப்படிதான் போலும்!!!
உயிர் விடும் ஓலம் கேட்டு இருக்கீர்களா??
காற்று அடிக்கும்போது கேட்டு பாருங்கள்...!!
அதன் நுண்ணிய ஓசை உங்களுக்கு கேட்கும்!!!
மரத்தின் மீது அதற்கு இருக்கும் பற்று ....!!!
பாசத்தை கூட இவ்வளவு எளிதாக நமக்கு
புரிய வைத்துவிட்டுத்தான் போகிறது...!!!
உதிரும் இலையை  இனிமேல் குப்பையாய்
ஒதுக்காதீர்கள்...!!!
மரங்கள் அழும் ஓசை உங்களுக்கு
புரியலையா??


2 Response to "உதிர்ந்த இலை"

  1. hemikrish Says:

    ha ha....nice feel.....ithu kathaikkum kavithaikkum naduvula irunthalum nalla oru feel irukku

  2. Janani Says:

    so sad.....but what to do...???????pirappu irundhal irappu enpadhu kandippaga irukkum......ithil maram enna...manidhan enna.....idhu thane eiyarkai niyathi...???